Was the tiger illegally injected with anesthetic? - Wildlife activists question!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் தேவன்எஸ்டேட்பகுதியில் மக்களை அச்சுறுத்திவந்த 'டி23' புலியை21வதுநாளாக வனத்துறையினர் தேடிவருகிற நிலையில், மயக்க ஊசி செலுத்தப்பட்ட 'டி23' புலி தப்பித்துள்ளது. முன்னதாக 'டி23' இறந்திருக்கலாம் எனக் கருதிய வனத்துறை, உடலில் காயங்களுடன் சுற்றித்திரிந்த புலியை வனப்பகுதியை ஒட்டியுள்ள நீர்நிலைப் பகுதிகளில் தேடினர்.8நாட்களுக்குப் பிறகு கடந்த 12ஆம் தேதி ஒம்பெட்டா வனப்பகுதியில் கண்காணிக்க வைக்கப்பட்டஇமேஜ்ட்ராப்கேமராவில்அதிகாலை 3 மணிக்கு 'டி23' புலியின் உருவம் பதிவாகியது. இதனால் மீண்டும் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியது வனத்துறை.

Advertisment

இந்நிலையில் நேற்று (14.10.2021) இரவு மசினகுடியிலிருந்துதெப்பக்காடுசெல்லும் வழியில் பழுதானவாகனத்தைச்சிலர் சரி செய்துகொண்டிருந்தனர். அப்போது அந்தவழியாகப்புலி ஒன்றுசாலையைக்கடப்பதைப்பார்த்தவர்கள்வனத்துறைக்குத்தகவல் கொடுத்தனர். இரவு 10 மணியளவில் வனத்துறையினரின்மருத்துவக்குழு சம்பவ இடத்திற்கு வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது புலிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. மயக்க ஊசி செலுத்தப்பட்ட பிறகும் புலி அடர்ந்த காட்டுப்பகுதிக்குள்சென்றதாகக்கூறப்படுகிறது. இதனையடுத்து, மசினகுடியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தஇரண்டுகும்கி யானைகள் உதவியுடன் புலி பதுங்கிய அடர் வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. காலை சுமார் 2 மணிவரை இந்த தேடுதல் வேட்டை நடந்தும்புலியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதன்பிறகு தேடுதல் வேட்டை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

alt="udanpirape" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="7bcde9e9-072e-4a52-a3d8-1bc158773695" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/udanpirappe-article-inside-500x300_76.jpg" />

Advertisment

இந்நிலையில், இந்த சம்பவத்தில் புலிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டதில் விதிமுறை மீறல் இருப்பதாக வனவிலங்கு ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி மாலை 6 மணிக்கு மேல் புலிக்கு மயக்க ஊசி செலுத்தக் கூடாது என்றவிதிஇருக்கிறது. அதனை மீறி இரவு 10 மணிக்கு வனத்துறை மயக்க ஊசி செலுத்தியது ஏன்எனக்கேள்வி எழுப்பியுள்ளனர் வனவிலங்கு ஆர்வலர்கள்.

மயக்க ஊசி செலுத்தப்பட்டதால் புலி சோர்வுடன் காணப்படும். இதனால் ஊர்மக்கள் வனப்பகுதிக்குள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட வேண்டாம் என வனத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.