வாக்கு இயந்திரம் பழுது... வாக்குப்பதிவே துவங்காத தொகுதிகள்!!  

Voting machine repair ... that have not started voting

தமிழகத்தில் 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு என்பதுதொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிற நிலையில், 1.5 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 3,585 ஆண் வேட்பாளர்களும், 411 பெண் வேட்பாளர்களும், இரண்டு மூன்றாம் பாலினத்தவரும்என மொத்தம் 3,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் அவினாசி தொகுதியில் வாக்குச்சாவடி எண் 218 ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஏற்படுத்தப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்கு இயந்திரம் பழுது ஏற்பட்டதால் இது வரை வாக்குப்பதிவு தொடங்கவில்லை. அதேபோல் சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் பல இடங்களில் இன்னும் வாக்குப்பதிவு தொடங்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல் மயிலாடுதுறை திருவிழந்தூர் தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் இயந்திர கோளாறால் வாக்குப்பதிவு தொடங்கவில்லை என்றதகவல்வெளியாகியுள்ளது.

constituency tn assembly election 2021
இதையும் படியுங்கள்
Subscribe