Skip to main content

அலைந்து, திரிந்தும் அகப்படவில்லை மணப்பெண்..! நின்று போன எம்.எல்.ஏ., திருமணம்!

Published on 12/09/2018 | Edited on 12/09/2018


ஈரோடு மாவட்டம் பவானிசாகர் (தனி) தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ., ஈஸ்வரன். 43 வயதை கடந்த இவர் திருமணம் செய்ய முடிவு செய்து சத்தியமங்கலம் அருகே உள்ள உக்கரம் பெரியார் நகர் காலனியில் வசிக்கும் ரத்தினசாமி என்பவரது மகள் சந்தியா (23) என்பவரை மணப்பெண்ணாக நிச்சயம் செய்து மணநாள் 12.09.18 என்றும் திருமணம் பண்னாரியம்மன் கோயிலில் என்றும் தலைமை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணைமுதல்வர் ஓ.பி.எஸ் என பத்திரிகை அச்சடித்து கொடுத்து வந்தார்.

பெண் பார்க்க வந்த போதே எனக்கு இந்த எம்.எல்.ஏ., மாப்பிள்ளை பிடிக்கவில்லை என திருமணத்திற்கு மறுத்த சந்தியாவை அவரது குடும்பத்தினரும் எம்.எல்.ஏ.வான மணமகன் ஈஸ்வரனும் கட்டாயப்படுத்தி வந்துள்ளனர். மணப்பெண் வசிக்கும் காலனி வீட்டுக்குச் செல்லும் சாலை மண் சாலையாக இருந்தது அதை ஒரே நாளில் கான்கிரீட் சாலையாக மாற்றினார் எம்.எல்.ஏ., ஈஸ்வரன். எதை கண்டும் அசராத மணமகள் சந்தியா கட்டாய திருமணத்தில் விருப்பம் இல்லையென வீட்டை விட்டே வெளியேறி தனது கல்லூரி தோழியின் மனப்பாறை வீட்டுக்குச் சென்றார்.
 

hurts


பிறகு குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சந்தியாவை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது போலீஸ். அப்போது, என் அப்பா வயதுள்ளவரை திருமணம் செய்ய எனக்கு விருப்பமில்லை என்பதாலேயே நான் வீட்டை விட்டு வெளியேறினேன். கட்டாய திருமணம் செய்து வைக்க முயற்சிக்கிறார்கள் எனக்கு திருமணம் வேண்டாம் என வாக்குமூலம் கொடுத்தார் சந்தியா. நீதிபதியும் சந்தியாவின் பெற்றோர்களிடம் துன்புறுத்தக்கூடாது என எச்சரித்து சந்தியாவை அனுப்பி வைத்தார்.

இதன் பிறகு விரக்தியடைந்த மணமகனான எம்.எல்.ஏ.ஈஸ்வரன் எனக்கு பெண் கொடுக்க எத்தனையோ பேர் காத்திருக்கிறார்கள். திட்டமிட்டபடி அதே நாள் அதே இடம் தலைமை முதல்வர் தான் திருமணம் நடக்கும் என சபதமிட்டு தனது உறவினர்கள், நண்பர்கள், ஜோதிடர்கள், திருமண புரோக்கர்கள் என ஒரு பெரிய டீமையே களம் இறக்கினார். நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, ஊட்டி என பல மாவட்டங்களில் பெண் தேடும் படலம் நடந்தது. அது மட்டுமில்லாது அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் முதுநிலை படிக்கும் தலித் பெண்கள், பணிபுரியும் மகளிர் என விபரங்கள் சேகரிக்கப்பட்டு அந்தந்த பெண்களின் குடும்பத்தோடு தொடர்பு கொண்டு பெண் கேட்டார்கள் எம்.எல்.ஏவுக்காக களம் இறக்கிய குழுவினர்.
 

hurts


எம்.எல்.ஏ.ங்கறது அரசாங்க பதவி இல்லை. இன்னும் எத்தனை நாளுக்கு இந்த பவருனு யாருக்கும் தெரியாது. அது மட்டுமில்லைங்க வயசாகிப் போச்சு. அப்பா வயசுனு ஏற்கனவே நிச்சயித்த பெண்னே சொல்லியிருச்சு.. என ஒவ்வொரு பெண் குடும்பத்திலிருந்தும் பதில் வந்துள்ளது. தனக்கு எப்படியும் ஏதோ ஒரு பெண் கிடைத்து விடுவாள் என நம்பிக்கையுடன் இருந்த எம்.எல்.ஏ., ஈஸ்வரன் திருமணம் முடிவு செய்யப்பட்ட பன்னாரியம்மன் கோயிலில் திருமண பந்தல் வரை போட்டு வைத்தார். 11ந் தேதி மாலை வரை அலைந்து, திரிந்தும் எந்தப் பெண்னும் மணமகளாக அகப்படவே இல்லை. வேறு வழியில்லாமல் மனதை தேற்றிக் கொண்ட எம்.எல்.ஏ. ஈஸ்வரன் திருமணத்திற்கு முதல்வர் எடப்பாடியை தலைமை ஏற்க ஏற்பாடு செய்த அமைச்சர் பவானி கருப்பணனை தொடர்பு கொண்டு மணப்பெண் ஏதும் அமையலங்க கல்யாணத்தை நிறுத்தி விட்டேன் என தகவல் கொடுத்துள்ளார்.

நின்று போன திருமணத்தை அதே தேதியில் நடத்துவதாக எம்.எல்.ஏ., ஈஸ்வரன் முடிவு செய்திருக்க கூடாது. ஆர்ப்பாட்டம், ஆராவாரம் எதுவும் இல்லாமல் அமைதியாக தன் வயதிற்கேற்ற ஒரு பெண்னைப் பார்த்து சிக்கனமாக திருமணத்தை நடத்த வேண்டும் என தொகுதி ர.ர.க்கள் எம்.எல்.ஏ. ஈஸ்வரனுக்கு ஆலோசனை கூறியுள்ளார்கள்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.