அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளிடம் செல்போனில் பேசி தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயற்சித்த வழக்கில், ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் இன்று நிர்மலாதேவி ஆஜராகாத நிலையில், அவருக்குப் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார் நீதிபதி பரிமளா.

Advertisment

Warrant Again for Nirmaladevi

ஏற்கனவே ஒருதடவை, அதாவது கடந்த நவம்பர் 18-ஆம் தேதி நிர்மலாதேவிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, ஜாமின் பெற்று வெளிவந்தார் என்பதும், அவர் சார்பில் ஆஜராகி வந்த வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் இந்த வழக்கிலிருந்து விலகிவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisment

உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் இன்று ஆஜரான நிலையில், இவ்வழக்கு பிப்ரவரி 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.