Skip to main content

அலைந்து, திரிந்தும் அகப்படவில்லை மணப்பெண்..! நின்று போன எம்.எல்.ஏ., திருமணம்!

Published on 12/09/2018 | Edited on 12/09/2018


ஈரோடு மாவட்டம் பவானிசாகர் (தனி) தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ., ஈஸ்வரன். 43 வயதை கடந்த இவர் திருமணம் செய்ய முடிவு செய்து சத்தியமங்கலம் அருகே உள்ள உக்கரம் பெரியார் நகர் காலனியில் வசிக்கும் ரத்தினசாமி என்பவரது மகள் சந்தியா (23) என்பவரை மணப்பெண்ணாக நிச்சயம் செய்து மணநாள் 12.09.18 என்றும் திருமணம் பண்னாரியம்மன் கோயிலில் என்றும் தலைமை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணைமுதல்வர் ஓ.பி.எஸ் என பத்திரிகை அச்சடித்து கொடுத்து வந்தார்.

பெண் பார்க்க வந்த போதே எனக்கு இந்த எம்.எல்.ஏ., மாப்பிள்ளை பிடிக்கவில்லை என திருமணத்திற்கு மறுத்த சந்தியாவை அவரது குடும்பத்தினரும் எம்.எல்.ஏ.வான மணமகன் ஈஸ்வரனும் கட்டாயப்படுத்தி வந்துள்ளனர். மணப்பெண் வசிக்கும் காலனி வீட்டுக்குச் செல்லும் சாலை மண் சாலையாக இருந்தது அதை ஒரே நாளில் கான்கிரீட் சாலையாக மாற்றினார் எம்.எல்.ஏ., ஈஸ்வரன். எதை கண்டும் அசராத மணமகள் சந்தியா கட்டாய திருமணத்தில் விருப்பம் இல்லையென வீட்டை விட்டே வெளியேறி தனது கல்லூரி தோழியின் மனப்பாறை வீட்டுக்குச் சென்றார்.
 

hurts


பிறகு குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சந்தியாவை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது போலீஸ். அப்போது, என் அப்பா வயதுள்ளவரை திருமணம் செய்ய எனக்கு விருப்பமில்லை என்பதாலேயே நான் வீட்டை விட்டு வெளியேறினேன். கட்டாய திருமணம் செய்து வைக்க முயற்சிக்கிறார்கள் எனக்கு திருமணம் வேண்டாம் என வாக்குமூலம் கொடுத்தார் சந்தியா. நீதிபதியும் சந்தியாவின் பெற்றோர்களிடம் துன்புறுத்தக்கூடாது என எச்சரித்து சந்தியாவை அனுப்பி வைத்தார்.

இதன் பிறகு விரக்தியடைந்த மணமகனான எம்.எல்.ஏ.ஈஸ்வரன் எனக்கு பெண் கொடுக்க எத்தனையோ பேர் காத்திருக்கிறார்கள். திட்டமிட்டபடி அதே நாள் அதே இடம் தலைமை முதல்வர் தான் திருமணம் நடக்கும் என சபதமிட்டு தனது உறவினர்கள், நண்பர்கள், ஜோதிடர்கள், திருமண புரோக்கர்கள் என ஒரு பெரிய டீமையே களம் இறக்கினார். நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, ஊட்டி என பல மாவட்டங்களில் பெண் தேடும் படலம் நடந்தது. அது மட்டுமில்லாது அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் முதுநிலை படிக்கும் தலித் பெண்கள், பணிபுரியும் மகளிர் என விபரங்கள் சேகரிக்கப்பட்டு அந்தந்த பெண்களின் குடும்பத்தோடு தொடர்பு கொண்டு பெண் கேட்டார்கள் எம்.எல்.ஏவுக்காக களம் இறக்கிய குழுவினர்.
 

hurts


எம்.எல்.ஏ.ங்கறது அரசாங்க பதவி இல்லை. இன்னும் எத்தனை நாளுக்கு இந்த பவருனு யாருக்கும் தெரியாது. அது மட்டுமில்லைங்க வயசாகிப் போச்சு. அப்பா வயசுனு ஏற்கனவே நிச்சயித்த பெண்னே சொல்லியிருச்சு.. என ஒவ்வொரு பெண் குடும்பத்திலிருந்தும் பதில் வந்துள்ளது. தனக்கு எப்படியும் ஏதோ ஒரு பெண் கிடைத்து விடுவாள் என நம்பிக்கையுடன் இருந்த எம்.எல்.ஏ., ஈஸ்வரன் திருமணம் முடிவு செய்யப்பட்ட பன்னாரியம்மன் கோயிலில் திருமண பந்தல் வரை போட்டு வைத்தார். 11ந் தேதி மாலை வரை அலைந்து, திரிந்தும் எந்தப் பெண்னும் மணமகளாக அகப்படவே இல்லை. வேறு வழியில்லாமல் மனதை தேற்றிக் கொண்ட எம்.எல்.ஏ. ஈஸ்வரன் திருமணத்திற்கு முதல்வர் எடப்பாடியை தலைமை ஏற்க ஏற்பாடு செய்த அமைச்சர் பவானி கருப்பணனை தொடர்பு கொண்டு மணப்பெண் ஏதும் அமையலங்க கல்யாணத்தை நிறுத்தி விட்டேன் என தகவல் கொடுத்துள்ளார்.

நின்று போன திருமணத்தை அதே தேதியில் நடத்துவதாக எம்.எல்.ஏ., ஈஸ்வரன் முடிவு செய்திருக்க கூடாது. ஆர்ப்பாட்டம், ஆராவாரம் எதுவும் இல்லாமல் அமைதியாக தன் வயதிற்கேற்ற ஒரு பெண்னைப் பார்த்து சிக்கனமாக திருமணத்தை நடத்த வேண்டும் என தொகுதி ர.ர.க்கள் எம்.எல்.ஏ. ஈஸ்வரனுக்கு ஆலோசனை கூறியுள்ளார்கள்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.