பணியின்போது உயிரிழந்த தார்பாய் விரிக்கும் தொழிலாளி!

Wage worker passed away during work

சிவகங்கை மாவட்டம் திருப்பத்துாரைச் சேர்ந்தவர் சீனிவாசன் (57). இவர் குட்ஷெட் பகுதியில் லாரியில் ஏற்றப்பட்ட லோடின் மேல் தார்பாய் விரிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் தவறி விழுந்துள்ளார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து, சிகிச்சைக்காக அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பாலக்கரை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

passed away sivagangai Worker
இதையும் படியுங்கள்
Subscribe