வயதான மூத்த குடிமக்களுக்கு மரியாதை கொடுப்பது மனித வாழ்வியலில் அரிதாக போய்விட்டது. இந்த நிலையில் ஈரோடு அரசு மழலையர் பள்ளியில் வித்தியாசமாக உலக மூத்த குடிமக்கள் தின விழா கொண்டாடப்பட்டது. தாத்தா - பாட்டிகளுக்கு குழந்தைகள் பரிசு வழங்கி அசத்தினார்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
உலக மூத்த குடிமக்கள் தினம் சென்ற 21ம் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டியே ஈரோடு அரசு மழலையர் பள்ளியில் உலக மூத்த குடிமக்கள் தின விழா கொண்டாடப்பட்டது.
குழந்தைகள் தங்களது தாத்தா பாட்டியிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். குடும்ப உறவு முறைகள் குறித்தும் ஆசிரியர்கள் விளக்கமாக குழந்தைகளுக்கு கூறினார்கள்.
இந்த அரிய நிகழ்வு வயதானவர்களை நெகிழ்ச செய்தது.
ADVERTISEMENT
Show comments