Skip to main content

வீரமரணமடைந்த வீரர்களுக்கு நிதிஉதவி செய்த கூலித்தொழிலாளி!

Published on 18/02/2019 | Edited on 18/02/2019

இந்தியாவில் உள்ள ஜம்மு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான்  பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 40 க்கும் மேற்பட்ட  இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

 

help

 

இப்படி ஒரு கொடூர தாக்குதலை கண்டு இந்திய நாடு பெரும் சோகத்தில் மூழ்கி உள்ளது. அதுபோல் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ஒவ்வொரு மாவட்டத்தில் இருக்கும் நகரம் முதல் கிராமங்கள் வரை  அனைத்து பகுதிகளிலும் இருக்கக்கூடிய பொதுமக்களும்,சமூக ஆர்வலர்களும் பாக் தீவிரவாத அமைப்பை கண்டித்து போராட்டம் நடத்தியும் வருகிறார்கள்.

 

அதுபோல் வீரமரணம் அடைந்த நமது இந்திய ராணுவ வீரர்களுக்கு அங்காங்கே பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அமைதி ஊர்வலங்களை நடத்தியும்,மெழுகுவர்த்தி ஏற்றிஅஞ்சலி செலுத்தியும் வருகிறார்கள். அதுபோல் கோவில்கள்,மசூதிகள், சர்ச்சுகளில் வீரமரணமடைந்த நமது இந்திய ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்காக கூட்டுப் பிரார்த்தனையும்  கூட மும்மதத்தினரும் ஜாதி மதம் பார்க்காமல் செய்து வருகிறார்கள்.

 

 

இந்த நிலையில் தான் துணை முதல்வர் ஓபிஎஸ் சின்சொந்த மாவட்டமான தேனியில்  வழக்கம்போல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தை மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் நடத்தினார். இக்கூட்டத்திற்கு வழக்கம்போல் மாவட்ட அளவில் இருக்கக்கூடிய பொதுமக்கள் தங்கள் குறைகளையும் கோரிக்கைகளையும் நிறைவேற்றி கொடுக்க கோரி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ்விடம்மனு கொடுப்பது வழக்கம் அதுபோல் மனு கொடுத்தனர்.

 

அப்பொழுது இந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்துகொண்ட லட்சுமிபுரம் அருகே இருக்கும் சரத்துப்பட்டி எம்ஜிஆர் நகரை சேர்ந்த  கூலி தொழிலாளியான பொன்னையன் பாக். தீவிரவாதிகளால் வீரமரணமடைந்த நமது இந்திய ராணுவ வீரர்களுக்காக ஆயிரம் ரூபாய் நிதியை மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ்விடம் வழங்கினார். அதை கண்டு கலெக்டர் உள்பட அதிகாரிகள் அனைவரும் அந்த கூலித்தொழிலாளியின் பெருந்தன்மையை பாராட்டினார்கள். 

 

இதுபற்றி சரத்துப்பட்டி எம்ஜிஆர் காலனியைச் சேர்ந்த பொண்ணையனிடம்  கேட்டபோது... கடந்த சில நாட்களுக்கு முன்பு தீவிரவாதிகளால் நமது ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவத்தை கேட்டு மனம் நொந்து போய்விட்டேன். நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த அந்த வீரர்களின் குடும்பத்திற்கு என்னால் முடிந்த உதவி ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். இதைப்பற்றி எனது மனைவி கம்மாளச்சியிடம்  சொன்ன போது அவரும் உதவி செய்யுங்கள் என்று  கூறினாள். ஆனால் எனக்கு ஐந்து பிள்ளைகளில் மூன்று ஆண் இரண்டு பெண் பிள்ளைகளில் ஐந்து பேரையுமே திருமணம் செய்து கொடுத்து விட்டு நானும் என் மனைவியும் தனியாக எம்ஜிஆர் காலணியில் இருந்துகொண்டு தினசரி 270 ரூபாய் வீதம் கூலி வேலைக்கு போய் வருகிறோம். அந்த பணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சேமித்தும் வருகிறேன். இப்படி கூலிவேலைக்குச்  சென்று அதில் மிச்சப்படுத்தி வைத்து இருந்த பணம்தான் ஆயிரம் ரூபாய். அந்த பணத்தைதான் மாவட்ட கலெக்டரிடம் ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நிதியாக வழங்கினேன் என்று கூறினார்.

    

இப்படி கூலித்தொழிலாளியான பொன்னையன் மறைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் நிதி உதவி செய்ததை கண்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பொதுமக்களும், அதிகாரிகளும் கூட பொன்னையனின் மனிதாபிமானத்தை கண்டு வாழ்த்தினார்கள்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அரசியல் வேறுபாடு வன்முறையாக மாறக்கூடாது'- கல்வீச்சுக்கு முதல்வர் கண்டனம்

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
'Political difference should not turn into violence'- CM condemns stone pelting

ஆந்திராவில் தற்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கல் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனால் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வர இருக்கிறது. இதனால் அங்கு அரசியல் கட்சிகளால் தீவிர பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தனித்து களம் காண்கிறது. இதனையொட்டி ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடந்த தேர்தல் பரப்புரையில் ஜெகன் மோகன் ரெட்டி மீது கல்வீசப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த ஜெகன்மோகன் ரெட்டிக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இந்தச் சம்பவத்திற்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், 'ஆந்திர முதல்வர் மீது கல் வீசப்பட்டதைக் கண்டிக்கிறேன். அரசியல் வேறுபாடுகள் வன்முறையாக மாறக்கூடாது. ஜனநாயக செயல்பாட்டில் ஈடுபடும் போது நாகரீகத்தையும், பரஸ்பர மரியாதையையும் நிலைநாட்டுவோம். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்; வைரலாகும் வீடியோ

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Attack on students engaged in prayer; A viral video

அண்மையில் டெல்லியில் சாலையில் தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்களை போலீஸ் அதிகாரி ஒருவர் காலால் எட்டி உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு கொடூர தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பரபரப்பு வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கண்டனத்தை பெற்று வருகிறது. குஜராத் பல்கலைக்கழக விடுதியில் தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.