Skip to main content

அண்ணாவால் விரும்பி அரசியலுக்கு அழைக்கப்பட்டவர் ஜீ.வி. – முன்னால் அமைச்சர்கள் புகழாரம்

Published on 24/12/2018 | Edited on 24/12/2018
v

 

விஐடி பல்கலைழக வேந்தர் டாக்டர் விசுவநாதனின் 80 வது பிறந்தநாள் விழாவை இன்று வேலூரில் உள்ள மக்கள் இணைந்து வேந்தர் 80 முத்துவிழாவாக  வெகு விமர்சியாக கொண்டாடினர். இதற்கான விழா வேலூரில் உள்ள தண்டபாணி திருமண மண்டபத்தில் டிசம்பர் 23ந்தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. நிகழ்ச்சிக்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் வேதகிரி சண்முகசுந்தரம் தலைமைவகித்தார். வேந்தர் 80 முத்து விழாக்குழு செயலாளர் மு.சுகுமார்வரவேற்றார்.

 

நிகழ்ச்சியில் புதிய நீதிகட்சித்தலைவர் ஏ.சி.சண்முகம் பங்கேற்று தொடக்க உரையாற் றியபோது, முத்துவிழாக்கானும் வேந்தர் விசுவநாதன் கொள்கை பிடிப்புக்கொண்டவர், பெரியார் அண்ணாவின்  கொள்கைகளை தீவிரமாக கடைபிடித்தவர், எம்ஜிஆர் ஜெயலலிதாவின் அன்பைபெற்றவர், கொள்கை பிடிப்பின்காரணமாக வெற்றிக்கண்டவர். நாடாளுமன்றத்தில் விவாதங்களில் பங்கேற்று கொள்கைகளை ஆணித்தரமாக வாதிட்டவர் அவர் நூற்றாண்டு காண வாழ்த்துகிறேன் என்றார்.

 

அதைத்தொடர்ந்து நடைபெற்ற காப்புகட்டு என்ற நிகழ்ச்சியில் வியர்வையின் வெற்றி என்ற நூலை மாநில வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுதுறை அமைச்சர் கே.சி.வீரமணி வெளியிட புதியநீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் அமைச்சர் கே.சி.வீரமணி பேசும்போது, திராவிட இயக்க அரசியலில் அறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர்  எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா என்ற முப்பெரும் தலைவர்களிடம் அரசியல் கற்றுக்கொண்டவர் வேந்தர். எதையும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி காணமுடியும் என்பதில் திடமான நம்பிக்கை கொண்டவர்.  அரசியலுக்கு அண்ணாவால் அடையாளம் காட்டப்பட்டு எம்ஜிஆர், ஜெயலலிதாவின் அரவனைப்பால் அமைச்சர் பதவி பெற்றவர். அவரது மகன்கள் அவருக்கு தூண்களாக விளங்கி விஐடி என்ற கல்விக்கோயிலை காத்து வருகின்றனர். முத்துவிழா கண்டுள்ளவேந்தர் விசுவநாதன் நூற்றாண்டு விழாவையும் கொண்டாட வாழ்த்துகின்றேன் என்றார்.

 

நிகழ்ச்சியில் புஸ்பாசொருப் என்ற எழுத்தாளர் உருவாக்கிய ஸ்டார்ஸ் அண்டு சேப்ளிங்ஸ் (Stars and Saplings)  என்ற ஆங்கில நூலினை  தமிழகமேனாள் அமைச்சர் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் வெளியிட சென்னை வேல்ஸ் நிகர்நிலை பல்கலைக் கழகத்தின் நிறுவனர் மற்றும் தலைவர்ஐசரி.கே.கனேஷ் பெற்றுக்கொண்டார். தமிழகத்தில் உள்ள கவிஞர்கள் வேந்தரைபற்றி இயற்றிய 84 கவிதைகள் கொண்ட வேந்தர் 80 கவிமலர் தொகுப்பு நூலினை தமிழகமேனாள் அமைச்சர்சி பொன்னையன் வெளியிட திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் கலைப்புலிஎஸ்.தாணு பெற்றுக்கொண்டார்.

 

நிகழ்ச்சியில் தமிழக முன்னால் அமைச்சர் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் வாழ்த்தி பேசும்போது, அண்ணா தொடங்கிய  இயக்கத்தில் எத்தனையோ பேர் அண்ணாவை நோக்கி சென்றனர். ஆனால் அண்ணாவால் விரும்பி அழைக்கப்பட்டவர் ஜி.விசுவநாதன். விழுப்புரத்தில் நடைபெற்ற இயக்க பொதுக்கூட்டத்திற்கு பிறகு எங்களிடம் அண்ணா சொன்னது நாடாளுமன்ற தேர்தலில்  வந்தவாசி தொகுதியில் விசுவநாதன் என்ற வேலூர் இளைஞரை நிற்கவைக்கபோகிறேன் என்று கூறினார். காரணம் விசுவநாதன் ஆற்றியமேடைப்பேச்சை கேட்ட அண்ணாவிற்கு அவரின் அரசியல் புலமையை எடுத்துக்காட்டியது.

 

நாடாளுமன்றத்தில் பிரதமராக இருந்த இந்திராகாந்தி கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கமுடிவு செய்தபோது அதை எதிர்த்தவர் ஜி.விசுவநாதன். கச்சத்தீவில் தமிழர்களின் உரிமைபறிக்கப்பட்டுள்ளது,. அதேபோன்று முல்லைப்பெரியாறு அணைவிவகாரம் காவிரிநீர்பிரச்னை என்றுதமிழர்களுக்குஎதிரான  பல்வேறு பிரச்னைகள் கடந்த 50 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ளது. அதைதீர்க்க ஜி.வி.போன்றவர்கள் தலையிட்டால் தீர்க்கமுடியம், தீராதமக்கள் பிரச்னைகளை தீர்க்க மக்கள் ஒரு குடையின் கீழ் வரவேண்டும் அதனை ஜி.வியால் உருவாக்கமுடியும் அதனை உருவாக்கி தமிழகத்தில் வரலாறு படைக்க வேண்டும் என்றார். 

 

முத்து விழாவில் தமிழகமேனாள் அமைச்சர்சி பொன்னையன் வாழ்த்தி பேசுகையில் முத்துவிழாக்காணும் விசுவநாதன் தீர்க்கசிந்தனை கொண்டவர் நுண்ணறிவு படைத்தவர் எதிலும் துணிந்து செயல்படக்கூடியவர். அதில்வெற்றியும் கண்டவர். கல்வித்துறையில் விஐடி என்ற நிறுவனத்தை உருவாக்கி தமிழகம்மட்டுமின்றி நாட்டளவில் முதலிடத்திற்கு அதனைகொண்டு சென்றுள்ளார். இது அவரது திறமையின் வெளிப்பாடு. உலகில் உள்ள தமிழர்களை ஒருகுடையின் கீழ்கொண்டு வரவேண்டும் என்பதற்காக தமிழியக்கத்தினை உருவாக்கியுள்ளார். அவரது இந்ததமிழ்ப்பணி வளரட்டும் என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

இமெயிலில் வந்த தகவல்; பதறிய விஐடி பல்கலைக்கழகம்

Published on 15/12/2023 | Edited on 15/12/2023
 threat to VIT University

வேலூர் காட்பாடி பகுதியில் உள்ளது விஐடி தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகம். 300 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த பல்கலைக்கழகத்தில் சுமார் 30,000-க்கும் மேற்பட்ட உள்நாட்டு - வெளிநாட்டு மாணவ-மாணவியர்கள் பயின்று வருகிறார்கள். லட்சக்கணக்கில் நன்கொடை, கட்டணம் செலுத்துபவர்கள் மட்டுமே இதில் பயில முடியும். நாட்டில் போபால், சென்னை உட்பட வேறு சில இடங்களிலும் வி.ஐ.டி கல்வி நிலையம் செயல்படுகிறது. வேலூர் பல்கலைக்கழகத்தின் மீது அரசு நீர்நிலை பகுதிகள் ஆக்கிரமிப்பு உட்பட சில குற்றச்சாட்டுகள், சர்ச்சைகள் உண்டு.

இந்நிலையில், வேலூர் விஐடி பல்கலைக்கழகத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பதாக கூறப்படுகிறது. விஐடி பல்கலைக்கழகத்தின் இமெயிலுக்கு மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்ததாக விஐடி பல்கலைக்கழகத்தின் மூலம் வேலூர் மாவட்ட காவல்துறைக்கு நேற்று மாலை புகார் அளிக்கப்பட்டது.

வேலூர் மாவட்ட எஸ்பி மணிவண்ணன் தலைமையில் 10 பேர் கொண்ட ஆறு குழுக்கள், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட போலீசார் விஐடி பல்கலைக்கழகத்திற்கு விரைந்து சென்று பல்கலைக்கழகம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர். போலீசார் மற்றும் பல்கலைக்கழகத்தின் தரப்பில் மாணவர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் கூறி வருகின்றனர். நள்ளிரவு வரை தொடர்ந்த சோதனையில் எந்த ஒரு வெடிபொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Next Story

கஞ்சா விற்பனை செய்த விஐடி பல்கலைகழக மாணவர்கள் 8 பேர் கைது!

Published on 12/02/2020 | Edited on 12/02/2020

வேலூர் மாவட்டம், காட்பாடி காவல்நிலைய எஸ்.ஐ ராஜசேகருக்கு, கஞ்சா விற்பனை குறித்து வந்த தகவலின் அடிப்படையில் போலீஸார் பிப்ரவரி 10ந் தேதி பழைய காட்பாடியில் உள்ள ஒரு வீட்டில் நள்ளிரவு அதிரடியாக ரெய்டு நடத்தியுள்ளனர். அந்த ரெய்டில் 12 கிலோ கஞ்சாவுடன் 8 பேர் சிக்கியுள்ளனர். அவர்களிடம் விசாரித்தபோது, 8 பேரும் வேலூரில் பிரபலமாகவுள்ள விஐடி பல்கலைகழகத்தில் படிப்பதாக தகவல் கூறியுள்ளனர். அதனை போலீஸாரும் உறுதி செய்துக்கொண்டுள்ளனர்.

 

Eight students arrested for selling cannabis

 

வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ளது பிரபலமான விஐடி நிகர்நிலை பல்கலைக்கழகம். முன்னாள் அரசியல்வாதியான விஸ்வநாதன் குடும்பத்தாரால் நடத்தப்படுகிறது. இந்த நிகர்நிலை பல்கலைகழகத்தின் கிளைகள் சென்னை, போபால் போன்ற இடங்களிலும் உள்ளன.

இந்த பல்கலைகழகத்தில் சேர தனியாக நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. பெரிய அளவில் கல்வி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பெரும்பாலும் பணக்காரர்கள், அதிகாரத்தில் உள்ளவர்களின் வாரிசுகள் படிக்கும் பல்கலைகழகமாக இருப்பதால் யாரையும் இந்த பல்கலைக்கழகம் கட்டுப்படுத்துவதில்லை. இதனாலயே கஞ்சா விற்பனை செய்து 12 மாணவர்கள் சிக்கியுள்ளார்கள்.

அடிக்கடி இந்த பல்கலைகழகத்தில் பலமுறை மாணவர்களுக்குள் கத்தி குத்துயெல்லாம் நடந்துள்ளன. பல்கலைகழக வளாகத்தில், விடுதியில் மாணவர்கள் தற்கொலை என தகவல்கள் வெளியே வரும், அதன் உண்மை தன்மையை வெளியே வரவிடாமல் கல்லூரி நிர்வாகம் தனது அரசியல், பண அதிகாரத்தை வைத்து தடுத்து வருகிறது என்கிற குற்றச்சாட்டும் உள்ளது.