Skip to main content

நுகர்வோர் ஏமாளிகள் அல்ல! -தரமற்ற ஸ்கூல் பேக் வழக்கில் ‘நச்’ தீர்ப்பு!

Published on 04/07/2019 | Edited on 04/07/2019

 

‘நுகர்வோர் உரிமை குறித்த விழிப்புணர்வு நம்மில் பலருக்கும் இல்லவே இல்லை.  அதனால்தான் விற்பனையாளர்களால் ஒவ்வொரு நாளும் நுகர்வோர் ஏமாளிகள் ஆக்கப்படுகின்றனர்.’ என்பது பொதுவான கருத்தாக உள்ளது. 

 

m

 

நுகர்வோர் என்றால் யார்? பணம் கொடுத்து ஒரு பொருளை வாங்குபவர்தான் நுகர்வோர். அவரே, பணம் கொடுத்து சேவையைப் பெறுபவரும் ஆகிறார். அந்த வகையில், நாம் அனைவருமே நுகர்வோர்தான். அந்த நுகர்வோருக்கு, நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் சில உரிமைகளை வழங்குகிறது. 1986-க்கு முன், அதாவது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு, நுகர்வோர் தங்களுக்கு இழைக்கப்படும் எல்லா அநீதிகளையும் பொறுத்துக்கொள்ள வேண்டிய அவலம் இருந்தது. அதன்பிறகு, நிலைமை மாறிவிட்டது. எந்த ஒரு நுகர்வோரும், தான் வாங்கிய பொருளில் குறையோ, சேவையில் குறைபாடோ இருந்தால், நுகர்வோர் நீதிமன்றத்தை நாட முடியும். இழந்த நஷ்டத்தை அபராதத்துடன் பெறமுடியும். இதன்மூலம், மற்ற நுகர்வோரும் நஷ்டம் அடையாதவாறு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.  

 

m

விழிப்புணர்வு மிக்க நுகர்வோர் ஒருவர் தொடர்ந்த வழக்கையும், அவருக்குக் கிடைத்த நல்லதொரு தீர்ப்பையும் இங்கே விவரித்திருக்கிறோம்.  

 

விருதுநகரைச் சேர்ந்த சரவணன் என்பவர், 3-வது வகுப்பு படிக்கும் தன் மகனுக்கும், 1-ஆம் வகுப்பு படிக்கும் தன் மகளுக்கும், கடந்த 30-5-2016 அன்று இரண்டு ஸ்கூல் பேக்குகளை, அதே ஊரில் உள்ள டாப் பேக் சித்தார்த் அசோசியேட்ஸ் என்ற கடையில், ரூ.1200 விலைக்கு வாங்கினார். இரண்டே வாரங்களில்,  அந்த பேக்குகளில் ஜிப் மூடும் பகுதி பிரிந்துவிட்டது. இதுகுறித்து அவர் டாப் பேக் கடையில் முறையிட, சரிசெய்து கொடுத்தனர். அதனை வீட்டுக்கு எடுத்துச்சென்று பிள்ளைகளிடம் கொடுத்தார். அதே நாளில், இரு பேக்குகளில் ஒன்றின் கைப்பிடி பிரிந்து வந்துவிடும் நிலையில் இருந்தது. அதனால் மன உளைச்சலுக்கு ஆளான சரவணன், மீண்டும் அந்த பேக் கடைக்குச் சென்று, பேக்குகள் தரமற்றவையாக இருக்கின்றன என்று கூறியிருக்கிறார். பதிலுக்கு அக்கடைக்காரர்,  “பேக் என்றால் அப்படித்தான் இருக்கும்..” என்று அலட்சியமாகப் பேசிவிட்டு, “இந்த பேக் நாங்கள் தயாரித்தது அல்ல. மதுரையில் உள்ள டாப் பேக் பிரைவேட் லிமிடெட்டின் தயாரிப்பு.” என்று, வாடிக்கையாளரின் புகாரை  மதுரையில் உள்ள நிறுவனத்தின் மீது திருப்பினர். 

 

s

 

தரமற்ற பேக்குகளை அதிகவிலையில் வாடிக்கையாளர் தலையில் கட்டிவிட்டு, நோகடிக்கவும் செய்ததால் மன உளைச்சலுக்கு ஆளான சரவணன், விருதுநகர் மற்றும் மதுரையில் இயங்கிவரும்  ‘டாப் பேக்’ நிறுவனத்துக்கு ‘லீகல் நோட்டீஸ்’ அனுப்பினார். பதில் நோட்டீஸ் அனுப்பிய அந்நிறுவனத்தினர், ஒருகட்டத்தில் வேறு பேக்குகள் தருகிறோம் என்று சமரசத்துக்கு வந்தனர். அப்படியென்றால், வழக்கறிஞருக்காக செலவழித்த தொகையை, அவருக்குக் கொடுத்துவிடுங்கள் என்று கூறினார் சரவணன். டாப் பேக் நிறுவனம் மறுத்த நிலையில், வழக்கு தொடர்ந்தார். மூன்று வருடங்களாக, சரவணனுக்காக வழக்கறிஞர் மாரிகுமார் நடத்திய வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.  

v

 

அந்தத் தீர்ப்பில், தரமற்ற சோபா குறித்து  ராஜஸ்தானில் தொடரப்பட்ட  வழக்கு ஒன்றின் தீர்ப்பு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சோபா வாங்கிய சிறிது காலத்திற்குள் அதில் பழுது ஏற்பட்டால், அந்த சோபா குறைபாடுள்ள சோபா என்றும், அந்த சோபாவுக்கு உண்டான பணத்தை திருப்பிக்கொடுக்க உத்தரவிடவேண்டுமென்றும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஸ்கூல் பேக் குறித்த இந்த வழக்கின் சந்தர்ப்ப சூழ்நிலையை கவனமாக ஆய்வு செய்கின்றபோது, விற்பனையான பேக்குகள் இரண்டு வாரத்திற்குள்ளேயே பழுதடைந்துவிட்டதால், அந்த பேக்குகள் குறைபாடுள்ள பள்ளி பேக்குகள் என்றும், ராஜஸ்தான் வழக்கு தீர்ப்பின் அடிப்படையிலும், விருதுநகர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம், மேற்படி பிரச்சனைக்கு முடிவு செய்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


சரவணனுக்கு பேக்கின் விலையான ரூ.1200-ஐ உடனடியாக திரும்பக் கொடுக்க வேண்டுமென்றும்,  அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சௌகரிய குறைவுகளுக்கு ரூ.10000 நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென்றும், வழக்கு செலவுத்தொகையாக ரூ.3000-ஐ கொடுக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டிருக்கிறது விருதுநகர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம். 

 

ரூ.1200 பெறுமான ஸ்கூல் பேக்குகளுக்காக மூன்று வருடங்கள் வழக்கு நடத்தியதை,  பாமர பார்வையில் ‘இதெல்லாம் வேண்டாத வேலை; கால விரயம்’ என்று கூறிவிட முடியும். அதேநேரத்தில், தவறைத் தட்டிக்கேட்டு, நீதி கிடைப்பதற்காக அவர் போராடியதெல்லாம் தன் ஒருவருக்காக மட்டுமல்ல. நுகர்வோர் விழிப்புணர்வு பெறுவோம்!


 

சார்ந்த செய்திகள்

Next Story

“டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை” - வேட்பாளர் சரவணனை ஆதரித்து செல்லூர் ராஜு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sellur Raju supporting candidate Saravanan and critcizing amitshah

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பாக மருத்துவர் சரவணன் போட்டியிடுகிறார். இந்த நிலையில், மதுரையில் வசிக்கும் வட மாநிலத்தவர்களிடம் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வாக்கு சேகரித்தார். அப்போது, ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் அணிவிக்கும் தலைப்பாகையோடு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, வேட்பாளர் சரவணன் ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

இதனைத் தொடர்ந்து, செல்லூர் ராஜு, அதிமுக வேட்பாளர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது செல்லூர் ராஜுவிடம், “அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஊழல் செய்துவிட்டதாக அமித்ஷா கூறியிருக்கிறாரே? எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு, “அமித்ஷா ஏதோ பேச வேண்டும் என்பது போல் பேசுகிறார். திராவிட இயக்கங்கள் 1967-ல் ஆட்சிக்கு வந்தது. அன்றைக்கு மத்தியில் ஆளுகின்ற காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டு மக்களை எலிக்கறி சாப்பிட வேண்டும் என்றும் ஒரு வாரத்தில் ஒரு நாள் விரதம் இருக்க வேண்டும் என்றும் கூறினார்கள். மாணவர்கள் படிக்கின்ற விடுதிகளில் கூட மாணவர்களுக்கு ஒரு வேளை சாப்பாடு கிடையாது. ஏனென்றால் உணவு பற்றாக்குறை.

இந்த மாதிரி நிலைமை எல்லாம் அப்போது இருந்தது. மொழியாலும், கலாச்சாரத்தாலும் தமிழ்நாடு தனித்துவம் பெற்றதன் அடிப்படையில், பேரறிஞர் அண்ணா தான் தமிழ்நாடு என்று பெயர் வைத்தார். தமிழ்நாடு என்று பெயர் வைத்ததற்கு பிறகு திராவிட இயக்கங்கள் தான் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. இந்த திராவிட இயக்கங்கள் தான் ஏழை எளிய மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் செயல்படுத்துகிற திட்டங்களைத் தான் பிற மாநிலங்களில் பின்பற்றுகிறார்கள். அம்மா உணவகம் ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது

தமிழ்நாட்டில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. சிறு, குறு தொழில்களில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதல் மாநிலமாக இருக்கிறது. இங்கே வருகிற நிதியில் தான் குஜராத், பீகார் போன்ற மாநிலங்களுக்கு நிதி தருகிறார்கள். எங்கள் ஆட்சியில் ஊழல் நடக்கவில்லை. ஊழலுக்காக திமுக ஆட்சி தான் கலைக்கப்பட்டது. அவர் உண்மையாக எங்களை பற்றி குறை சொல்லவில்லை. தி.மு.க பற்றி குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி மாற்றி சொல்லி இருக்கிறார். மதுரையில் அமித்ஷா ரோட் ஷோ நடத்தினார். ஆனால் பாவம் அங்கு டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை. அவர் மட்டுமே கை காட்டிக் கொண்டு போனார்” என்று பேசினார்.

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.