தமிழகம் முழுவதும் கரோனா இரண்டாம் அலையின் தீவிரம் அதிகமாக இருப்பதால் பல மருத்துவமனைகளிலும் மருந்து மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையைச் சமாளிக்கும் விதமாகப் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்குச் செய்து வருகின்றனர். அந்த வகையில், சென்னை அடையாரில் உள்ள இன்னர் வீல்ஸ் என்ற நிறுவனம் ஆக்சிஜன் வசதியுடைய கருவிகளோடு உள்ள வாகனத்தை ஸ்டான்லி மருத்துவமனைக்கு வழங்கியுள்ளது. இந்த ஆக்சிஜன் வாகன சேவையை ராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ.ஐ ட்ரீம்ஸ் மூர்த்தி மற்றும் ஸ்டான்லி மருத்துவமனை முதல்வரும் துவக்கி வைத்தார்கள்.

Advertisment