Skip to main content

பிரபல ரவுடி நீதிமன்றத்தில் 'சரண்'!

Published on 23/02/2021 | Edited on 23/02/2021

 

Wanted person Raja surrenders in salem district court

 

பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட பிரபல ரவுடி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். தமிழகம் முழுவதும் உள்ள பிரபல ரவுடிகளுடன் நட்பு வைத்துக்கொண்டு தமிழகத்தின் பிற இடங்களுக்கும் சென்று கட்டப்பஞ்சாயத்து, ஆள்கடத்தல் போன்ற விவகாரங்களில் ஈடுபடுவதாக வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி அடுத்த வசூர் பகுதியைச் சேர்ந்த 35 வயதான ராஜா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளது. இவர் மீது வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, சித்தூர் உட்பட பல மாவட்டங்களில் கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல், தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்தல், கட்டப்பஞ்சாயத்து உட்பட பல வழக்குகள் உள்ளன.

 

இந்த வழக்குகளில் சிலவற்றில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்துள்ளார் ராஜா. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறையிலிருந்து முன்ஜாமீன் பெற்று வெளியே வந்த ரவுடி வசூர் ராஜா, தலைமறைவானார். சாட்டிலைட் ஃபோன் மற்றும் வாட்ஸ் அப் கால்களில் வேலூரைச் சேர்ந்த தொழிலதிபர்களை மிரட்டி பணம் பெற்று சொகுசாக வாழ்ந்துவந்தார்.

 

இந்நிலையில் ராஜாவை பிடிப்பதற்காக வேலூர் மாவட்ட காவல்துறையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்தார். அப்பொழுதும் போலீசாரிடம் வந்து சரண்டர் ஆகவில்லை. ராஜாவின் குடும்பத்துக்கு காவல்துறை கடுமையான நெருக்கடிகளை தந்தது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 22ஆம் தேதி காலை 11 மணி அளவில் சேலம் மாவட்டம், ஆத்தூரில் உள்ள நடுவர் நீதிமன்றத்தில் வசூர் ராஜா சரணடைந்தார். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

வசூர் ராஜா சரணடைந்த தகவலை வேலூர் மாவட்ட காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து மற்ற வழக்குகளில் கைது செய்தும் வேறு சில வழக்குகளில் விசாரணை நடத்தவும் முடிவுசெய்து வேலூர் மாவட்ட தனிப்படை போலீசார் சேலம் சென்றுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

லாரி ஏறியதால் பெண் தலைமை காவலர் பரிதாபமாக உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Female head constable passed away in lorry collision

வேலூர் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மனைவி பரிமளா (42) இவர் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஏப்ரல் 17 ஆம் தேதி தேர்தல் பணிக்காக திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு மாலை வீட்டுக்கு புறப்பட்டார்.

திருப்பத்தூரில் இருந்து மாதனூர் வரை பேருந்தில் சென்றுள்ளார். மாதனூரில் இருந்து தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, மாதனூர்- ஒடுகத்தூர் சாலையில் தாகூர் பள்ளி அருகில் ஆட்டோ ஒன்று குறுக்கே வந்ததால் சட்டென்று பிரேக் அடித்துள்ளார். அப்போது பின்னால் உட்கார்ந்து இருந்த பெண் தலைமை காவலர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒடுகத்தூரில் இருந்து மாதனூர் நோக்கி வந்த லாரி தலைமை காவலர் பரிமளா மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கிய நிலையில்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். படுகாயமடைந்த பெண் தலைமை காவலரின் கணவர் தட்சிணாமூர்த்தி மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பழுதான லோடு ஆட்டோவை சாலையோரம் நிறுத்தி விபத்து ஏற்பட காரணமாக இருந்த ஒர்க் ஷாப் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அரசு மருத்துவமனையில் விபத்து குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த தலைமை காவலர் பரிமளாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இது காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள்  மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story

கடும் வெயிலில் போக்குவரத்தை சரி செய்யும் முதியவர்!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
 old man fixing the traffic in the hot sun

சமீபகாலமாக வேலூரில் நூறு டிகிரியை தாண்டிய வெயில் 106.4 டிகிரி வரை வெயில் பொதுமக்களை வாட்டி வரும் நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சில்க் மில் பேருந்து நிலையத்தில் நான்கு முனை சந்திப்பு சாலையில் வாகனங்கள் கரடுமுரடாக சென்று கொண்டிருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுபோன்ற சிக்னல்களில் மதிய நேரத்தில் வெய்யிலின் தாக்கத்தால் போக்குவரத்து காவலர்கள் பணி செய்வதில்லை. சுடும் வெயிலில் நிற்க முடியாமல் வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளை மீறி வேகமாக செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனைப் பார்த்த அந்தப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர், சாலையின் மையத்துக்கு சென்று ஒவ்வொரு புறத்தில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து காவலரைப்போல் வழியனுப்பும் காட்சி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது. வாகன ஓட்டிகளும் போக்குவரத்தை சரி செய்ய முயலும் முதியவருக்கு மரியாதை கொடுத்து வாகனங்களை நிறுத்தி, அதன் பிறகு சென்றனர். இதனால் சிலமணி நேரம் போக்குவரத்து நெரிசல் இல்லாத நிலை ஏற்பட்டது.