Skip to main content

தாயின் கண்ணை தானம் செய்த பார்வையற்ற மாற்றுத் திறனாளி

Published on 18/02/2023 | Edited on 18/02/2023

 

visually impaired person who donated his mother eye

 

35 ஆண்டுகளாக வெளிச்சத்தையே பார்க்காத பார்வையற்ற மாற்றுத் திறனாளி தனது தாயாரின் கண்களைத் தானமாகக் கொடுத்து பார்வையற்றவர்களுக்கு ஒளியும், வழியும் ஏற்படுத்திக் கொடுத்த சம்பவம்  அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் அடுத்துள்ள கிராமம் மேலக்குறிச்சி. அங்குள்ள காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பழனிவேல் அஞ்சலையம்மாள் தம்பதியினரின் மகன் அசோக்குமார். 35 வயதுடைய அசோக் 1 வயதாக இருக்கும் போதே மூளைக் காய்ச்சலால் இரு கண்களின் பார்வையும் இழந்துள்ளார். அன்று முதல் 35 ஆண்டுகளாகப் பார்வை இல்லாமல் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் அசோக்குமாரின் தாயார் அஞ்சலையம்மாள் உடல் நலக்குறைவால் காலமானார். இந்த நிலையில் கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளியான அசோக்குமார் தன்னைப் போல் பார்வை இல்லாதவர்களுக்காகத் தன் தாயாரின் கண்களைத் தானம் செய்ய முன்வந்தார். இதையடுத்து லயன்ஸ் கிளப் ஆஃப் நாகை போர்ட் டவுன் தலைவர் சண்முகம் மூலமாக கும்பகோணத்தில் உள்ள மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையைத் தொடர்பு கொண்டு விவரத்தைக் கூறியுள்ளார். அதன் பேரில் நள்ளிரவு மேலக்குறிச்சிக்கு சென்ற மருத்துவக் குழுவினர்கள் அஞ்சலையம்மாளின் கண்களைத் தானமாகப் பெற்றுச் சென்றனர்.

 

தனக்கு கண் பார்வை இல்லையென்றாலும் தன்னைப் போன்றவர்கள் கண் பார்வை பெற வேண்டும் என்பதற்காக தனது தாயின் கண்களைத் தானம் வழங்கிய அசோக்குமாரின் செயலைக் கண்டு அப்பகுதி கிராம மக்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர். பார்வையற்ற அசோக்குமார் இது குறித்து கூறும்போது, "தனக்கு ஒரு வயது இருக்கும் போது மூளைக்காய்ச்சல் காரணமாக பார்வை நரம்புகள் பாதிக்கப்பட்டு முற்றிலும் பார்வை இழந்துவிட்டது. இனி எனக்கு பார்வை கிடைக்க வாய்ப்பில்லை. இதனால் விழி இல்லாத வலியை நான் அனுபவித்து வருகிறேன். அந்த வலியை எனது அம்மாவின் கண்கள் மூலமாகப் பார்வையற்றவர்களுக்கு ஒளியாக்குவதற்காகத் தானமாக வழங்கி உள்ளேன். நாம் இறந்த பிறகு எரிக்கலாமா, புதைக்கலாமா என்று யோசிக்காமல் நமது உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க முன்வர வேண்டும்" என்கிறார்.

 

தனக்கு பார்வை கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை தன்னைப் போல் உள்ளவர்களுக்கு பார்வை கிடைக்க வேண்டும் என்பதற்காக உடல் தானம் பற்றி அறியாத குக்கிராமத்தில் இருந்துகொண்டு  தன் தாயின் கண்களைத் தானம் செய்துள்ள அசோக்குமார், மனைவி மற்றும்  3 மற்றும் 2 வயதுள்ள இரண்டு பெண் குழந்தைகளோடு வறுமையின் பிடியில் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தான் குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா இல்லாத காரணத்தினால் எந்த வித அரசு சலுகைகளும் பெற முடியாமல் தவித்து வருவதால் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு தனது எதிர்காலத்திற்கு உதவ வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார். அடுத்தவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றும் மனதுடைய அசோக்குமாரின் வாழ்விலும் ஒளியேற்றுவது நம் அனைவரின் கடமையாகும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ பற்றி எரிந்த குடிசை வீடுகள்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
nagai cottages incident Case against BJP

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் நாகையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதனை அறிந்து அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் வீரமணி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் பாஜகவினர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தடைசெய்யப்பட்ட வெடியை விற்பனை செய்த, தம்பிதுரை பூங்கா அருகே உள்ள வெடி கடைக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.  

Next Story

பாஜக வெடித்த பட்டாசு; இரண்டு குடிசைகள் எரிந்து நாசம்; மக்கள் போராட்டம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
BJP burst firecrackers; Two huts were destroyed by fire; People's struggle

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் நாகையில் பாஜக வேட்பாளர் பிரச்சாரத்தின்போது வெடிக்கப்பட்ட பட்டாசு இரண்டு குடிசைகள் மீது பட்டு, பற்றி எரிந்துள்ளது. இதனால் குடிசை வீடுகள் இரண்டு முற்றிலும் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்தப் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இந்நிலையில் அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துபூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.