Skip to main content

விருதுநகர் எம்.பி. யார்? தீர்மானிக்கும் இடத்தில் பட்டாசுத் தொழிலாளர்கள்! -ஓட்டுக்காக மல்லுக்கட்டு!

Published on 02/04/2019 | Edited on 02/04/2019

 

பட்டாசு உற்பத்தியில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தக்கூடாது என்று  உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 1070 பட்டாசு ஆலைகள் மூன்று மாதங்களாக மூடப்பட்டு, போராட்டமெல்லாம் நடந்தன. தற்போது பட்டாசு ஆலைகள் திறக்கப்பட்டுவிட்டன.

 

 

தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மையம் சிவகாசி பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தியது. அதில், பேரியம் மூலப்பொருள் இல்லாமல், புதிய மூலப்பொருட்களைக்கொண்டு பட்டாசுகளைத் தயாரித்து சோதனை செய்ததில் வெற்றி கிடைத்தது.  தற்போது  பேரியம் நைட்ரேட் பயன்படுத்தாமல் பட்டாசு ரகங்களைத் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. ஆனாலும், இந்தத் தேர்தலில் பட்டாசு விவகாரத்தை அரசியல்வாதிகள் கையில் எடுத்திருக்கின்றனர். ஏனென்றால்,  விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் பட்டாசுத் தொழிலாளர்களின் வாக்குகள் லட்சக்கணக்கில் உள்ளன.

 

election

 

சிவகாசியில் நடந்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் “மோடி அரசு பட்டாசுத் தொழிலை நீதிமன்ற வாசலிலே நிறுத்தி, நீதிமன்றத்தின் பெயரைச் சொல்லி கடந்த இரண்டு ஆண்டுகளாக பட்டாசுத் தொழிலாளர்களை எப்படி கொடுமைப்படுத்தியது என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியும். பட்டாசுத் தொழிலுக்கு மூடுவிழா நடத்தினார்கள்.   தற்போது, சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகள் தேர்தலை மையமாகக் கொண்டு இடைக்காலமாக திறக்கப்பட்டுள்ளது. இடைக்காலம் என்பது இந்த மாதமும் அடுத்த மாதமும் மட்டும்தான்.

 

 

ஜி.எஸ்.டி.யால் தத்தளிக்கின்ற சிவகாசி தொழிலும், விருதுநகர் தொழிலும், சாத்தூர் தொழிலும் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால், ராகுல் காந்தி பிரதமராக வேண்டும். அவர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில்  ஜி.எஸ்.டி.யானது,  ஒரே ஜி.எஸ்.டி.யாக,  எளிமையான ஜி.எஸ்.டியாக மாற்றப்படும்.  ரூ.1000 ரேசன் கடையில் தந்துவிட்டால், மக்கள் அதிமுக அரசுக்கு ஆதரவாளராக மாறிவிடுவீர்கள் என்று மக்களை சாதாரணமாக எடைபோடுகிறார்கள். நீங்கள் அளிக்கும் ஒரு வாக்கு இரண்டு அரசுகளை வீட்டுக்கு அனுப்பும். ஒன்று மத்தியில் உள்ள மோடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும்.  மற்றொன்று  தமிழகத்தில் எடப்பாடி அரசை வீட்டுக்கு அனுப்பும்.” என்றார்.

 

election

 

காங்கிரஸ் வேட்பாளரின் குற்றச்சாட்டுக்கு தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பதிலடி தந்திருக்கிறார்.  “மாணிக்கம் தாகூர் பொய் சொல்கிறார். பட்டாசு ஆலை உரிமையாளர்கள் அதிமுக நிர்வாகிகளாகவா இருக்கிறார்கள்? பட்டாசு உரிமையாளர்களிடம் உண்மை நிலையைக் கேட்டுப் பாருங்க. பட்டாசு ஆலைகள் எந்தச் சூழ்நிலையிலும் மூடுவதற்கு வாய்ப்பே கிடையாது. பட்டாசு ஆலைகள் திறந்தே இருக்கும். தொழிலாளர்களுக்கும் வேலை கிடைக்கும். கோர்ட் உத்தரவெல்லாம் வாங்கியாச்சு. மாணிக்கம் தாகூர் ஐந்து வருடங்கள் காணாமல் போய்விட்டு இப்போது வந்து கேட்கிறார். இதற்கான பதில் பட்டாசு உற்பத்தியாளர்களிடம் இருக்கிறது. இனி எந்தக்காலத்திலும் பட்டாசு ஆலைகளை பூட்டவே மாட்டார்கள். அடுத்து நான் இங்கேதான் இருக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலிலும் வாக்கு கேட்க வேண்டும். சட்ட மன்றத்துக்கும் ஓட்டு கேட்க வேண்டும். பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுவிட்டால், அடுத்து ஓட்டு கேட்க என்னை விடுவார்களா? நீ மாற்றி மாற்றி பேசுகிறாய் என்று என்னைக் கேட்க மாட்டார்களா? பட்டாசுத் தொழிலுக்கு எந்தப் பிரச்சனை வந்தாலும் அதனைத் தடுத்து நிறுத்துவோம்.” என்கிறார்.

 

 

 

தொகுதியின் பிரதான பிரச்சனைக்குத் தீர்வு காண்போம் என்று வாக்குறுதி அளித்து மக்களின் ஆதரவைப்பெற முயற்சிப்பது சரிதானே!

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

'வேதனையாக இருக்கிறது' - ஏமாற்றத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் சூரி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'It's painful' - Suri who came to vote and returned disappointed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் வாக்களிக்க வந்த நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்காமலேயே திரும்பிச் சென்றார். வெளியே வந்த அவர் வாக்குச்சாவடி முன்பு நின்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''கடந்த எல்லா தேர்தலிலும் கரெக்டா என்னோட உரிமையை செலுத்தி கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த தடவை இந்த பூத்தில் என்னுடைய பெயர் விடுபட்டு போய்விட்டது என்கிறார்கள். என்னுடைய மனைவியின் ஓட்டு இருக்கிறது. ஆனால் என்னுடைய ஓட்டு இல்லை. என்னுடைய ஓட்டு விடுபட்டுப் போச்சு என்கிறார்கள். இருந்தாலும் 100% ஜனநாயக உரிமையை ஆற்றுவதற்காக வந்தேன். அது நடக்கவில்லை என்பது மன வேதனையாக இருக்கிறது. நினைக்கும் போது மனசு கஷ்டமாக இருக்கிறது. இது எங்கு யாருடைய தவறு என்று தெரியவில்லை. இருந்தாலும் ஓட்டு போட்டுவிட்டு ஓட்டு போட்டேன் என்று சொல்வதை விட ஓட்டு போடவில்லை என்ற வேதனையை நான் சொல்கிறேன். எல்லாருமே 100% ஓட்டு போட வேண்டும். அது நம்ம நாட்டுக்கு நல்லது. தவறாமல் எல்லாரும் வாக்கை செலுத்தி விடுங்கள். நான் அடுத்த எலெக்ஷனில் என்னுடைய வாக்கை செலுத்துவேன் என்று நம்புகிறேன்'' என்றார்.