ADVERTISEMENT

குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகத்தை  பொதுமக்கள் முற்றுகை!    

09:13 AM Jun 28, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வடக்கு பெரியார் நகரில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த ஆறு மாதங்களாக போதிய குடிநீர் வசதி இல்லாததால் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் முறையிட்டனர்.

ADVERTISEMENT

நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், காலிக்குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


பின்னர் நகராட்சி அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT