Skip to main content

வீடு தேடி செல்லும் தண்ணீர் – பிரதான கட்சிகளை மிரள வைத்த ரஜினி மக்கள் மன்றம்

Published on 24/06/2019 | Edited on 24/06/2019

 

ரஜினி மக்கள் மன்றத்தின் வேலூர் மாவட்ட செயலாளர் என்.ரவி, 1500 பெண்கள் உள்பட 2 ஆயிரம் பேரை திரட்டி சோளிங்கரில் 'கண்ணீரை தவிர்க்க தண்ணீரை சேமிப்போம்' என்கிற தலைப்பில் ஜீன் 23ந் தேதி மிப்பெரிய ஊர்வலத்தை நடத்தினார். 

 

Vellore



இந்த ஊர்வலத்தில் நாட்டுப்புற நடனங்கள் மூலம் தண்ணீர் தேவை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஊர்வலத்தில் வீதிக்கு வீதி மரம் வளர்ப்போம், வீட்டுக்கு வீடு மழை நீர் சேகரிப்போம் என்கிற வாசகங்கள் அடங்கிய தட்டி பிடித்தப்படி விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.


ஊர்வலத்துக்கு பின்னர், 'வீடு தேடி வரும் தண்ணீர்' என்கிற பெயரில் ரஜினி மக்கள் மன்றம் தினமும் ஒவ்வொரு வீட்டுக்கும் 25 லிட்டர் கேன் தண்ணீரை இலவசமாக வழங்கும் நிகழ்வை தொடங்கிவைத்தது. அதோடு, தினமும் 5 ஆயிரம் லிட்டர் கொண்ட தண்ணீர் லாரி, தண்ணீர் இல்லை எனச்சொல்லப்படும் பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் செல்லும். மக்கள் தேவையான தண்ணீரை பிடித்துக்கொண்டு அதனை அடுத்தப் பகுதிக்கு அனுப்ப வேண்டும் என திட்டமிட்டு சொந்தமாக ஒரு தண்ணீர் லாரியை வாங்கி மக்கள் பயன்பாட்டுக்கு விட்ட நிகழ்வும் நடைபெற்றது.


 

 

Vellore



பிரதான கட்சிகள் மிரளும் அளவுக்கு மக்கள் திரள், தண்ணீர் வழங்குவது போன்றவற்றில் ஈடுப்பட்டுள்ள ரஜினி மக்கள் மன்றத்தின் மா.செ. சோளிங்கர் ரவியிடம் பேசியபோது, தண்ணீர் தரவில்லை என குற்றம்சாட்டுவதற்கு பதில், நீர் உற்பத்திக்கும், மேலாண்மைக்கும் மக்களாகிய நாம் என்ன செய்கிறோம் என்பதே முக்கியம். மரம் வளர்ப்பது, மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைப்பது, சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்துவது, பாதுகாப்பான குடிநீர் போன்ற பிரச்சாரங்கள் மூலம் நீர் சேமிக்க முடியும். இதன் மூலம் வருங்கால தலைமுறைக்கு நாம் நல்ல வாழ்க்கையை அமைத்து தர முடியும். நாமும் தண்ணீரில் இல்லையே என நிகழ்காலத்தில் கண்ணீர் விடாமல் மகிழ்ச்சியாக வாழலாம். அதற்காக தான் விழிப்புணர்வு ஊர்வலமாக மன்றத்தின் சார்பில் நடத்தினோம்.

 

Vellore



மாற்றம் என்பது திணித்தால் வராது, அவர்கள் உணர்ந்தால் மட்டுமே அது சாத்தியம். அதனால் தான் மக்களிடம் செல்லலாம் என திட்டமிட்டு செயலாற்றுகிறோம். நிச்சயம் மக்கள் மனதில் மாற்றம் ஏற்படும். சிக்கனமாக நீரை பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தியதை அவர்கள் கடைப்பிடிப்பார்கள். அதேபோல் விழிப்புணர்வோடு நின்றுவிடக்கூடாது என்பதால் தற்காலிகமாக இலவச குடிநீர் மற்றும் லாரிகளில் தண்ணீர் வழங்குகிறோம். எங்களால் முடிந்தவரை வழங்குவோம் என்றார்.
 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தண்ணீர் தேடிச் செல்லும் வன விலங்குகள் பலியாகும் துயரம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Tragedy of wild animals lost life in search of water

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்டதால் ஏரி, குளம், குட்டைகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் கால்நடைகளுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. அதேபோல தமிழ்நாடு முழுவதும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காடுகளிலும் தண்ணீர் இன்றி மரங்கள் கருகி வருவதுடன் வனவிலங்குகளும் தண்ணீர் இன்றி தவித்து வருகிறது.

இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகமாக உள்ள வனப்பரப்புகள் மற்றும் கீரமங்கலம் மற்றும் சேந்தன்குடி, குளமங்கலம், மேற்பனைக்காடு, நெய்வத்தளி உள்ளிட்ட பல கிராமங்களில் வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே பலமரக்காடுகள் அழிக்கப்பட்டு முந்திரி மற்றும் தைலமரக்காடுகளாக பராமரிக்கப்பட்டு வந்தது.

இதனால் பலமரக்காடுகளில் இருந்த முயல், மான், மயில்கள், குருவிகள், பறவைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. தற்போது தைலமரக்காடுகள் அழிக்கப்பட்டு முந்திரி மரக்காடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதனால் இந்தக் காடுகளில் வன உயிரினங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும் இந்தக் காடுகளில் உள்ள மான் போன்ற உயிரினங்கள் தண்ணீர் தேடி வெளியிடங்களுக்குச் செல்லும் போது நாய்களால் கடித்து குதறப்படுகிறது. அதேபோல தண்ணீர் தேடி சாலையைக் கடக்க முயலும்போது வாகனம் மோதி பலியாகிறது. இதேபோல புதுக்கோட்டை  மாவட்டத்தில் திருமயம், கீரமங்கலம் என மாவட்டம் முழுவதும் பல விபத்து சம்பவங்களில் மான்கள், மயில்கள் போன்ற உயிரினங்கள் பலியாகி வருகிறது. இதேபோல வியாழக்கிழமை கீரமங்கலம் பகுதியில் இருந்து தண்ணீர் தேடிச் சென்ற ஒரு மான் திசை மாறி பேராவூரணி பக்கம் சென்றுள்ளது. அந்த மானை பொதுமக்கள் பிடித்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

ஆகவே, கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் காடுகளில் சுற்றித்திரியும் பறவைகள், வன உயிரினங்களுக்கு இரையும், தண்ணீரும் கிடைக்காமல் தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் வரும் மயில், மான் போன்றவற்றை நாய்கள் கடிப்பதும், விபத்துகளில் சிக்கி பலியாவதும் தொடர்ந்து கொண்டிருப்பதால்  ஒவ்வொரு காட்டுப் பகுதியிலும் சில இடங்களில் கோடைக்காலம் முடியும் வரை தண்ணீர் தொட்டிகள் அமைத்து வன உயிரினங்களைப் பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் கிடைக்காமல் இப்படி வெளியில் வந்து விபத்துகளில் சிக்கி பலியாகிறது. ஆகவே வனத்துறை தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும். கோடை வெயிலில் தாகத்தில் தவிக்கும் மக்களுக்கு ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைப்பது போல வன உயிரினங்களின் தாகம் தீர்க்கவும் உயிர் காக்கவும் தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும் என்கின்றனர் இளைஞர்களும் விவசாயிகளும்.

மேலும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வனப்பகுதியில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டது சில நாட்கள் தண்ணீர் வைக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு தண்ணீர் வைத்து பராமரிப்பு செய்யவில்லை. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் JJ வடிவத்தில் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டிகளில் கூட தண்ணீர் இல்லை. வனவிலங்குகளை காக்க தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.