கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வடக்கு பெரியார் நகரில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த ஆறு மாதங்களாக போதிய குடிநீர் வசதி இல்லாததால் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் முறையிட்டனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/e1_2.jpg)
நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், காலிக்குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/e2_0.jpg)
பின்னர் நகராட்சி அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)