Skip to main content

உலக சாதனையும்; உள்ளுக்குள் வேதனையும்... நாளைய நம்பிக்கை நட்சத்திரங்கள்!  

Published on 24/10/2019 | Edited on 24/10/2019

கண்களைக் கட்டிக்கொண்டே 25 விதமான செயல்களைச் செய்து சாதனை படைத்திருக்கிறார் ஹர்ஷ நிவேதா. விருதுநகரைச் சேர்ந்த இவர்,  அங்குள்ள தனியார் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படிக்கிறார். 12 வயதே ஆன இவர், தன்னுடைய இரு கண்களையும் கருப்புத் துணியால் கட்டியடி புத்தகம் வாசித்தார்; அப்துல் கலாம் படம் வரைந்தார்; க்யூப் சரிசெய்தார்; சைக்கிள் ஓட்டினார். இதுபோன்ற 25 வகையான செயல்களை 45 நிமிடங்களில் செய்துமுடித்து, Universal achievers book of records மற்றும் Future Kalam Book of Records ஆகிய சாதனை புத்தகங்களில் இடம் பிடித்தார். இது உலக சாதனை மட்டுமல்ல; உலகிலேயே முதன் முறையாக நடத்தியிருக்கும் சாதனை ஆகும். இவர், 2018-ல் உத்தித பத்மாசனத்தை 174 வினாடிகள் செய்து கின்னஸ் சாதனை படைத்தவர். 


இதே விருதுநகரில், இரட்டையர்களான விஷாலினியும் அஸ்வினும் நீண்ட நேரம் (1 மணி 12 நிமிடங்கள் 23 விநாடிகள்) நீரில் மிதந்தபடி யோகா செய்தும், முட்டையை தங்களின் மணிக்கட்டால் உடைத்தும் சாதனை படைத்துள்ளனர். மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவன் சித்தார்த்தன். இவர், ஆஸ்திரேலியா சென்று  மாற்று திறனாளிகளில் மூளை வளர்ச்சி குன்றியவர்களுக்கான சர்வதேச பாரா ஒலிம்பிக்கில், சைக்ளிங் பிரிவில் நடைபெற்ற போட்டியில் இரட்டையர் பிரிவில் பங்கேற்று, 3-வது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். 20 கி.மீ. சைக்ளிங் பிரிவில் பாரா ஒலிம்பிக்கில் இந்திய அளவில், அதுவும் தமிழகத்தைச் சேர்ந்தவர் பதக்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும். 

 

மதுரை, சிக்கந்தர் சாவடி பெத்சால் மன வளர்ச்சி குன்றியோர் பள்ளியில் படித்துவரும் சித்தார்த்தன், முறையான பயிற்சி பெறாமலே பதக்கம் வென்றிருக்கிறார். தமிழகத்திலிருந்து மொத்தம் 6 பேர் தேர்வானார்கள். நிதிவசதி இல்லாததால்,  அவர்களில் 5 பேர் போட்டியில் கலந்துகொள்ளவில்லை. ஜெராக்ஸ் கடை வைத்திருக்கும் திருமாறன்,  ரூ.4 லட்சம் கடன் வாங்கி செலவு செய்து, தன் மகன் சித்தார்த்தனை பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்க வைத்திருக்கிறார். பொருளாதார நெருக்கடியால் உள்ளுக்குள் வேதனையுடன் தவிக்கும் அவர்,    “தமிழக அரசு நிதி உதவியும் முறையான பயிற்சியும் வழங்கினால் இனிவரும் போட்டிகளில் சித்தார்த் தங்கப்பதக்கமே வெல்வான்.” என்று உறுதிபடச் சொல்கிறார். சாதனை மாணவர்களை வாழ்த்துவோம்!

 

சார்ந்த செய்திகள்

Next Story

“டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை” - வேட்பாளர் சரவணனை ஆதரித்து செல்லூர் ராஜு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sellur Raju supporting candidate Saravanan and critcizing amitshah

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பாக மருத்துவர் சரவணன் போட்டியிடுகிறார். இந்த நிலையில், மதுரையில் வசிக்கும் வட மாநிலத்தவர்களிடம் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வாக்கு சேகரித்தார். அப்போது, ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் அணிவிக்கும் தலைப்பாகையோடு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, வேட்பாளர் சரவணன் ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

இதனைத் தொடர்ந்து, செல்லூர் ராஜு, அதிமுக வேட்பாளர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது செல்லூர் ராஜுவிடம், “அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஊழல் செய்துவிட்டதாக அமித்ஷா கூறியிருக்கிறாரே? எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு, “அமித்ஷா ஏதோ பேச வேண்டும் என்பது போல் பேசுகிறார். திராவிட இயக்கங்கள் 1967-ல் ஆட்சிக்கு வந்தது. அன்றைக்கு மத்தியில் ஆளுகின்ற காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டு மக்களை எலிக்கறி சாப்பிட வேண்டும் என்றும் ஒரு வாரத்தில் ஒரு நாள் விரதம் இருக்க வேண்டும் என்றும் கூறினார்கள். மாணவர்கள் படிக்கின்ற விடுதிகளில் கூட மாணவர்களுக்கு ஒரு வேளை சாப்பாடு கிடையாது. ஏனென்றால் உணவு பற்றாக்குறை.

இந்த மாதிரி நிலைமை எல்லாம் அப்போது இருந்தது. மொழியாலும், கலாச்சாரத்தாலும் தமிழ்நாடு தனித்துவம் பெற்றதன் அடிப்படையில், பேரறிஞர் அண்ணா தான் தமிழ்நாடு என்று பெயர் வைத்தார். தமிழ்நாடு என்று பெயர் வைத்ததற்கு பிறகு திராவிட இயக்கங்கள் தான் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. இந்த திராவிட இயக்கங்கள் தான் ஏழை எளிய மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் செயல்படுத்துகிற திட்டங்களைத் தான் பிற மாநிலங்களில் பின்பற்றுகிறார்கள். அம்மா உணவகம் ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது

தமிழ்நாட்டில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. சிறு, குறு தொழில்களில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதல் மாநிலமாக இருக்கிறது. இங்கே வருகிற நிதியில் தான் குஜராத், பீகார் போன்ற மாநிலங்களுக்கு நிதி தருகிறார்கள். எங்கள் ஆட்சியில் ஊழல் நடக்கவில்லை. ஊழலுக்காக திமுக ஆட்சி தான் கலைக்கப்பட்டது. அவர் உண்மையாக எங்களை பற்றி குறை சொல்லவில்லை. தி.மு.க பற்றி குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி மாற்றி சொல்லி இருக்கிறார். மதுரையில் அமித்ஷா ரோட் ஷோ நடத்தினார். ஆனால் பாவம் அங்கு டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை. அவர் மட்டுமே கை காட்டிக் கொண்டு போனார்” என்று பேசினார்.

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.