Skip to main content

தனித்தொகுதி மாறவேண்டுமா...? நோட்டாவிற்கு வாக்களியுங்கள்.. பிரச்சாரத்தில் இறங்கிய விவசாய அமைப்பு

Published on 12/05/2019 | Edited on 12/05/2019

நீண்ட நெடுங்காலமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தனித்தொகுதியாகவுள்ள ஒட்டப்பிடாரம், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிகளையும், தென்காசி பாராளுமன்றத் தொகுதியையும் பொதுத் தொகுதியாக மாற்றவேண்டும் எனில் ஒட்டப்பிடாரம் தனித்தொகுதியில் நோட்டாவிற்கு வாக்களியுங்கள் என விவசாயிகள் அமைப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

election

 

இதுக்குறித்து நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மருதங்கிணறு கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் அமைப்பின் முத்துப்பாண்டியோ, " இந்தியா சுதந்திரம் அடைந்து 72ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்தியாவில் உள்ள சட்டமன்ற மற்றும் நாடளுமன்ற தனித்தொகுதிகள் 10 ஆண்டுகளுக்கு முன் சுழற்சி முறையில் பொதுதொகுதிகளாக மாற்றப்பட்ட நிலையில் தமிழகத்தில் தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒட்டப்பிடாரம், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் ஆகிய சட்டமன்றதொகுதிகளும், தென்காசி பாராளுமன்ற தொகுதியும் நீண்ட காலமாக சுழற்சி முறையில் மாறாமல் உள்ளது. 

 

மேற்கண்ட தொகுதிகளில் உள்ள வாக்களிக்க தகுதியான பொதுபிரிவினர் மட்டும் இன்னும் சுதந்திரம் அடையாமல் உள்ளனர். மேற்கண்ட தொகுதிகள் பொதுதொகுதியாக மாற தற்போது நடைபெறும் ஒட்டப்பிடாரம் தனி தொகுதியில் உள்ள பொதுபிரிவு வாக்காளர்கள் சிந்தித்து வாக்களிக்கவேண்டும். ஒட்டப்பிடாரம் தொகுதியில் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களுக்கு 15 சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.  ஆகவே பொதுபிரிவு வாக்காளர்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்ற 16 வரிசையில் உள்ள பேலட் பட்டனில் 40 சதவிகித பொதுபிரிவு வாக்காளர்கள் வாக்களித்தால்  அடுத்த தேர்தலில் தனித்தொகுதிகள் அனைத்தும் பொது தொகுதியாக மாறும் வாய்ப்பு உள்ளது. இதனால் பொதுபிரிவு வாக்களர்களுக்கு தேர்தலில் வாய்ப்பு கிடைக்கும். 

 

 Want to switch to a separate block?  Vote for a nota...The agrarian system in the campaign

 

அதேபோல் இந்த தனித்தொகுதிகள் பொதுதொகுதியாக மாறும் போது ஏற்கனவே உள்ள பொதுதொகுதிகள் தனித்தொகுதியாக மாறும். அப்போது அந்த தொகுதிகளில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் தேர்தலில் போட்டியிடுகின்ற வாய்ப்பு கிடைக்கும். சுழற்சி முறையில் எல்லா தொகுதிகளும் மாற்றம் அடைந்தால் அனைத்து பிரிவினரும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிலாம் என்ற சூழ்நிலை உருவாகும். எனவே இதற்கு முன்னோடியாக ஒட்டப்பிடாரம் தேர்தலில் சிந்தித்து வாக்களிக்கவேண்டும்." என அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனால் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் பரப்பரப்பு நிலவி வருகின்றது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“2019ல் நம்பிக்கையோடு வந்தேன், 2024ல்...” - பிரதமர் மோடி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 PM Modi campaign and says he came with confidence in 2019 at assam

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளான தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

அந்த வகையில், மொத்தம் 14 தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன்படி, முதற்கட்ட தேர்தலானது வரும் ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தலானது ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டத் தேர்தலானது மே 7ஆம் தேதியும் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் உள்ள சில தொகுதிகளில் நடைபெறும் முதற்கட்ட தேர்தல் நாளை மறுநாள் (19-04-24) நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்திலும், வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அசாம் மாநிலத்தின் நல்பாரி மாவட்டத்தில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று(17-04-24) நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அதில் அவர், “இன்று நாடு முழுவதும் மோடியின் உத்தரவாதம் நடந்து கொண்டிருக்கிறது. மோடியின் உத்தரவாதத்திற்கு வடகிழக்கு பகுதியே சாட்சி.

70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் அனைவருக்கும் ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை வசதிகள் வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தேன். அவர்களின் சிகிச்சையை எந்தவித பாரபட்சமும் இல்லாமல் பார்த்துக்கொள்வேன். பி.எம். கிஷான் யோஜனா திட்டத்தின் கீழ் இங்குள்ள விவசாயிகள் ரூ.1000க்கு மேல் பெற்றுள்ளனர். இப்போது, ​​பாஜக இந்தத் திட்டத்தைத் தொடர்வதாக அறிவித்துள்ளது, இதன் மூலம் அசாமின் விவசாயிகளுக்கு எந்தவித பாகுபாடும் இல்லாமல் உதவி மற்றும் அதிகாரம் அளிக்கிறது.

2014ஆம் ஆண்டில் எதிர்பார்ப்புடன் மக்களைச் சந்திக்க வந்தேன். 2019ஆம் ஆண்டில் நம்பிக்கையோடு வந்தேன். தற்போது 2024ல் உத்தரவாதத்தோடு வந்திருக்கிறோம். நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் அணுகி அவர்களுக்குத் தகுதியான வசதிகளை வழங்கத் தேசிய ஜனநாயகக் கூட்டணி முடிவு செய்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்கு மேலும் 3 கோடி புதிய வீடுகள் கட்டித் தரப்படும். பாகுபாடின்றி அனைவருக்கும் அவை கிடைக்கும்” என்று கூறினார்.

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.