Skip to main content

‘பணம் கொடுக்கிறீயா, இல்ல போஸ்டர் ஒட்டவா?’ - ஆடியோவால் சிக்கிய விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகி

Published on 17/03/2023 | Edited on 17/03/2023

 

Vishwa Hindu Parishad administrator who threatens money

 

“ஒழுங்கா நா கேக்குற பணத்த கொடுத்துடு.. இல்லனா உன்ன பத்தி தப்பு தப்பா போஸ்டர் ஒட்டிடுவோம்” என பாதிரியாருக்கு வலைவீசும் விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகியின் ஆடியோ சோசியல் மீடியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

 

அரியலூர் மாவட்டம் எம்.ஐ.என் நகர் பகுதியில் உள்ள தூய லூர்து அன்னை ஆலயத்தில் பாதிரியாராக இருப்பவர் டோமினிக் சாவியோ. கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இந்த ஆலயத்தில் பங்குத்தந்தையாக இருந்து வரும் நிலையில், ஆர்.சி. பள்ளியின் தாளாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், பாதிரியார் டோமினிக் சாவியோவிற்கு எதிராகவும், அவர் நடத்தி வரும் பள்ளிக்கு எதிராகவும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அரியலூர் மாவட்டச் செயலாளர் முத்துவேல் என்பவர் தொடர்ந்து அவதூறு பரப்பி வந்துள்ளார்.

 

மேலும், இந்த முத்துவேல் மீது 15க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. மதமாற்றம் செய்ய முயன்றதாகக் கூறி சில கிறிஸ்தவர்களைத் தாக்கியது, இரு மதத்தினர் இடையே பகைமையைத் தூண்டும் விதத்தில் நோட்டீஸ் அடித்து ஒட்டியது என ஏகப்பட்ட வழக்குகள் இவர் மீது இருக்கின்றது.

 

அதுமட்டுமின்றி, கடந்தாண்டு ஜனவரி மாதத்தில் தஞ்சை பள்ளியில் படித்துக்கொண்டிருந்த மாணவி ஒருவரை மதமாற்றம் செய்யக்கோரி வற்புறுத்தியதால் அந்த மாணவி தற்கொலை செய்துகொண்டதாக பொய்யான வீடியோவை வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியவரும் இந்த முத்துவேல் தான். இந்நிலையில், அதன் தொடர்ச்சியாக தற்போது டோமினிக் சாவியோவிற்கு எதிராக அவதூறு பரப்பி வந்துள்ளார்.

 

"கிறிஸ்துவ பள்ளிக்கூடங்களில் படிக்கும் இந்துக்களே உஷாராக இருங்கள். உங்கள் பிள்ளைகளை இங்கு படிக்க வைக்காதீர்கள். அரியலூர் பள்ளிக்கூடங்களில் இந்துப் பெண்களை வன்கொடுமை செய்யும் பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்ற வார்த்தைகளுடன் பிளக்ஸ் போர்டு அடித்து அரியலூர் மாவட்டத்தில் ஆங்காங்கே வைக்கப்படும் எனவும், பாதிரியாருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்படும் எனவும் கூறிக்கொண்டு முத்துவேல் தலைமையில் டோமினிக் சாவியோவை கட்டம் கட்டியுள்ளனர்.

 

அதுமட்டுமின்றி, அவரிடம் 25 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த டோமினிக் சாவியோ, தான் எந்த தவறும் செய்யவில்லை என்பதால் பணம் ஏதும் கொடுக்க முடியாது எனக் கூறியுள்ளார். அதன்பிறகு, பாதிரியார் டோமினிக் சாவியோவை பழிவாங்க நினைத்த முத்துவேல், அவரை பற்றி சோசியல் மீடியாவில் அவதூறு பரப்பியுள்ளார். ஒரு கட்டத்தில் தனது பொறுமையை இழந்த டோமினிக் சாவியோ முத்துவேல் மீது அரியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் முத்துவேலை கைது செய்த போலீசார், அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வெளியான முத்துவேலின் ஆடியோ, சோசியல் மீடியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.