Skip to main content

நத்தம் விஸ்வநாதனின்  மச்சானுக்கு கட்சியில்  மாநில பதவி!

Published on 25/12/2018 | Edited on 25/12/2018
v

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் மச்சான் கண்ணன் தனது மாமனுடன் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டு வந்தார். அதன் அடிப்படையில்தான் முன்னாள் முதல்வர் ஜெ. இருந்த போது முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் மச்சானுக்கு ஜெ. பேரவையின் மாவட்ட இணைச் செயலாளர் பதவியை கொடுத்திருந்தார்.  அதைத்தொடர்ந்து நத்தம் தொகுதி செயலாளராகவும் கண்ணனை  நியமித்தார். அதன்பின் திடீரென அந்த பதவியை ஜெ. பறித்து விட்டார்.  அதன் பின் கட்சியில் பொறுப்பு இல்லாமல் இருந்தாலும்  கூட தொடர்ந்து  மாமனுடன்  சேர்ந்து நத்தம் தொகுதி மற்றும் மாவட்ட அளவில் அரசியலில் ஈடுபட்டு வந்தார் கண்ணன்.
      

   இந்த நிலையில் தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓபிஎஸ், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடியும் சேர்ந்து முன்னாள்  அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் மச்சான் கண்ணனுக்கு ஜெ. பேரவையின் மாநில இணைச் செயலாளர் பதவியை கொடுத்து இருக்கிறார்கள்.   அதைக் கண்டு  திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விஸ்வநாதன் ஆதரவாளர்களான நெப்போலியன், திருமாறன் உள்பட  பலரும்  அங்கங்கே  வெடி வெடித்தும் இனிப்புகள் கொடுத்தும் கொண்டாடினார்கள்.  அதை தொடர்ந்து வேம்பார்பட்டியில் உள்ள  விஸவநாதனின் மச்சான் கண்ணனை சந்தித்து  சால்வை, மாலை அணிவித்து வாழ்த்து  கூறினார்கள்.
 

சார்ந்த செய்திகள்