Skip to main content

வொக்கேஷனல் பிரிவு மாணவர்களும் பொறியியல் படிக்கலாம்-அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேட்டி

Published on 24/04/2019 | Edited on 24/04/2019

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அனைத்துத் துறைகளிலும் வரும் கல்வியாண்டில் புதிய படிப்புகள் அறிமுகம் செய்யப்படுவதாக பல்கலைக்கழகத் துணைவேந்தர்  வே.முருகேசன் செய்தியாளர்களை சந்தித்து கூறினார்.

 

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில்,

 

இந்தப் பல்கலைக்கழகத்தில் புதிய படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று, சில புதிய பாடத் திட்டங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பல்கலைக்கழகத்தில் 2019-20-ஆம் கல்வியாண்டில் அனுமதி சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆன்லைன் கவுன்சிலிங்கில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அடுத்ததாக அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பட்டியலில் சேர்க்கப்படவுள்ளது. 

 

 Vocational category students can study engineering - Annamalai University Vice-Chancellor interview

 

பொறியியல் புலத்தில் புதிய பட்டப் படிப்புகளாக பி,இ., சி.எஸ்.இ. பிக் டேட்டா அனலிடிக்ஸ் (B.E., CSE Big Data Analytics), பி.இ., சி.எஸ்.இ., ஏ.எல். அண்டு மெஷின் லேர்னிங் (B.E., CSE (AL And Machine learning) படிப்புகள் தொடங்கப்பட உள்ளன. இந்த இரு படிப்புகளிலும் 60 பேர் அனுமதி சேர்க்கை செய்யப்படுவார்கள். மேலும் இந்த ஆண்டு புதிய படிப்புகளாக எம்.எஸ்சி., டேட்டா சயின்ஸ் (M.sc., Data Science)- 30 இடங்கள், எம்.பி.ஏ., பிசினஸ் அனலிடிக்ஸ் (MBA Business Analytics)- 60 இடங்கள், எம்.பி.ஏ., இன்பராஸ்ட்ரக்சர் மேனேஜ்மென்ட் (MBA Infrastructure Management)- 50 இடங்கள், எம்.காம்., பிசினஸ் இன்டலிஜன்ஸ் (M.Com., Business Intelligence) - 30 இடங்கள்.

 

 

 

 டிப்ளமோ இன் மேனேஜ்மென்ட் - 60 இடங்கள், பி.வோக். மெக்ட்டிரானிக்ஸ் (B.Voc.Mechetronics)- 60 இடங்கள், நெய்வேலி நிலக்கரி நிறுவன ஊழியர்களுக்கான எக்ஸிகியூட்டிவ் எம்.பி.ஏ., (Executive MBA) (2 ஆண்டு) படிப்பு - 50 இடங்கள், முதுநிலை பட்டய படிப்பான டிப்ளமோ இன் பிசினஸ் அனலிடிக்ஸ் - பிசினஸ் இன்டலிஜென்ஸ் (PG Diploma In Business Analytics and Business Intelligence)-20 இடங்கள், டிப்ளமோ இன் இ-காமர்ஸ் - மேனேஜ்மென்ட் (Diploma in E-Commerce and Management)- 60 இடங்கள், பி.வோக். லாஜிஸ்டிக்ஸ் (B.Voc.Logistics)- 60 இடங்களுக்கும் அனுமதி சேர்க்கை வழங்கப்படுகிறது.

 

மேலும் வேளாண் துறையில் பட்டய (Diploma in Agriculture) படிப்புக்கான அனுமதி சேர்க்கை எண்ணிக்கை 100-லிருந்து 200-ஆகவும், தோட்டக்கலை (Diploma in Horticulture) படிப்புக்கான அனுமதி சேர்க்கை 50-லிருந்து 100-ஆகவும் உயர்த்தப்படுகிறது.

 

 

பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் மொத்தம் 72 படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம். இந்த கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்பில் சேர வொக்கேஷனல் பிரிவில் பயின்ற மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையத்தில் 2018-19-ஆம் கல்வி ஆண்டில் 92 ஆயிரம் பேர் பயின்று வருகின்றனர். இதில், வருகிற கல்வி ஆண்டில் ஒரு லட்சத்து 5 ஆயிரம் பேர் வரை அனுமதி சேர்க்கை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

 

 

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தனது 90-ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் வேளையில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது என்று கூறினார்.  இவருடன் பல்கலைக்கழக பதிவாளர் ரவிச்சந்திரன், ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் திருவள்ளுவன் உள்ளிட்ட அனைத்து துறை தலைவர்கள்  உடனிருந்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பாலியல் சமத்துவ பயிற்சி பட்டறை

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Gender Equality Workshop at Annamalai University

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து பாலியல் சமத்துவத்தைப் பற்றிய 3 நாட்கள் பயிற்சி பட்டறை பல்கலைக்கழக மக்களியல் துறையில் நடைபெற்றது. மக்களியல் துறை உதவிப் பேராசிரியர் க. மகேஸ்வரி அனைவரையும் வரவேற்றார். கலைப்புல தலைவர் விஜயராணி தலைமை தாங்கிப் பேசினார். துறைத் தலைவர் ரவிசங்கர் பயிற்சி பட்டறை பற்றிய தொகுப்பு உரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆளவை மன்ற உறுப்பினர் பேராசிரியர் அரங்க பாரி, ராஜீவ்காந்தி தேசிய மேம்பாட்டு நிறுவனத்தின் பேராசிரியர் வசந்தி ராஜேந்திரன், சிதம்பரம் வட்டாட்சியர் ஹேமா ஆனந்தி ஆகியோர் கலந்து கொண்டு மாணவ - மாணவிகளுக்குப் பாலியல் சமத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இதில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவ - மாணவியர்கள் மற்றும் அதன் உறுப்பு கல்லூரி மாணவ - மாணவியர்கள் 100 பேர் கலந்து கொண்டனர். மக்களியல் துறை இணைப் பேராசிரியர் பீமலதா தேவி நன்றியுரை வழங்கினார்.

Next Story

‘மீண்டும் கல்லூரிக்குப் போகலாம்’ - குடும்பத்தினருடன் பொன்விழாவைக் கொண்டாடிய முன்னாள் மாணவர்கள்!

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Ex-students who celebrated Golden Jubilee with their families at annamalai university

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 1970 முதல் 1974 ஆம் ஆண்டில் வேளாண் கல்லூரியில் 45 மாணவர்கள் பயின்றனர். கல்வி பயின்ற பிறகு அவர்கள் மத்திய - மாநில அரசின் பல்வேறு துறைகளில் வங்கி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட  பல்வேறு துறைகளில் பணியாற்றி பணி நிறைவு பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, ‘AU74 அக்ரி பட்டதாரிகள் சங்கம்’ என்ற சங்கத்தை அமைத்து,  அரசுப் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர். மேலும் அவர்கள், பல்வேறு கல்லூரிகளில் பயிலும் வேளாண் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகின்றனர்.

இவர்கள் கல்வி பயின்று 50 ஆண்டுகள் கடந்த நிலையில், குடும்பத்தினருடன் இணைந்து 50 ஆம் ஆண்டு பொன்விழாவை (1974 - 2024) பல்கலைக்கழக வேளாண் கல்லூரியில் கொண்டாடினார்கள். இவ்விழாவுக்கு சங்கத்தின் தலைவர் அக்ரி நடராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராகப் பல்கலைக்கழக துணைவேந்தர் இராம. கதிரேசன் கலந்துகொண்டு, முன்னாள் மாணவர்களை பாராட்டி பொன்விழா ஆண்டு மலரை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.

இதில் பல்கலைக்கழக பதிவாளர் சிங்காரவேலு,  தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ், வேளாண் புல தலைவர் அங்கயற்கண்ணி மற்றும் 1974 ஆம் ஆண்டுகளில் மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவித்த முன்னாள் பேராசிரியர்கள் பாலசுப்ரமணியன், கோவிந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டு முன்னாள் மாணவர்களைப் பாராட்டி மலரும் நினைவுகளை நினைவுகூர்ந்து வாழ்த்தினார்கள்.

Ex-students who celebrated Golden Jubilee with their families at annamalai university

மேலும், அங்கு பயின்ற முன்னாள் வேளாண் மாணவர்கள் வேளாண் கல்லூரிக்கு, சங்கத்தின் சார்பாக ரூ. 3 லட்சம் செலவில் உபகரணங்கள், அறைகள் புதுப்பித்தல் போன்ற உதவிகளைச் செய்வதாக உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து குடும்பத்துடன் அனைவரும் ஆட்டம் பாட்டத்துடன் மலரும் நினைவுகளை நினைவு கூர்ந்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது, ‘50 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களை குடும்பத்துடன் சந்தித்த நிகழ்வு மறக்க முடியாத ஒன்றாக உள்ளது’ என்று கூறினார்கள்.