விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு!

 Virudhunagar firecracker factory accident ... death toll rises to 5!

நேற்று காலை விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணை அருகே மஞ்சள் ஓடைப்பட்டியில் உள்ள சோலை என்ற பட்டாசு ஆலையில் வெடி விபத்து நிகழ்ந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்டுப்பணியில் இறங்கினர். கருப்பசாமி என்பவருக்கு சொந்தமான இந்த பட்டாசு ஆலையில்தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தி பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் ரசாயனப்பொருட்களில் ஏற்பட்ட உராய்வு காரணமாக இந்த வெடிவிபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

வெடிவிபத்து ஏற்பட்ட ஆலையிலிருந்து மீட்கப்பட்ட 7 பேருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சேர்க்கப்பட்ட எழுவரில் பட்டாசு ஆலையின் உரிமையாளர் கருப்பசாமி மற்றும் ஊழியர்கள் இருவர் என மொத்தம் மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த விபத்தில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முனியசாமி என்பவர் உயிரிழந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. படுகாயமடைந்த மீதம் இருவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

incident viruthunagar
இதையும் படியுங்கள்
Subscribe