Skip to main content

ஆர்.எஸ்.எஸ். கைப்பாவை நிர்மலா சீத்தாராமன்!- மாணிக்கம்தாகூர் (காங்.) எம்.பி. குற்றச்சாட்டு!

Published on 22/07/2019 | Edited on 22/07/2019

விருதுநகர் தொகுதி எம்.பி.யும், நாடாளுமன்ற மக்களவை காங்கிரஸ் கட்சி கொறடாவுமான  மாணிக்கம்தாகூர் சிவகாசியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில்

 

“சிவகாசி– திருத்தங்கல் மேம்பாலம் அமைக்கின்ற பணி கடந்த 7 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. திருத்தங்கல் மேம்பாலத்தை வரவிடாமல் மாநில அமைச்சர் (கே.டி.ராஜேந்திரபாலாஜி) தடுக்கிறாரா? தடுத்தால், அதை மிகப்பெரிய குற்றமாக சிவகாசி, திருத்தங்கல் மக்கள் கருதுகிறார்கள். அணை பாதுகாப்பு மசோதாவிற்கு காங்கிரஸ் ஆதரவளிக்காது. அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டால், காவிரி மற்றும் முல்லைப்பெரியாறு பிரச்சனைகளால், தமிழகம் மிக அதிகமாக வஞ்சிக்கப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. மத்திய அரசு இப்படிப்பட்ட செயலை எடுக்கக்கூடாது. அதனை எதிர்த்து காங்கிரஸ் வாக்களிக்கும். 

 

 

virudhunagar parliament member manickam thakur

 

 

ஆர்.எஸ்.எஸ்.ஸின் சித்தாந்தம் சமஸ்கிருதத்தையும் ஹிந்தியையும் மிகப்பெரிய மொழியாக்க வேண்டும் என்பதுதான். தமிழையும் மற்ற மாநில மொழிகளையும் அழிப்பதற்கான முயற்சியிலே அவர்கள் ஈடுபடக்கூடாது. கட்டாய இந்தி திணிப்பையும், கட்டாய சமஸ்கிருத திணிப்பையும் தமிழக காங்கிரஸ் கமிட்டி எதிர்க்கிறது. நிர்மலா சீத்தாராமன் போன்றவர்கள் ஆர்.எஸ்.எஸ். கைப்பாவையாகச் செயல்படுகிறார்கள். அவர்கள் இந்திக்காரர்களின் கையில் சிக்கிக்கொண்டு, பதவிக்காக இப்படி பேசுகிறார்கள். இந்தப் புதிய கல்விக்கொள்கை என்பது டிராஃப்ட் வடிவிலே இருப்பது, மிகப்பெரிய அளவிலே ஆர்.எஸ்.எஸ்.ஸுடைய கல்விக்கொள்கையைத் திணிப்பதற்கான திட்டமாக இருக்கிறது. 

 

 

தமிழகம் நீட்டிலிருந்து விலக்களிப்படாது என்று தமிழிசை கூறுவது ஆணவத்தின் உச்சம். இதன் காரணமாக, தமிழிசை பா.ஜ.க.விற்கு குழிபறிப்பார் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. மத்திய அரசு வார்த்தைஜாலத்தில் விளையாடுகிறதே ஒழிய, உண்மையாக திட்டத்திலே நிதிஒதுக்கீடு செய்து விருதுநகர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு எந்த ஒரு திட்டத்தையும் கொண்டுவரவில்லை என்பது வருத்ததிற்குரியது. காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செய்தபோது பட்டாசுத்தொழில் இதுபோன்ற மிகப்பெரிய பாதிப்பை சந்தித்ததில்லை. இப்போது பட்டாசுத்தொழிலே உயிரோடு இருக்குமா என்ற நிலை உருவாகியுள்ளது. பட்டாசுத் தொழிலாளர்களுக்காக எங்களுடைய குரலைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்.”என்றார். 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.