Skip to main content

தெற்கு ஆசிய கைப்பந்து போட்டியில் வெற்றி வாகை சூடிய இந்திய கேப்டனுக்கு உற்சாக வரவேற்பு!

Published on 07/12/2019 | Edited on 07/12/2019

 

நேபாளத்தில் நடந்து வரும் 13 வது தெற்கு ஆசிய விளையாட்டுப்  போட்டிகளில் 3 ந் தேதி நடந்த கைப்பந்து போட்டியில்  பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டு வெற்றி வாகை சூடிய கைப்பந்து அணியின் கேப்டன் ஜெரோம் வினித் (27), சிறந்த ஆட்ட நாயகன் பதக்கமும்  பெற்றார்.  

 

Captain-Jerome vinith



இந்த போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து கேப்டன் ஜெரோம் வினித், பயிற்சியாளர் ஸ்ரீதர் உள்பட 4 பேர் பங்கேற்றனர். இந்திய அணி வெற்றி பெற்றதையடுத்து அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. வெற்றிக் கோப்பையை வாங்கிய கையோடு கேப்டன் ஜெரோம் வினித் தனது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைக்காடு கிராமத்திற்கு வந்தார். அவருக்கு கிராமத்தினர் சார்பில் மங்கள வாத்தியங்கள் முழங்க, வான வேடிக்கைகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

சொந்த மண்ணில் கால் வைத்ததும் அவரை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து வரவேற்று நெகிழ்ந்தனர் பெண்கள். பள்ளி மாணவ, மாணவிகள் கரகோஷங்கள் நடுவே சால்வைகள், மாலைகள் அணிவித்து கிராம மக்கள் வரவேற்றனர்.இதன் பின்னர் வினித் சொந்த மண்ணில் இறங்கி தேவாலயம் சென்று மண்டியிட்டு வணங்கிய பிறகு மெழுகுவர்த்தி ஏற்றினார். 

 

 

Captain-Jerome vinith



இதனையடுத்து அவருக்கு சொல்லிக் கொடுத்த ஆசிரியைகள், தற்போதைய ஆசிரியைகள், பள்ளி நிர்வாகத்தின் சார்பில் குழு படங்களும் செல்பிகளும் எடுத்துக் கொண்டனர். அதே மேளதாளங்களுடம் கிராம மக்கள் ஊர்வலமாக வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். கோட்டைக்காடு என்றும் சிறிய கிராமத்தில் விவசாய கூலி தொழிலாளியின் மகனாக பிறந்து கிராமத்து பள்ளிகளில் பள்ளிப் படிப்பை முடித்து பாலிடெக்னிக் ஒரு வருடம், பி.ஏ. ஆங்கிலம் ஒரு வருடம் பி.பி.ஏ என்று என்று அடுத்தடுத்து கல்லூரிகள் மாறிக் கொண்டே இருந்துள்ளார்.

விளையாட்டில் மிக ஆர்வமாக உள்ளார் என்பதால் எஸ்.ஆர்.எம். கல்லூரி அவரை அழைத்துக்கொண்டது. பின்னர் அவரது அயராத உழைப்பை பார்த்து பாரத் பெட்ரோலியம் அணி அழைத்துக் கொண்டது. கொச்சியில் தங்கி இருந்து தொடர்ந்து பயிற்சி எடுத்துக் கொண்டு இந்திய அணிக்குள் நுழைந்து தற்போது கேப்டனாவும் தொடர்ந்து வெற்றி வாகையும் சூடியுள்ளார். 

வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் பேசும் போது, "கிராமத்து குழந்தைகள் தான் அதிகம் சாதிக்க முடியும். அதற்கு அவர்களின் பெற்றோர், பள்ளி உற்சாகமும், ஊக்கமும் கொடுக்க வேண்டும். அப்படித் தான் என்னால் சாதிக்க முடிந்தது. கோட்டைக்காடு என்ற கிராமம் வெளியே தெரியாமல்  இருந்தது. ஆனால் இன்று வெளியுலகிற்கு தெரிகிறது. அதனை நினைத்து பெருமைப்படுகிறேன். 

பாகிஸ்தானுடன் மோதும் போது இந்திய அணி வெல்லும் என்ற ஒரே இலக்கோடு பயணித்து வென்றோம். அடுத்த இலக்கு ஒலிம்பிக். அதற்கான தேர்வு ஜனவரி முதல் வாரத்தில் சீனாவில் நடக்கிறது. இந்திய கைப்பந்து அணி கலந்து கொள்கிறது. அதில் தேர்வாகி நிச்சயம் ஒலிம்பிக் சென்று வென்று வருவோம் என்றார். மேலும் மாணவர்கள் படிப்பையும், விளையாட்டையும்  இரு கண்களாக பார்க்க வேண்டும் என்று அழுத்தமாக தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்

Next Story

மெரினாவில் பீச் வாலிபால் போட்டி; அனுமதி குறித்து தமிழக அரசு அறிவிப்பு

Published on 08/07/2023 | Edited on 08/07/2023

 

marina beach volley ball admission announcement tamilnadu govt

 

பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என ஐந்து பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் ‘தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் - 2023’ மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடத்தப்பட்டது.

 

இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு 11 வகையான விளையாட்டுப் போட்டிகளும், கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு 11 வகையான விளையாட்டுப் போட்டிகளும், அரசு ஊழியர்களுக்கு 5 வகையான விளையாட்டுப் போட்டிகளும், பொதுப்பிரிவினருக்கு 5 வகையான விளையாட்டுப் போட்டிகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு 8 வகையான விளையாட்டுப் போட்டிகளும் என மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து மாவட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான மண்டல அளவிலான போட்டிகளும்  நடத்தப்பட்டன.

 

அதனைத் தொடர்ந்து ‘முதலமைச்சர் கோப்பை - 2023’ மாநில அளவிலான போட்டிகள் சென்னையில் 17 இடங்களில் ஜூலை 01-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற 38 மாவட்டங்களைச் சேர்ந்த 27,000-க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்தப் போட்டிகள் ஜூலை மாதம் 25-ந்தேதி வரை நடைபெறுகின்றன.

 

இந்நிலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை மெரினா கடற்கரையில் இன்று முதல் ஜூலை 11 ஆம் தேதி வரை தினமும் மாலை 4 மணி முதல் பீச் வாலிபால் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தப் போட்டிகளில் மண்டல அளவில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் அணிகள் பங்கேற்க உள்ளன. பள்ளி மாணவ மாணவியர் பிரிவில் தலா 18 அணிகளும் கல்லூரி மாணவ மாணவியர் பிரிவில் தலா 18 அணிகளும் விளையாடுகின்றன. இந்த போட்டிகளைக் காண வரும் அனைவருக்கும் அனுமதி இலவசம்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Next Story

அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டி; ஆர்வத்துடன் கலந்து கொண்ட வீரர்கள் 

Published on 23/05/2023 | Edited on 23/05/2023

 

all india level volleyball match stated karur

 

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் மைதானத்தில் ஆண்களுக்கான 63 ஆம் ஆண்டு அகில இந்திய கூடைப்பந்து போட்டியும் பெண்களுக்கான 9 ஆம் ஆண்டு அகில இந்திய கூடைப்பந்து போட்டியும் இன்று துவங்கி ஆறு நாட்கள் நடைபெறுகிறது. இதில் ஆண்கள் பிரிவில் எட்டு அணிகளும், பெண்கள் பிரிவில் ஐந்து அணிகளும் கலந்து கொண்டு விளையாட உள்ளார்கள்.

 

இந்தியன் கடற்படை அணி, லோனா வில்லா திருவனந்தபுரம் கேரள மின்சார வாரிய அணி, புதுடெல்லி இந்தியன் ரயில்வே அணி, பஞ்சாப் போலீஸ் அணி மற்றும் புதுடெல்லி இந்திய விமானப்படை அணி உள்ளிட்ட தலைசிறந்த எட்டு அணிகளும், பெண்கள் பிரிவில் ஐந்து அணிகளும் கலந்து கொள்கின்றனர். ஆண்களுக்கான இந்தப் போட்டி லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெறும். பெண்களுக்கான போட்டி லீக் முறையில் நடைபெறும். இப்போட்டி வருகிற 27 ஆம் தேதி நடைபெறும்.

 

இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு முதல் பரிசு ஒரு லட்ச ரூபாயும் சுழல் கோப்பையும் வழங்கப்பட உள்ளது. இன்று நடைபெற்ற ஆண்களுக்கான போட்டியில் திருவனந்தபுரம் கேரளா மின்வாரிய அணியும், புதுடெல்லி ரயில்வே அணியும் மோதியதில் 78க்கு 65 என்று புள்ளி கணக்கில் திருவனந்தபுரம் கேரளா மின்வாரிய அணி வெற்றி பெற்றது. பெண்களுக்கான போட்டியில் நார்த் அண்ட் ரயில்வே அணியும் கேரளா போலீஸ் அணியும் மோதியதில் 71க்கு 50 என்ற புள்ளி கணக்கில் நார்த்தன் ரயில்வே அணி வெற்றி பெற்றது. மேலும் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் பரிசுகளும் கோப்பைகளும் வழங்க உள்ளார்.