தேனி தேர்தல் வெற்றியை எதிர்த்து வாக்காளர் தொடர்ந்த வழக்கு! -ரவீந்திரநாத்குமார் எம்.பி. பதிலளிக்க கடைசி கெடு!

தேனி எம்பியாக ரவீந்திரநாத்குமார் வெற்றி பெற்றதை எதிர்த்து மிலானி என்ற வாக்காளர் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

Voter continuation case against Theni election victory! Raveendranath Kumar MP Last Deadline to Respond!

இந்த வழக்கில் ரவீந்திரநாத்குமார் பதிலளிக்க உத்தரவிட்டும் பதிலளிக்கவில்லை. அதனால் மிலானி புது மனு தாக்கல் செய்தார். அதில், வழக்கு விசாரணையை இழுத்தடிக்கவே ரவீந்திரநாத்குமார் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்றும், அவர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யும் வரை, தற்காலிகமாக எம்.பி. பதவி வகிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

ரவீந்திரநாத்குமார் பதில் மனு தாக்கல் செய்ய ஜனவரி 23-ஆம் தேதி வரை கடைசி கெடு விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

highcourt ops son P Raveendranath Kumar Theni
இதையும் படியுங்கள்
Subscribe