தமிழகத்தில் கரோனா நோய் தொற்று பரவலால் தொழித்துறைகள் அனைத்தும் கடுமையான பின்னடைவை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதே போல் சில வேலைகளில் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வேலையாட்கள் தமிழகத்திற்கு வந்து வேலை செய்து வந்தனர்.
அவ்வாறு ரயில் நிலையங்களில் ரயில்களுக்காக காத்திருப்பவர்கள் பசியால் வாடக்கூடாது என்ற நோக்கில் பல தன்னார்வலர்களும் அவர்களை தேடி சென்று உணவு அளித்து வருகின்றனர். அதே போல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் உணவுகளை வழங்கினர்.