Skip to main content

விவசாயிகளுக்கு லாபகரமான விலை தரும் அரசியல் கட்சிக்கே பாரளுமன்ற தேர்தலில்  வாக்களிப்போம் -  அய்யாகண்ணு சூளுரை!

Published on 08/02/2019 | Edited on 08/02/2019
ay


 
தேசிய தென்னிந்திய நதி நீர் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு விருத்தாசலத்தில் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். 

அப்போது அவர், " விருத்தாசலம் அருகேயுள்ள ஆரூரான் மற்றும் அம்பிகா சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு தரவேண்டிய நிலுவை தொகை வழங்ககோரி கடந்த மாதம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது ஆலை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, ஜனவரி 3 ஆம் தேதிக்குள் நிலுவை தொகையில் 100 கோடி ரூபாய் தருவதாக உறுதி கூறி ஒரு கோடி ரூபாய்க்கான காசோலை அளித்தனர். அதன் பேரில் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் ஆலை நிர்வாகம் தருவதாக கூறிய நிலுவை தொகை இதுவரை வழங்கவில்லை. தமிழக அரசு விவசாயிகளை அடிமைகளாக நினைப்பதே இந்த அலட்சியத்திற்கு காரணம்" என்றார்.

 

மேலும் "மத்திய அரசு விவசாயிகளுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை தருவதாக அறிவித்தும் இதுவரை விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. இதனால் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உட்பட அனைத்து கொள்முதல் நிலையங்களிலும், அதிகாரிகள் துணையுடன் மாநில அரசு அறிவித்த விலையை தராமல் விவசாயிகளை அழித்து கொள்ளையடித்து கொண்டிருப்பதை மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் கண்டுகொள்ளவில்லை. இதனை வலியுறுத்தி விவசாயிகளை ஒன்று திரட்டி சென்னையில் மாபெரும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

 

ayy

 

அதேபோல் விவசாயிகளுக்கு லாபகரமான விலை தருகிறேன் என்று கூறிய மத்திய அரசு தராததால், லக்னோ, பிளிபிட் உள்ளிட்ட இடங்களில் போராட்டமும், வருகின்ற தேர்தலில் விவசாயிகளுக்கு லாபகரமான விலை தரக்கூடிய அரசியல் கட்சிக்கு மட்டும் தான் வாக்களிப்போம் என்பதையும் வலியுறுத்தி டெல்லியில் 10 லட்சம் விவசாயிகளை திரட்டி போராட போவதாகவும் அறிவித்தார்.

 


தமிழக அரசு அறிவித்துள்ள பட்ஜெட்டில் விவசாயிகளின் நலனுக்காக எவ்வித நலத்திட்டங்களும் இல்லை. மேலும் விவசாயிகளை கடனாளிகளாக ஆக்குவதற்கே கடன் திட்டத்தை அறிவித்துள்ளார்கள். சர்க்கரை ஆலை தரவேண்டிய நிலுவை தொகை ரூபாய் 500 கோடி உள்ளபோது, தமிழக அரசு அறிவித்த கரும்பு ஊக்கதொகை 200 கோடி எனபது ஒருபோதும் பற்றாது. விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யாமல், வாகனம் நிறுத்துவதற்கு அரசு நிதி ஒதுக்கியிருப்பது வேடிக்கையாக உள்ளது"  என்றும் அவர் கூறினார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமைச்சர் வரை சென்ற வீடியோ; தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநரின் லைசென்ஸ் ரத்து

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

foul language to passengers; Cancellation of license of private bus driver operator

 

கடலூரில் பயணிகளிடம் தகாதமுறையில் பேசிய தனியார் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

கடலூர் பேருந்து நிலையத்திலிருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், விருத்தாசலம், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. இதில் தனியார் பேருந்துகளும் அடக்கம். இந்நிலையில், நேற்று மாலை பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஒன்று விருத்தாசலம் செல்ல ஆயத்தமாக நின்று கொண்டிருக்கிறது. அப்பொழுது பயணி ஒருவர் விருத்தாசலம் செல்லும் வழியில் உள்ள குறிஞ்சிப்பாடி நிறுத்தத்தில் இறங்கிக்கொள்ளவா என கேட்டுள்ளார். ஆனால் விருத்தாசலம் செல்பவர்கள் மட்டுமே ஏற வேண்டும் நடுவில் நிற்காது என தெரிவித்துள்ளார் அந்த பேருந்தின் நடத்துநர். அது மட்டுமல்லாது விருத்தாசலம் இல்லாவிட்டால் பேருந்தில் ஏறக்கூடாது என தகாத முறையில் பேசினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரது கண்டனத்தை பெற்றிருந்தது.

 

அங்கிருந்த பொதுமக்களும் நடத்துநரிடமும் ஓட்டுநரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கவனத்திற்கு சென்ற நிலையில், அந்த தனியார் பேருந்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் லைசென்ஸை ரத்து செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 

 

 

Next Story

“முதல்வர் ஸ்டாலின் உண்ணாவிரதம் இருக்க வேண்டும்” -  அய்யாக்கண்ணு

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

Ayyakannu said that Cm Stalin should fast for kaveri issue  

 

திருச்சி மற்றும் திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களின் குறைகளை கோரிக்கைகளாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனுவாக இன்று அளித்தனர். இந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட பல விவசாயிகள் மீது பொய் வழக்கு போடப்பட்டதை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து, காவல்துறையினரை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் மாவட்ட வருவாய் துறை அலுவலர் அபிராமி பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர். இது குறித்து விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு பேசுகையில், “காவிரி நீர் பிரச்சனையில் கர்நாடக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிப்பது கிடையாது. இதனால் காவேரி டெல்டா விவசாயிகளை காப்பாற்ற தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் அல்லது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஒரு லட்சம் கோடி நஷ்ட ஈடு வாங்கி காவேரி டெல்டா மாவட்ட விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்.

 

கடந்த 2021-ம் ஆண்டு குழுமணியில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிக்கு நியாயம் கேட்டு 24 விவசாய சங்கங்கள் ஒருங்கிணைந்து திருச்சி அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநிலத் தலைவராகிய என் மீது 6 வழக்குகளும், என் சங்கத்தை சார்ந்த விவசாயிகள் மீது பல்வேறு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 

குறிப்பாக, திருவண்ணாமலை விவசாயிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் போட்டதை போல என் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடுவதற்காக காவல்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர். இதற்கு காரணமான திருச்சி மாவட்ட துணை கமிஷனர் அன்பு மற்றும் காவல்துறையினரை கண்டிக்கின்றோம்” என்றார்.