Skip to main content

முல்லை பெரியாறு அணையிலிருந்து மதுரைக்கு குழாய் மூலம் தண்ணீர்! தேனி விவசாயிகள் எதிர்ப்பு!!

Published on 18/09/2020 | Edited on 18/09/2020

 

Water from Mullai Periyar Dam to Madurai through pipe line! Theni farmers protest !!

 

 

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து குழாய் மூலம் மதுரைக்கு தண்ணீர் கொண்டுசெல்ல தேனி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துவருவதுடன் மட்டுமல்லாமல் போராட்டம் நடத்தவும் தயாராகி வருகிறார்கள்.

 

தமிழக கேரளா எல்லையில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணை மூலம் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயனடைந்துவருகின்றனர். மேலும் தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்ட குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. 152 அடி உயரம் உள்ள முல்லைப் பெரியாறு அணையில் உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி தற்போது 142 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. இந்த அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் இரு போகம் நெல் விவசாயம் செய்யப்படுகிறது. முதல்போக பாசனத்துக்கு தண்ணீர் ஜூன் மாதம் முதல் வாரத்தில் திறக்கப்படும் நிலையில் பருவமழை தாமதம் ஆனதான் காரணமாக கடந்த சில வருடங்களாகவே ஜூலை மாதத்தில்தான் தண்ணீர் திறக்கப்படுகிறது. 

 

மதுரை மாநகர குடிநீருக்காக வைகை அணையில் இருந்து தற்போது தினசரி 72 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் குறையும்போது முல்லை பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு நீர்மட்டம் உயர்த்தப்படுகிறது. இந்த நிலையில் அதிகரித்துவரும் மதுரை மாநகர மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டும் லோயர் கேம்பில் இருந்து ராட்ச குழாய் அமைக்கப்பட்டு ஆண்டிபட்டி வழியாக மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக கடந்த சில மாதங்களாகவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, அதற்கான பணிகளை தொடங்கி வருகின்றனர்.

 

இதற்கான மதிப்பீடு நிதியும் ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்க உள்ளன. ஆனால், இதற்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வரும் முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் இது குறித்து ஆலோசனை கூட்டத்தை நடத்தினர். ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் எடுத்து சென்றால் தேனி மாவட்டத்திற்கு குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படும் மேலும் மற்ற மாவட்ட விவசாயிகளும் பாதிக்கப்படுவார்கள் குறைந்த காலத்திற்கு மட்டும் இத்திட்டம் செயல்படுத்துவதற்காக அதிகாரிகள் தெரிவிப்பதால்  இதற்கான தொகையும் வீணாகும் சூழல் உள்ளது. எனவே இதனை அரசு கைவிட வேண்டும் இல்லை என்றால் விவசாயிகளை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர். ஏற்கனவே இத்திட்டத்தை கண்டித்து தேனி மாவட்டம் முழுவதும் விவசாயிகள் சங்கத்தினர் கண்டன சுவரொட்டி ஒட்டி தங்கள் எதிர்ப்பையும் தெரிவித்துவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

டி.டி.வி. தினகரனின் வேட்புமனு ஒரு மணி நேரம் நிறுத்திவைப்பு!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TTV Dhinakaran nomination is on hold for an hour

தேனி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை குறித்த கூட்டம் தேனி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா தலைமையில் அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்டு நடைபெற்றது.

தேனி நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 43 பேர் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இதில் 33வது எண்ணில் வந்த டி.டி.வி. தினகரனின் வேட்பு மனுவிற்கு திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தல் ஆணையம் இணையதளத்தில் காலை 11.30 மணி வரை டிடிவி தினகரனின் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படாததால் அதில் உள்ள விவரங்கள் சரி பார்க்க முடியாததால் அவரின் வேட்புமனுவை நிறுத்தி வைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். இதனால் அமமுக கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று டிடிவி தினகரன் வேட்பு மனு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதனை சரிபார்க்க எதிர்க்கட்சிகளுக்கு ஒரு மணி நேரம் கால அவகாசம் கொடுக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ஷஜீவனா தெரிவித்தார். இதனால் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் பரபரப்பு இருந்து வருகிறது.