Skip to main content

ஆர்.எஸ்.எஸ். கைப்பாவை நிர்மலா சீத்தாராமன்!- மாணிக்கம்தாகூர் (காங்.) எம்.பி. குற்றச்சாட்டு!

Published on 22/07/2019 | Edited on 22/07/2019

விருதுநகர் தொகுதி எம்.பி.யும், நாடாளுமன்ற மக்களவை காங்கிரஸ் கட்சி கொறடாவுமான  மாணிக்கம்தாகூர் சிவகாசியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில்

 

“சிவகாசி– திருத்தங்கல் மேம்பாலம் அமைக்கின்ற பணி கடந்த 7 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. திருத்தங்கல் மேம்பாலத்தை வரவிடாமல் மாநில அமைச்சர் (கே.டி.ராஜேந்திரபாலாஜி) தடுக்கிறாரா? தடுத்தால், அதை மிகப்பெரிய குற்றமாக சிவகாசி, திருத்தங்கல் மக்கள் கருதுகிறார்கள். அணை பாதுகாப்பு மசோதாவிற்கு காங்கிரஸ் ஆதரவளிக்காது. அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டால், காவிரி மற்றும் முல்லைப்பெரியாறு பிரச்சனைகளால், தமிழகம் மிக அதிகமாக வஞ்சிக்கப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. மத்திய அரசு இப்படிப்பட்ட செயலை எடுக்கக்கூடாது. அதனை எதிர்த்து காங்கிரஸ் வாக்களிக்கும். 

 

 

virudhunagar parliament member manickam thakur

 

 

ஆர்.எஸ்.எஸ்.ஸின் சித்தாந்தம் சமஸ்கிருதத்தையும் ஹிந்தியையும் மிகப்பெரிய மொழியாக்க வேண்டும் என்பதுதான். தமிழையும் மற்ற மாநில மொழிகளையும் அழிப்பதற்கான முயற்சியிலே அவர்கள் ஈடுபடக்கூடாது. கட்டாய இந்தி திணிப்பையும், கட்டாய சமஸ்கிருத திணிப்பையும் தமிழக காங்கிரஸ் கமிட்டி எதிர்க்கிறது. நிர்மலா சீத்தாராமன் போன்றவர்கள் ஆர்.எஸ்.எஸ். கைப்பாவையாகச் செயல்படுகிறார்கள். அவர்கள் இந்திக்காரர்களின் கையில் சிக்கிக்கொண்டு, பதவிக்காக இப்படி பேசுகிறார்கள். இந்தப் புதிய கல்விக்கொள்கை என்பது டிராஃப்ட் வடிவிலே இருப்பது, மிகப்பெரிய அளவிலே ஆர்.எஸ்.எஸ்.ஸுடைய கல்விக்கொள்கையைத் திணிப்பதற்கான திட்டமாக இருக்கிறது. 

 

 

தமிழகம் நீட்டிலிருந்து விலக்களிப்படாது என்று தமிழிசை கூறுவது ஆணவத்தின் உச்சம். இதன் காரணமாக, தமிழிசை பா.ஜ.க.விற்கு குழிபறிப்பார் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. மத்திய அரசு வார்த்தைஜாலத்தில் விளையாடுகிறதே ஒழிய, உண்மையாக திட்டத்திலே நிதிஒதுக்கீடு செய்து விருதுநகர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு எந்த ஒரு திட்டத்தையும் கொண்டுவரவில்லை என்பது வருத்ததிற்குரியது. காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செய்தபோது பட்டாசுத்தொழில் இதுபோன்ற மிகப்பெரிய பாதிப்பை சந்தித்ததில்லை. இப்போது பட்டாசுத்தொழிலே உயிரோடு இருக்குமா என்ற நிலை உருவாகியுள்ளது. பட்டாசுத் தொழிலாளர்களுக்காக எங்களுடைய குரலைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்.”என்றார். 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.