Skip to main content

கனமழையால் சுவர்கள் இடிந்து விழுவதற்கு வாய்ப்புள்ளது; திருவாரூர் கமலாலய குளத்தை ஆய்வு செய்த குழுவினர் கருத்து!

Published on 06/11/2021 | Edited on 06/11/2021

 

Walls are also prone to collapse due to heavy rain; Comment from the team that inspected the Thiruvarur Kamalalaya pond!

 

திருவாரூர் தியாகராஜர் திருக்கோவில் கமலாலயக் குளத்தின் இடிந்து விழுந்த பகுதிகளை ஆய்வு செய்த தேசிய தொழில்நுட்ப கழக குழுவினர் 'இன்னும் ஒரு மாதத்தில் ஆய்வு செய்து முழு அறிக்கை சமர்ப்பிப்போம்' எனக் கூறியுள்ளனர்.

 

எந்த ஆண்டும் இல்லாத வகையில் கடந்த இரண்டு மாதங்களாகத் தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. விவசாயப் பணிகளே துவங்க முடியாதபடி தண்ணீர் கடல்போல வடியாமல் கட்டியிருப்பது ஒருபுறம், மறுபுறம் முன்கோப்பில் நடவு செய்யப்பட்ட நிலங்கள் தொடர் மழையில் மூழ்கி விவசாயிகளை பாழ்படுத்தி வருகிறது. இந்தநிலை கடந்த மாதம் பெய்த கனமழையினால் உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்குச் சொந்தமான கமலாலயக்குளத்தின் தெற்கு கரை பகுதி வலுவிழந்து சரிந்தது. உடனடியாக தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் இதனை நேரில் பார்வையிட்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு குளத்தின் கரையைச் சீரமைக்கும் பணியை விரைந்து முடிக்க உத்தரவு கலந்த ஆலோசனை வழங்கினார்.

 

Walls are also prone to collapse due to heavy rain; Comment from the team that inspected the Thiruvarur Kamalalaya pond!

 

அவரை தொடர்ந்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக இன்று தேசிய தொழில்நுட்ப கழகத்தின் பேராசிரியர் முத்துக்குமார் மற்றும் பேராசிரியர் சரவணன் உள்ளிட்ட இரண்டு பேர் கொண்ட குழுவினர் திருவாரூர் தியாகராஜர் கோவிலின் குளத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கமலாலய குளத்தில் படகில் சென்று சரிந்து விழுந்த குளக்கரையை ஆய்வு செய்தவர்கள் குளத்தின் கரையை மீண்டும் வலுப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நீண்ட நேரம் ஆலோசனை மேற்கொண்டனர்.

 

Walls are also prone to collapse due to heavy rain; Comment from the team that inspected the Thiruvarur Kamalalaya pond!

 

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் குழுவின் தலைவர் முத்துக்குமார், "குளத்தை முழுமையாக ஆய்வு செய்த பின்பு ஒரு மாதத்திற்குள் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். மேலும் கனமழை பெய்தால் தெற்கு பகுதியில் மேலும் சில பகுதிகளும் இடிந்து விழுவதற்கு வாய்ப்புள்ளது. இதனை முன்கூட்டியே கருத்தில்கொண்டு இந்த பகுதியில் போக்குவரத்தைத் தடை செய்து பாதுகாப்பு வழிமுறைகளைச் சிறப்பாக மேற்கொண்டிருக்கின்றனர். முதற்கட்ட ஆய்வின் முடிவில் ஒட்டுமொத்தமாகக் குளத்தின் அனைத்து கரைகளையும் பலப்படுத்தினால் பாதுகாப்பாக இருக்கும்" என்றார்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாகிஸ்தானில் பழங்கால இந்து கோவில் இடித்து தகர்ப்பு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Demolition of a Historic Hindu temple in Pakistan!

இந்தியா - பாகிஸ்தான் பிரிவதற்கு முன்னாள், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையொட்டி, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ‘கைபர் கோவில்’ என்ற பழங்கால இந்து கோவில் ஒன்று செயல்பட்டு வந்தது. அதன் பின்பு, 1947ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததற்குப் பின்னால், அங்குள்ள சிறுபான்மையின மக்களான இந்து மக்கள், இந்தியாவிற்கு புலம் பெயர்ந்து வந்தனர்.

இதனால், 1947ஆம் ஆண்டு முதல், அந்த இந்து கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் உள்ளே சென்று வழிபடவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த கோவில் மூடப்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்த கோவிலில் உள்ள செங்கற்கள் ஒவ்வொன்றாக விழுந்து, அந்த கோவில் சிதிலமடைந்து காட்சியளித்துள்ளது.

இந்த நிலையில், அந்தப் பழமையான இந்து கோவில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு முழுமையாக இடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கோவில் அமைந்திருந்த இடத்தில் புதிதாக வர்த்தக வளாகம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து, பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கூறியதாவது, ‘முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று கட்டிடங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பை உறுதி செய்வது மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளின் பொறுப்பாகும்’ என்று கூறியுள்ளது.

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.