Skip to main content

நலிவடைந்து வரும் மீன்பிடி தொழில்; படகு பராமரிக்க மானியத்துடன் கடன் வேண்டும் மீனவர்கள் கோரிக்கை!

Published on 24/04/2019 | Edited on 24/04/2019

மீன்பிடி தடைக்காலம் துவங்கிவிட்டது, ஆனால் கஜாபுயலால் மீன் பிடித்தொழில் நலிவடைந்ததால் வருவாய் இழந்து வட்டிக்கு கடன் வாங்கி படகுகளை பழுது, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் மீனவர்கள். புதுச்சேரி அரசைப்போல் படகுகளை பழுது நீக்கம் செய்ய தமிழக அரசும் வங்கி கடன் மற்றும் மானிய தொகை வழங்க வேண்டும் என நாகை மாவட்ட மீனவர்கள் அரசுக்கு  வேண்டுகோள்  விடுத்துள்ளனர்.

 

fisherman

 

இது குறித்து நாகை மீனவர்கள் கூறுகையில், "கிழக்கு கடற்கரையில் மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15 முதல் ஜீன் 13 நள்ளிரவு வரையிலான 61 நாட்களை மீன் பிடித்தடைக்காலமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசும் இதற்காக 1983 ம் ஆண்டு கிழக்கு கடற்கரையில் தமிழ் நாடு கடல் மீன் பிடி ஒழுங்கு முறை சட்டம் கொண்டு வரப்பட்டு சென்னை திருவள்ளுவர் மாவட்டத்தில் இருந்து கன்னியாகுமரி வரையிலான தமிழகத்தின் கிழக்கு கடலோரப் பகுதிகளில் மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தி வருகிறது.

 

இந்த மீன் பிடிதடைக் காலங்களில் பெரிய இன்ஜின்கள் பொறுத்திய படகுகளையும், மற்றும் இழுவை வலைகளை பயன்படுத்தி மீன் பிடித் தொழில் செய்யும் விசைப்படகளையும், மீனவர்கள் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கம் செய்யும் பணிகளில் ஈடுபடுவார்கள். ஆனால் கஜா புயல் தாக்குதலால் மீன்பிடித் தொழிலுக்கு மிகவும் தாமதமாக சென்றோம், அதோடு மீன்பிடி தொழிலும் மந்தமாகிவிட்டது.

 

Wasting fishing industry; Fishermen to loan with subsidy to maintain boat

 

தொடரந்து இயற்கைப் பேரிடர்களில் சிக்கி மீனவர்களின் வருவாய் முற்றிலும் குறைந்தால் பலலட்ச ரூபாய் செலவு செய்ய முடியாமல் தங்களது படகுகளை சரிசெய்யமுடியாமல் துறைமுகத்தில் நிறுத்தி வைத்திருக்கிறோம்.

 

 

இன்ஜின் பழுது நீக்கம், படகுகளை சீரமைத்தல், வலைகள் மற்றும் மீன்பிடி சாதனைங்களை பழுது நீக்கம் செய்தல், படகுகளில் கடைசல் மற்றும் தச்சு வேலைபாடுகள், கீரிஸ் பூசூதல், வர்ணம் அடித்தல் போன்ற பணிகளை செய்வதற்கு ஒரு படகிற்கு 3 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை செலவு ஏற்படுகிறது. ஆனால், மீன்பிடி தொழிலில் ஏற்பட்டுள்ள நஷ்டம் காரணமாக நாகை மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்களும் இருக்கின்ற நிலையில் குறைந்த அளவிலான விசைப்படகு உரிமையாளர்கள் மட்டுமே தங்களது படகுகளை பழுது நீக்கம் செய்யும் பணிகளை தொடங்கி இருக்கின்றனர். அவர்களும் நகைகளை அடமானம் வைத்தும், கந்துவட்டிக்கு கடன் வாங்கியும் வேலைகளை தொடங்கியுள்ளோம்.

 

ஒரு விசைப்படகில் பழுது நீக்கம் செய்ய 10 நாட்கள் ஆகும் நிலையில், பொருளாதாரரீதியாக மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் பெரும்பான்மையானவர்கள் இதுவரை பணிகளை தொடங்காமலேயே இருக்கின்றனர்.  கடந்த சில ஆண்டுகளாக மீன் பிடித் தொழில் வருவாய் போதிய அளவு இல்லாத காரணத்தினால் கடன் வாங்கி பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் புதுச்சேரி அரசு மீனவர்களுக்கு மானியம் வழங்குவது போன்று தமிழக அரசும் வங்கி கடன் மற்றும் மானிய தொகை வழங்க வேண்டும்.

 

வருடா வருடம்  படகுகளை பழுது நீக்கம் செய்ய  அரசிடம் கோரிக்கைகள் வைத்தும், முறையிட்டும் இதுவரை எந்த அரசாங்கமும் கண்டுகொள்ளவில்லை என்பது வேதனை. இலங்கை கடற்படையினரால் தாக்குதல், கஜா புயல் போன்ற பல்வேறு இடர்பாடுகளில் சிக்கித்தவிக்கிறோம்." என்கிறார்கள்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Tamil Nadu fishermen incident for Sri Lanka Navy 

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. அதோடு படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் நேற்று காலை (08.04.2024) ராமேஸ்வரத்திலிருந்து 250 மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

அதன்படி ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து விட்டு இன்று (09.04.2024) அதிகாலை 3 மணியளவில் மீனவர்கள் கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது ராட்சத மின் விளக்கு ஒளியை வீசியுள்ளனர். மேலும் ஒலிபெருக்கி மூலம்,‘இங்கிருந்து வெளியேறுங்கள். இல்லையென்றால் உங்களைக் கைது செய்வோம்’ என எச்சரிக்கை செய்துள்ளனர். அதன் பின்னர் மீனவர்களின் பல லட்சம் மதிப்புள்ள படகுகள், மின் பிடி வலைகள் மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

அதே சமயம் இரும்பு கம்பியைக் கொண்டு மீனவர்கள் மீது தாக்குதல் இலங்கை கடற்படையினர் நடத்தியதாகவும், மீனவர்களின் வலைகளை அறுத்து வீசி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு மீனவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு மீனவருக்குத் தோள் மற்றும் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த 2 மீனவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்ப வழங்குவது சாத்தியமற்றது” - இலங்கை அமைச்சர் திட்டவட்டம்

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Sri Lankan Minister says Sri Lanka's marine resources are being destroyed by Indian fishermen

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன. இத்தகைய சூழலில் கச்சத்தீவு விவகாரத்தை பா.ஜ.க. தற்போது கையிலெடுத்து காங்கிரசையும், தி.மு.க.வையும் கடுமையாக விமர்சித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ் மற்றும் திமுக, ‘10 ஆண்டுகால ஆட்சியில் கச்சத்தீவை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?’ என பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி வருகிறது. 

இந்த நிலையில், கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து இலங்கை அமைச்சர் டக்ளஸ் கூறுகையில், “இந்திய மீனவர்கள் படகுகளைப் பயன்படுத்தி இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக மீன்பிடிக்க வருகின்றனர். இந்திய மீனவர்களால் இலங்கையின் கடல் வளம் அழிக்கப்படுகிறது. 

இந்தியாவில் தேர்தல் காலங்களில் கச்சத்தீவு பற்றிய கோரிக்கைகள் மற்றும் எதிர் உரிமைகோரல்களின் சத்தம் கேட்பது அசாதாரணமானது அல்ல. இலங்கை மீனவர்கள் அந்தப் பகுதிக்குள் நுழைய முடியாது என்பதையும், அந்த வளமான பகுதியில் இலங்கை எந்த உரிமையையும் கோரக்கூடாது என்பதையும் உறுதிப்படுத்துவதற்காக இந்தியா செயல்படுகிறது என்று நான் நினைக்கிறேன். இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்ப வழங்குவது என்பது சாத்தியமற்றது. எனவே, கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது. கச்சத்தீவை திரும்ப வழங்குவதாக இருந்தால் இலங்கையின் கடல்வளம் முற்றிலுமாக சூறையாடப்படும்” என்று கூறினார்.