கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட நீரின் அளவு தற்போது 2500 கனஅடியாக உயர்ந்துள்ளது.
நேற்று முன்தினம், காவிரி மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியத்தலின் பேரில் கர்நாடக முதல்வர் குமாரசாமி உத்தரவின்படி காவிரியில் நீர் திறக்கப்பட்டது. அதன்படி கபினி அணையிலிருந்து விநாடிக்கு 500 கனஅடி நீரும், கே.ஆர்.எஸ் அணையிலிருந்து 355 கனஅடி நீரும் திறக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு மழைப்பொழிவு அதிகரித்துள்ளதால் நீர் திறப்பு அளவு தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.
கபினி அணையில் அதே 500 கனஅடி நீர்தான் வெளியேற்றப்படுகிறது, கே.ஆர்.எஸ் அணையிலிருந்து தற்போது 2000 கனஅடி என நீர் திறப்பு அதிகரித்துள்ளது. இதனால் மொத்தம் 2500 கனஅடி நீர் காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது.