Skip to main content

காலி சேர்களைப் பரப்பி காங்கிரஸ் நடத்திய கூட்டம்! -பத்திரிக்கை போட்டோகிராபரைத் தாக்கிய காலிகள்!

Published on 07/04/2019 | Edited on 07/04/2019

 

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி  காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் மாணிக்கம் தாகூர். அதனால், விருதுநகரில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்று சிறப்புரையாற்றினார்   தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.  

 

t


நகராட்சி திடலில் நடந்த அந்தக் கூட்டத்தில் இருக்கைகள் பலவும் காலியாகக் கிடந்தன.  விகடன் குழும புகைப்படக்காரர் முத்துராஜ் அந்தக் காலி இருக்கைகளைப் படம் பிடித்தார். இதனைக் கண்ட காங்கிரஸ் கட்சியினர், அவர் மீது பாய்ந்தனர். ஒருவர் முத்துராஜை பின்புறமாக இறுகப்பிடித்துக்கொள்ள, வேறு இருவர் மாறிமாறித் தாக்கினர். உடனே, சக பத்திரிக்கை யாளர்கள் தாக்குதலில் ஈடுபட்ட காங்கிரஸ்காரர்களிடமிருந்து முத்துராஜை மீட்டனர். பத்திரிக்கையாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தவுடன், காங்கிரஸ் கட்சியினர் ஓட்டம் பிடித்தனர். 

 

k


விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார் முத்துராஜ். நடந்த காட்டுமிராண்டித்தனம் குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.   
கதர்ச்சட்டையினர் பத்திரிக்கை புகைப்படக்காரர் மீது காட்டிய வேகத்தை, கட்சி நடவடிக்கைகளிலும்  கூட்ட ஏற்பாட்டிலும் காட்டியிருந்தால், இருக்கைகள் காலியாக இருந்திருக்காது அல்லவா! தமிழகத்தில் குறைவான வாக்கு வங்கி உள்ள காங்கிரஸ் கட்சிக்கு, தேர்தல் அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில் எத்தனைபேர் கலந்துகொள்வார்கள் என்பதுகூட தெரியவில்லை. வெறும் சேர்களைப் பரப்பி  கூட்டம் நடத்துவது காமெடி அல்லவா!  விசித்திரமாக இப்படி ஒரு கூட்டம் நடத்தும்போது,  பத்திரிக்கை புகைப்படக்காரர்கள் எப்படி படம் எடுக்காமல் இருப்பார்கள்? 

 

akt


அரசியல் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை விருப்பு வெறுப்பின்றி மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பது பத்திரிக்கையாளர்களும் ஊடகவியலாளர்களும்தானே! பொது இடத்தில் காலி சேர்களுக்கு முன்னால் மைக் பிடித்து காரசாரமாகப் பேசும் உரிமை அரசியல்வாதிகளுக்கு இருக்கிறதென்றால்,  அதைப் படம் பிடிக்கும் உரிமையும் கடமையும் பத்திரிக்கையாளர்களுக்கு உண்டு.  நூற்றாண்டு கண்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகிக்கும் சிலர்,  இந்த அடிப்படை அறிவுகூட இல்லாதவர்கள் என்பது, இந்தத் தாக்குதல் சம்பவத்தின் மூலம் வெளிப்பட்டுள்ளது. 

 

p


கழுதை தேய்ந்து கட்டெறும்பானது போல, கோஷ்டி மோதலாலும் சுயநலத்தாலும், தமிழகத்தில் ஒருகாலத்தில் ஓகோ என்றிருந்த காங்கிரஸ், இன்று ‘அய்யகோ’ நிலைக்கு வந்துவிட்டது. காங்கிரஸ் வளர்ச்சியில் கவனம் செலுத்தாத  குறையைத் தங்களிடம் வைத்துக்கொண்டு, காலி சேர்களைப் படம்பிடித்ததை பெரும் குற்றமாகக் கருதி தாக்குதலில் ஈடுபட்டவர்களின் மடமை, நகைப்புக்குரியதாக இருக்கிறது.   

 

சார்ந்த செய்திகள்

Next Story

மடியேந்தி வாக்கு கேட்ட ராதிகா; பிரச்சாரத்தில் ருசிகரம்!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Radhika asked for vote and Delicious in the campaign

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

இதற்கிடையே, சில தினங்களுக்கு முன்பு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், தனது கட்சியை பா.ஜ.கவில் இணைத்திருந்தார். இதையடுத்து, விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடுவதற்காக நடிகை ராதிகா சரத்குமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அந்த வகையில், ராதிகா விருதுநகர் மாவட்டத்திற்குச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் கப்பலூர் பகுதியில், அ.ம.மு.க, பா.ம.க, த.மா.க கட்சி நிர்வாகிகளுடன் ராதிகாவும், சரத்குமாரும் திறந்தவெளி ஜீப்பில் சென்று பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது பேசிய ராதிகா, “என்னை நீங்கள் கண்டிப்பாக ஆதரிக்க வேண்டும். ஏனென்றால், இது ஒரு சிறப்பான கூட்டணி. இந்த கூட்டணி எது சொன்னாலும் செய்யும் கூட்டணி. ஆனால், எதிர் கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் என்று கூட தெரியவில்லை. உங்கள் சகோதரியாக, அக்காவாக, சித்தியாக இருந்து மக்கள் கோரிக்கைகளுக்காக நாடாளுமன்றத்தில் போராடுவேன். எனவே, எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் விருதுநகர் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன்” என்று கூறி அங்கிருந்து புறப்பட தயாரானார்.

அப்போது, அங்கு கூடியிருந்த மக்கள் கிழக்கு சீமையிலே படத்தில் விருமாயி கதாபாத்திரம் போல் நடித்து காட்டுமாறு கோரிக்கை வைத்தனர். இதனைக் கேட்ட ராதிகா, “அதை இன்னும் ஞாபகம் வைத்திருக்கிறீர்களா?” எனக்கூறிய அவர், கிழக்கு சீமையிலே படத்தில் பேசிய வசனத்தை சொல்லி சினிமாவில் வருவது போல் மடியேந்தி மக்களிடம் வாக்கு கேட்டார். அதனை அங்கிருந்த மக்கள், ரசித்து கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். 

Next Story

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து; ஒருவர் கைது!

Published on 18/02/2024 | Edited on 18/02/2024
sattur Fireworks Factory incident One person involved

விருதுநகர் அருகே உள்ள முத்துசாமிபுரத்தில் விஜய் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வந்துள்ளது. இந்த ஆலையில் நேற்று (17.02.2024) வழக்கம் போல பட்டாசு ஆலையில் பணிகள் நடந்து வந்தன. இத்தகைய சூழலில் மதியம் 12 மணியளவில் திடீரென பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. விபத்து நிகழ்ந்த சமயம் சுமார் 30 பேர் அங்கு பணியாற்றியதாகக் கூறப்பட்டது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதில் 7 பேரின் உடல் அடையாளம் காணப்பட்டதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் தீயை அணைத்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். பட்டாசுக்கு மருந்து கலக்கும்போது ஏற்பட்ட உராய்வின் மூலம் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ. 10 லட்சம் என்றும் படுகாயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டிருந்தார். மேலும் இந்த விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார். அதன்படி இந்த விபத்தில் உயிரிழந்த குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் பிரதமர் நிதியில் இருந்து நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில் வெடிவிபத்து சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் விக்னேஷ், மேலாளர் ஜெயபால் மற்றும் போர்மேன் சுரேஷ்குமார் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதனையடுத்து பட்டாசு ஆலையின் போர்மேன் சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தலைமறைவாக உள்ள விக்னேஷ், ஜெயபால் ஆகிய இருவரையும் போலீசார் வலைவீசி தீவிரமாகத் தேடி வருகின்றனர்.