தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலையின் காரணமாக அனைத்து இடங்களிலும் மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பல சாலையோர மக்கள் மற்றும் ஆதரவற்ற மக்கள் உணவளிக்கும் செயலை பல தனி மனிதர்களும், தனியார் நிறுவனங்களும் முன்னெடுத்து வருகின்றனர். அந்தவகையில், தனியார் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் அண்ணாசாலையில் உள்ள சாலையோர மக்கள் மற்றும் ஆதரவற்ற மக்களுக்கு மதிய உணவு அளித்தனர்.

Advertisment