Skip to main content

வீடு தேடி செல்லும் தண்ணீர் – பிரதான கட்சிகளை மிரள வைத்த ரஜினி மக்கள் மன்றம்

Published on 24/06/2019 | Edited on 24/06/2019

 

ரஜினி மக்கள் மன்றத்தின் வேலூர் மாவட்ட செயலாளர் என்.ரவி, 1500 பெண்கள் உள்பட 2 ஆயிரம் பேரை திரட்டி சோளிங்கரில் 'கண்ணீரை தவிர்க்க தண்ணீரை சேமிப்போம்' என்கிற தலைப்பில் ஜீன் 23ந் தேதி மிப்பெரிய ஊர்வலத்தை நடத்தினார். 

 

Vellore



இந்த ஊர்வலத்தில் நாட்டுப்புற நடனங்கள் மூலம் தண்ணீர் தேவை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஊர்வலத்தில் வீதிக்கு வீதி மரம் வளர்ப்போம், வீட்டுக்கு வீடு மழை நீர் சேகரிப்போம் என்கிற வாசகங்கள் அடங்கிய தட்டி பிடித்தப்படி விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.


ஊர்வலத்துக்கு பின்னர், 'வீடு தேடி வரும் தண்ணீர்' என்கிற பெயரில் ரஜினி மக்கள் மன்றம் தினமும் ஒவ்வொரு வீட்டுக்கும் 25 லிட்டர் கேன் தண்ணீரை இலவசமாக வழங்கும் நிகழ்வை தொடங்கிவைத்தது. அதோடு, தினமும் 5 ஆயிரம் லிட்டர் கொண்ட தண்ணீர் லாரி, தண்ணீர் இல்லை எனச்சொல்லப்படும் பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் செல்லும். மக்கள் தேவையான தண்ணீரை பிடித்துக்கொண்டு அதனை அடுத்தப் பகுதிக்கு அனுப்ப வேண்டும் என திட்டமிட்டு சொந்தமாக ஒரு தண்ணீர் லாரியை வாங்கி மக்கள் பயன்பாட்டுக்கு விட்ட நிகழ்வும் நடைபெற்றது.


 

 

Vellore



பிரதான கட்சிகள் மிரளும் அளவுக்கு மக்கள் திரள், தண்ணீர் வழங்குவது போன்றவற்றில் ஈடுப்பட்டுள்ள ரஜினி மக்கள் மன்றத்தின் மா.செ. சோளிங்கர் ரவியிடம் பேசியபோது, தண்ணீர் தரவில்லை என குற்றம்சாட்டுவதற்கு பதில், நீர் உற்பத்திக்கும், மேலாண்மைக்கும் மக்களாகிய நாம் என்ன செய்கிறோம் என்பதே முக்கியம். மரம் வளர்ப்பது, மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைப்பது, சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்துவது, பாதுகாப்பான குடிநீர் போன்ற பிரச்சாரங்கள் மூலம் நீர் சேமிக்க முடியும். இதன் மூலம் வருங்கால தலைமுறைக்கு நாம் நல்ல வாழ்க்கையை அமைத்து தர முடியும். நாமும் தண்ணீரில் இல்லையே என நிகழ்காலத்தில் கண்ணீர் விடாமல் மகிழ்ச்சியாக வாழலாம். அதற்காக தான் விழிப்புணர்வு ஊர்வலமாக மன்றத்தின் சார்பில் நடத்தினோம்.

 

Vellore



மாற்றம் என்பது திணித்தால் வராது, அவர்கள் உணர்ந்தால் மட்டுமே அது சாத்தியம். அதனால் தான் மக்களிடம் செல்லலாம் என திட்டமிட்டு செயலாற்றுகிறோம். நிச்சயம் மக்கள் மனதில் மாற்றம் ஏற்படும். சிக்கனமாக நீரை பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தியதை அவர்கள் கடைப்பிடிப்பார்கள். அதேபோல் விழிப்புணர்வோடு நின்றுவிடக்கூடாது என்பதால் தற்காலிகமாக இலவச குடிநீர் மற்றும் லாரிகளில் தண்ணீர் வழங்குகிறோம். எங்களால் முடிந்தவரை வழங்குவோம் என்றார்.
 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

லாரி ஏறியதால் பெண் தலைமை காவலர் பரிதாபமாக உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Female head constable passed away in lorry collision

வேலூர் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மனைவி பரிமளா (42) இவர் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஏப்ரல் 17 ஆம் தேதி தேர்தல் பணிக்காக திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு மாலை வீட்டுக்கு புறப்பட்டார்.

திருப்பத்தூரில் இருந்து மாதனூர் வரை பேருந்தில் சென்றுள்ளார். மாதனூரில் இருந்து தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, மாதனூர்- ஒடுகத்தூர் சாலையில் தாகூர் பள்ளி அருகில் ஆட்டோ ஒன்று குறுக்கே வந்ததால் சட்டென்று பிரேக் அடித்துள்ளார். அப்போது பின்னால் உட்கார்ந்து இருந்த பெண் தலைமை காவலர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒடுகத்தூரில் இருந்து மாதனூர் நோக்கி வந்த லாரி தலைமை காவலர் பரிமளா மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கிய நிலையில்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். படுகாயமடைந்த பெண் தலைமை காவலரின் கணவர் தட்சிணாமூர்த்தி மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பழுதான லோடு ஆட்டோவை சாலையோரம் நிறுத்தி விபத்து ஏற்பட காரணமாக இருந்த ஒர்க் ஷாப் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அரசு மருத்துவமனையில் விபத்து குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த தலைமை காவலர் பரிமளாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இது காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள்  மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story

கடும் வெயிலில் போக்குவரத்தை சரி செய்யும் முதியவர்!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
 old man fixing the traffic in the hot sun

சமீபகாலமாக வேலூரில் நூறு டிகிரியை தாண்டிய வெயில் 106.4 டிகிரி வரை வெயில் பொதுமக்களை வாட்டி வரும் நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சில்க் மில் பேருந்து நிலையத்தில் நான்கு முனை சந்திப்பு சாலையில் வாகனங்கள் கரடுமுரடாக சென்று கொண்டிருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுபோன்ற சிக்னல்களில் மதிய நேரத்தில் வெய்யிலின் தாக்கத்தால் போக்குவரத்து காவலர்கள் பணி செய்வதில்லை. சுடும் வெயிலில் நிற்க முடியாமல் வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளை மீறி வேகமாக செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனைப் பார்த்த அந்தப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர், சாலையின் மையத்துக்கு சென்று ஒவ்வொரு புறத்தில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து காவலரைப்போல் வழியனுப்பும் காட்சி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது. வாகன ஓட்டிகளும் போக்குவரத்தை சரி செய்ய முயலும் முதியவருக்கு மரியாதை கொடுத்து வாகனங்களை நிறுத்தி, அதன் பிறகு சென்றனர். இதனால் சிலமணி நேரம் போக்குவரத்து நெரிசல் இல்லாத நிலை ஏற்பட்டது.