Skip to main content

விருதுநகர் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்? மன்றாடும் மாணிக்கம் தாகூர்!     

Published on 21/03/2019 | Edited on 21/03/2019

 

“விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரா? இல்லவே இல்லை. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்தான்..” என்று எதிர் கோஷ்டியினர் தொகுதியில் பரப்பிவிட,   ‘என்னதான் நடக்கிறது?’ என்று டெல்லி சோர்ஸிடம் விசாரித்தோம். 

 

e

 

கிருஷ்ணகிரி அல்லது விருதுநகர் என்பதுதான் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் விருப்பமாக இருக்கிறது.  கிருஷ்ணகிரி செல்லக்குமாருக்கு என்பது தெரிந்துவிட்டதால்,  விருதுநகர் தொகுதியைக் கேட்கிறார். இளங்கோவனுக்கு விருதுநகரை ஒதுக்குவதற்கு காங்கிரஸும் விரும்பவில்லை. திமுகவும் ஓகே சொல்லவில்லை. அதனால், தனக்கென்று  தொகுதி இல்லாத நிலையில் இளங்கோவன் டென்ஷன் ஆகிவிட்டார்.  தன்னுடைய ஆதரவாளரான முன்னாள் விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கணேசன் போன்றவர்களைத் தூண்டிவிட்டு, மாணிக்கம் தாகூருக்கு எதிராக  தலைமைக்குப் புகார்களைத் தட்டிவிடச் செய்தார்.

 

இதன்மூலம்,  விருதுநகர் தொகுதியில் கதர்ச்சட்டைகள் மத்தியிலேயே  மாணிக்கம் தாகூர் மீது அதிருப்தி நிலவுகிறது என்பதை சீரியஸான விவகாரமாக டெல்லி வரையிலும் கொண்டுபோக முடிந்தது. தனது ஆதரவாளர்கள் தரும் தொடர் அழுத்தத்தால்,  விருதுநகர் தொகுதி தனக்குக் கிடைத்துவிடும் என்றும் விருதுநகருக்குப் பதிலாக சிவகங்கையில் மாணிக்கம் தாகூர் போட்டியிடட்டும் என்றும் இளங்கோவன் காய் நகர்த்திவருவதை அறிந்த மாணிக்கம் தாகூர், விருதுநகர் தொகுதியைத் தவிர வேறு எந்தத் தொகுதியிலும் நிற்கப்போவதில்லை என்ற தனது நிலைப்பாட்டில் உறுதி காட்ட ஆரம்பித்திருக்கிறார்.  

 

m

 

சிவகங்கையிலோ,  கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான லாபி ஒன்று வேகம் காட்டிவருகிறது. அதனால், சிவகங்கையில் மாணிக்கம் தாகூரை நிற்க வைக்கலாம் என்ற திட்டத்தைக்  கட்சித் தலைமை வரைக்கும் கொண்டு போயிருக்கின்றனர்.  திமுக தரப்பிலோ, இத்தொகுதியின் முன்னாள் எம்.பி.யாக இருந்தவர் என்பதால்,  மாணிக்கம் தாகூர்தான் சரியான தேர்வாக இருக்க முடியும் என்று தங்களின் கருத்தை முன்வைத்திருக்கின்றனர். மாணிக்கம் தாகூரோ,  ‘ஒருவேளை சிவகங்கை தொகுதியைத் தனக்கு மாற்றிக் கொடுத்து, விருதுநகர் தொகுதியில்  எதிர் அரசியல் செய்பவர்களின் திட்டம் பலித்துவிட்டால்?’ என்ற கோணத்தில் சிந்தித்து, முடிந்தமட்டிலும் மன்றாடுகிறார்.    அவரிடம்  ‘கரும்பு தின்னக் கூலியா? தொகுதியில் பெரிய அளவில் மக்கள் செல்வாக்கில்லாத  கார்த்தி சிதம்பரத்துக்கே கடந்த தேர்தலில் 1,04,678 வாக்குகள் கிடைத்திருக்கின்றன. காரணம் – காங்கிரஸ் வாக்கு வங்கி வலுவாக உள்ள தொகுதி சிவகங்கை.’ என்று தூபம் போட்டு வருகின்றனர். 

 

விருதுநகர் தொகுதியில் உள்ள இளங்கோவன் ஆதரவாளர் ஒருவர் “அண்ணன் 70 வயதைக் கடந்துவிட்டார். இந்தத் தடவை சீட் கிடைக்கவில்லை என்றால், அடுத்துவரும் தேர்தலில் நிச்சயம் சீட் தர மாட்டார்கள். அப்படி நடந்துவிட்டால்,   அவருடைய அரசியலே அஸ்தமித்துவிடும்.  அதனால்தான், விருதுநகர் தொகுதியைப் பிடிவாதமாகக் கேட்டு வருகிறார்.  என்ன நடக்கப்போகிறதோ தெரியவில்லை.” என்று விசுவாசத்தை வெளிப்படுத்தினார். 

 

கேட்டவருக்கெல்லாம் பிய்த்துத்தர பாராளுமன்ற தொகுதி அப்பம் அல்லவே! 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மடியேந்தி வாக்கு கேட்ட ராதிகா; பிரச்சாரத்தில் ருசிகரம்!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Radhika asked for vote and Delicious in the campaign

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

இதற்கிடையே, சில தினங்களுக்கு முன்பு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், தனது கட்சியை பா.ஜ.கவில் இணைத்திருந்தார். இதையடுத்து, விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடுவதற்காக நடிகை ராதிகா சரத்குமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அந்த வகையில், ராதிகா விருதுநகர் மாவட்டத்திற்குச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் கப்பலூர் பகுதியில், அ.ம.மு.க, பா.ம.க, த.மா.க கட்சி நிர்வாகிகளுடன் ராதிகாவும், சரத்குமாரும் திறந்தவெளி ஜீப்பில் சென்று பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது பேசிய ராதிகா, “என்னை நீங்கள் கண்டிப்பாக ஆதரிக்க வேண்டும். ஏனென்றால், இது ஒரு சிறப்பான கூட்டணி. இந்த கூட்டணி எது சொன்னாலும் செய்யும் கூட்டணி. ஆனால், எதிர் கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் என்று கூட தெரியவில்லை. உங்கள் சகோதரியாக, அக்காவாக, சித்தியாக இருந்து மக்கள் கோரிக்கைகளுக்காக நாடாளுமன்றத்தில் போராடுவேன். எனவே, எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் விருதுநகர் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன்” என்று கூறி அங்கிருந்து புறப்பட தயாரானார்.

அப்போது, அங்கு கூடியிருந்த மக்கள் கிழக்கு சீமையிலே படத்தில் விருமாயி கதாபாத்திரம் போல் நடித்து காட்டுமாறு கோரிக்கை வைத்தனர். இதனைக் கேட்ட ராதிகா, “அதை இன்னும் ஞாபகம் வைத்திருக்கிறீர்களா?” எனக்கூறிய அவர், கிழக்கு சீமையிலே படத்தில் பேசிய வசனத்தை சொல்லி சினிமாவில் வருவது போல் மடியேந்தி மக்களிடம் வாக்கு கேட்டார். அதனை அங்கிருந்த மக்கள், ரசித்து கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். 

Next Story

“கோட்சே பேரன்களின் கொள்கை தோற்கடிக்கப்பட வேண்டும்” - காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பிரச்சாரம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
 Politics of Godse's grandsons must be defeated said Congress candidate Manickam Tagore

விருதுநகர் மாவட்டம் – ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள கிருஷ்ணன் கோயிலில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் மற்றும் விருதுநகர் பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரச்சார உரையாற்றினார்.

இந்தக் கூட்டத்தில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினரும் விருதுநகர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளருமான மாணிக்கம் தாகூர் பேசியபோது, “என்னுடைய பார்வையில், தளபதி மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு கட்டத்திலும் தொடர்ந்து உயர்ந்த நிலைக்கு சென்றபடியே இருக்கிறார். நாளை என்னவாக உயர்வார் என்பதற்குக் காலம் பதில் சொல்லும்.

 Politics of Godse's grandsons must be defeated said Congress candidate Manickam Tagore

ஆனால் அவர் இந்தியாவினுடைய பிரதமராக ராகுல் காந்தி வருவதற்கு முழு ஆதரவு தருவார் என்பது மட்டும் நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கவிருக்கின்ற தேர்தல், இரு கொள்கைகளுக்கான தேர்தல். ஒரு பக்கம் கோட்சேவின் பேரன்களும் அவருடைய கொள்கைகளும். 20 கோடி சிறுபான்மையின மக்களை அடிமைகளாக சிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ்.ஸின் கொள்கை. பெரும் பணக்காரர்களாக இருக்கின்ற அதானிக்கு இந்தியாவின் செல்வங்களை அள்ளிக் கொடுக்கத் துடிக்கும் மோடி, அமித்ஷாவின் கொள்கை.

இன்னொரு பக்கம், அனைவருக்கும் சமமான இந்தியாவை உருவாக்க வேண்டுமென்று மகாத்மா காந்தி மற்றும் தந்தை பெரியார் பேரன்களின் இந்தக் கூட்டணி. இந்த இந்தியா கூட்டணி அனைவருக்கும் அனைத்தும் என்ற கொள்கையைக் கொண்ட கூட்டணி. இந்தக் கூட்டணி வெல்ல வேண்டுமென்றால், உங்களுடைய ஆதரவு முழுமையாகத் தேவை. இந்தக் கூட்டணி வெல்ல வேண்டுமென்றால் கோட்சே தோற்கடிக்கப்பட வேண்டும். கோட்சேவின் கொள்கை தோற்கடிக்கப்பட வேண்டும். காந்தியா? கோட்சேவா? என்ற நிலையிலே இன்று நிற்கிறோம். மோடியா? ராகுல் காந்தியா? என்ற நிலையிலே நிற்கிறோம். இதிலே தளபதியார் ராகுல் காந்தியோடு நிற்கிறார். அவருடைய ஆசியோடு கை சின்னத்துக்கு வாக்கு தாருங்கள் என்று இரு கரம் கூப்பி வேண்டி விடைபெறுகிறேன்.”  எனப் பேசினார்.