Skip to main content

அண்ணனுக்கு ஒரு ‘மாவட்ட செயலாளர் பதவி’ பார்சல்! -இராஜகம்பளத்தாரின் உரிமைக்குரல்!

Published on 09/05/2020 | Edited on 09/05/2020
viruthunagar admk


ஒரு நிறுவனத்தில் வேலை காலியாக இருந்தால், அங்கு  பணியாற்ற வாய்ப்பு கேட்டு, தங்களது தகுதி மற்றும் திறமையை பட்டியலிட்டு  விண்ணப்பிப்பது நடைமுறையில் உள்ளதுதான். விருதுநகர் மாவட்டத்தில், அதிமுக மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து கே.டி.ராஜேந்திரபாலாஜியை நீக்கிய பிறகு, இம்மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, இரண்டு மாவட்ட செயலாளர்களை நியமிக்கக்கூடும் என்று பேசப்பட்டு வரும் நிலையில், மா.செ. பொறுப்பு கேட்டு,  அதிமுக தலைமைக்கு விண்ணப்பம் அனுப்பி வருபவர்கள் அதிகரித்து வருகின்றனர்.


சாம்பிளுக்கு ஒரு விண்ணப்பம்.  இது, பி.வி.ராதாகிருஷ்ணன் என்ற  தனிநபர் அனுப்பிய விண்ணப்பம் மட்டுமல்ல, அவர் சார்ந்த சமுதாயமும் சேர்ந்து அனுப்பிய விண்ணப்பம். அகில இந்திய தெலுகு சம்மேளனமும், வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜ கம்பள சமுதாய நலச்சங்கமும், தங்களது சமுதாயத்தை சேர்ந்த பி.வி.ராதாகிருஷ்ணனை, விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளராக ஆக்குவதன் மூலம், கட்சி அடையப்போகும் பலனை, சிபாரிசு கடிதத்தில் விவரித்துள்ளது.  

 

viruthunagar admk


தமிழகத்தில் 25 மாவட்டங்களில் 30 லட்சத்திற்கும் மேலான எண்ணிக்கையில் இராஜகம்பளத்து தொட்டிய நாயக்கர் மக்கள் வாழ்கின்றனர். விருதுநகர் மாவட்டம் தவிர, தூத்துக்குடி, இராமநாதபுரம், தேனி, மதுரை போன்ற தென் மாவட்டங்களிலும், திருச்சி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, கோவை, சேலம் போன்ற மத்திய மற்றும் மேற்கு மாவட்டங்களிலும் கம்பளத்தார் அதிகமாக உள்ளனர். ஆனாலும், விருதுநகர் மாவட்டமே முதன்மையானது. இம்மாவட்டத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் வாழ்கிறார்கள். பி.வி.ராதாகிருஷ்ணன் விருதுநகர் மாவட்ட செயலாளரானால், மேற்கண்ட மாவட்டங்களிலெல்லாம் கழகம் மிகப்பெரிய பலத்தைப் பெறும்.


அதிமுகவில் மாவட்ட செயலாளர் பொறுப்பினை கேட்பதற்கு எங்களுக்கு உரிமை இருக்கிறது. ஏனென்றால், நாங்களெல்லாம் காலம் காலமாக எம்.ஜி.ஆர். ரசிகர்களாக இருந்து வருகிறோம். கம்பளத்தார்கள் அதிகம் வசிக்கும் ஆண்டிபட்டி தொகுதியில்தான் முதலில் எம்.ஜி.ஆரும், அவர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவும் போட்டியிட்டு வென்றார்கள். நீண்டகால விசுவாசிகளான கம்பளத்தார்களுக்கு, கட்சி, ஆட்சி, நிர்வாகம் என்று வரும்போது, சமுதாயத்திற்குரிய பங்களிப்பு இதுவரை கிட்டவில்லை.

 

viruthunagar admk


சுதந்திரத்திற்குப் பிறகு, தமிழக அரசியல் வரலாற்றில், இதுவரை எங்கள் சமுதாயத்தினர் எட்டு  முறை மட்டுமே சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கடைசியாக, 2006-ஆம் ஆண்டு விருதுநகர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் (ஆர்.வரதராஜன் – மதிமுக எம்.எல்.ஏ.) எங்கள் சமுதாயத்தின் கடைசி சட்டமன்ற உறுப்பினர் ஆவார். ஊராட்சி மன்றத்தலைவர், ஒன்றியக்குழு உறுப்பினர் அளவில் வெற்றி பெறும் எங்கள் சமுதாயத்தினருக்கு, மாவட்டக்குழு தலைவர், ஒன்றியப் பெருந்தலைவர், நகர்மன்றத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் போன்ற பதவிகள் எட்டாக்கனியாகவே உள்ளன. கட்சியிலும்கூட, கிளைக்கழக செயலாளர்கள் என்பதைத் தவிர, ஒன்றிய, மாவட்ட அளவில், எங்கள் மக்கள் தொகை விகிதாச்சாரத்திற்கேற்ப பொறுப்புகள் வழங்கப்படுவதில்லை.

 

viruthunagar admk


மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் வம்சாவளியை சேர்ந்த ராதாகிருஷ்ணனுக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கிட வேண்டுமென,  இராஜகம்பளத்தார் அதிமுக தலைமையிடம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், விருதுநகர் மாவட்ட அதிமுக சீனியர் ஒருவர்,  “அச்சமுதாயத்தினர் பரிந்துரைக்கும் ராதாகிருஷ்ணன், 40 ஆண்டுகளாக காங்கிரஸிலும், த.மா.கா.விலும் இருந்துவிட்டு 2018-ல் அதிமுக பக்கம் வந்தவர். கே.டி.ராஜேந்திரபாலாஜியை மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கி 50 நாட்களுக்கும் மேலாகிவிட்டது.  கரோனா நெருக்கடியில் இருப்பதாலோ என்னவோ, புதிய மாவட்ட செயலாளர் என யாரும் நியமிக்கப்படவில்லை. ஆனாலும், மாவட்டம் முழுவதும் சுற்றிவந்து,  தன் சொந்தப் பணத்தில் கரோனா நிவாரணமாக அரிசிப் பைகளை வழங்கி வருகிறார் கே.டி.ராஜேந்திரபாலாஜி. கட்சியில் என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. மாவட்ட செயலாளர் ஆகவேண்டும் என்ற தவிப்பில் இந்த மாவட்டத்தில் சிலர் இருக்கிறார்கள். இவர்களுக்கு, எப்படியாவது மா.செ. பொறுப்பை வாங்கிவிட வேண்டும் என்ற துடிப்பு இருக்கிறதே தவிர, ஊரடங்கு பாதிப்பிலுள்ள மக்களுக்கு ஏதாவது நல்லது பண்ண வேண்டும் என்ற நினைப்பே இல்லை.” என்றார்.

அடுத்த மாவட்ட செயலாளர் யாரென்று அதிமுக தலைமை அறிவிக்கும் வரை, விண்ணப்பங்கள் அனுப்புவதும், விண்ணப்பிப்போர் விமர்சனத்துக்கு ஆளாவதும் ஓயப்போவது இல்லை. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
AIADMK candidate Karuppaiya campaign in Trichy

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம்  ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.

ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story

“ஜெயிச்ச கையோட வேற கட்சிக்கு போயிடாதீங்க...” - செல்லூர் ராஜு கிண்டல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Don't go to another party after winning'- Sellur Raju teased

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் வேட்பாளர்கள் அறிமுகம் நடைபெற்று வரும் நிலையில், மதுரையில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மருத்துவர் சரவணனை ஆதரித்து  மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசிக்கொண்டிருந்தபோது வேட்பாளர் சரவணன் கைகூப்பியபடி சிரித்தார். அதைப் பார்த்த செல்லூர் ராஜு,  'வலிக்கிற மாதிரி ஊசி போட்டுடாதீங்க. வலிக்காமல் ஊசி போடுங்க. தலைமை சொல்லிவிட்டால் அந்த கட்டளை தான் எல்லாமே. வேறு எதுவும் கிடையாது. இது சாமி என்றால் சாமி. சாமி இல்லை இது சாணி என்றால் சாணி. நம்மைப் பொறுத்தவரை மதித்தால் மதிப்பு, மரியாதை கிடைக்கும். மரியாதை கொடுக்கவில்லை என்றால் மிதிப்போம்' எனப் பேசியவர், வேட்பாளர் சரவணன் பல்வேறு கட்சிகளுக்கு சென்று வந்தவர் எனக் குறிப்பிட்டு பேசியதோடு 'ஜெயித்த பிறகு வேறு கட்சிக்கு போய் விடக்கூடாது' என கிண்டலாகப் பேசினார்.