தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "விருதுநகர் வடக்கு மாவட்டம், விருதுநகர் நகரத்தைச் சேர்ந்த ஜுனைத் அகமது கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்" எனத் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜுனைத் அகமது கைது செய்யப்பட்ட நிலையில், கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.