சுவர் இடிந்துவிழுந்த விபத்தில் சிறுமி பலி..!

Wage worker's daughter passes away wall collapse

பெரம்பலூர் மாவட்டம்,வி.களத்தூர் அருகே, சுவர் இடிந்துவிழுந்த விபத்தில், கூலித் தொழிலாளியின் மகளான7 வயது சிறுமி உயிரிழந்தார்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள வி.களத்தூர் அருகே பசும்பலூர் கிராமத்தில் வசிக்கும் வெங்கடேசன் -திருச்சடை தம்பதியினரின் 7 வயது மகள்யோசனா என்பவர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில், சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், சிறுமியின் அருகில் படுத்து உறங்கிய, அவரின் தங்கை, 5 வயது பெண் குழந்தையான கீர்த்தனா, மற்றும் ஒன்றரை வயது ஆண் குழந்தை ராமு ஆகிய இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்து குறித்து வி.களத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Perambalur
இதையும் படியுங்கள்
Subscribe