Skip to main content

சந்தேகத்தால் ஆத்திரம்... மனைவியைக் கொலை செய்த கணவன்!

Published on 03/02/2020 | Edited on 03/02/2020

விருதுநகரைச் சேர்ந்த காளிமுத்து – ராஜம்மாள் தம்பதியருக்கு, தங்கப்பாண்டியன், கருப்பசாமி ஆகிய இரு மகன்கள். 17 வயது தங்கப்பாண்டியன் வேலைக்குப் போகிறான்.  15 வயது கருப்பசாமி 10-ஆம் வகுப்பு படிக்கிறான். காளிமுத்துவுக்கு எப்போதும் ராஜம்மாள் மீது சந்தேகம்தான். அதனால், கடந்த 6 வருடங்களாகப் பிரிந்தே வாழ்ந்தனர். இந்நிலையில், ஒருவழியாக சமாதானம் ஆகி, கடந்த 20 நாட்களுக்கு முன்பாக ஒன்று சேர்ந்தனர். இருவரும் ஒரே தனியார் மில்லில் ஒன்றாக வேலை பார்த்தனர். ஆனாலும், சந்தேகப் பேய் காளிமுத்துவை விட்ட பாடில்லை.   வாழ்க்கையின் தொடக்கத்தில் இருந்த கசப்பான அனுபவமும், புதிதாக முளைத்த சந்தேகமும் அவனைத் தூங்கவிடாமல் செய்தன. தன்னருகில் தூங்கிக்கொண்டிருந்த ராஜம்மாளைப் பார்க்கப் பார்க்க சந்தேக நெருப்பு எரிமலையானது. தவறான நடத்தையால், தன்னைத் தூங்கவிடாமல் செய்துவிட்டு,  ‘இவள் மட்டும் தூங்குகிறாளே?’ என்ற ஆத்திரம் தலைக்கேறியது.

 

Virudhunagar incident

 



உள்ளுக்குள் புழுங்கிப் புழுங்கி,  ‘இவள் உயிரோடு இருக்கும்வரையிலும் என்னால் தூங்கவே முடியாது’ என்ற மனநிலைக்கு வந்துவிட்டான் காளிமுத்து. மனைவி ராஜம்மாளின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துவிட்டான். அதுவும், பார்க்கவே தனக்குப் பிடிக்காத முகம் என்பதால்,  மனைவியின் முகம் சிதையும் அளவுக்கு கல்லைப் போட்டுள்ளான். தகவல் கிடைக்கப்பெற்ற மம்சாபுரம் காவல் நிலைய போலீசார், சடலத்தை மீட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  மனைவியைக் கொலை செய்த காளிமுத்துவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Virudhunagar incident

 



"தவறான நடத்தையோ?  வீண் சந்தேகமோ?  எதுவாக இருந்தாலும், உயிரைப் பறிப்பதா தீர்வு? மனைவியை வெறுத்து 6 வருடங்களாகப் பிரிந்திருந்த காளிமுத்து, கொலை செய்வதற்காகவா  மீண்டும் சேர்ந்தான்? விபரம் தெரியும் வயதிலுள்ள மகன்களுக்காக காளிமுத்து சற்று யோசித்திருந்தால், இந்தக் கொலையே நடந்திருக்காதே!" என சொந்தபந்தங்கள் புலம்பி அழுகின்றன.   

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.