Skip to main content

விருதுநகர் மாவட்டம்: எந்தெந்த தொகுதிக்கு எத்தனை சுற்றுகள்! 

Published on 02/05/2021 | Edited on 02/05/2021

 

Virudhunagar District vote counting rounds

 

விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி), ராஜபாளையம் ஆகிய 7 தொகுதிகள் உள்ளன.  விருதுநகர் மாவட்டத்திலுள்ள 7 தொகுதிகளில், விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சுழி தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை விருதுநகர் ஸ்ரீ வித்யா பொறியியல் கல்லூரியிலும், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை ஸ்ரீவித்யா கலைக்கல்லூரியிலும், தற்போது தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.  

 

அதன் பிறகு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். வாக்குகளை எண்ண ஒரு தொகுதிக்கு 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. விருதுநகர் தொகுதிக்கு (325 வாக்குச்சாவடிகளுக்கு) 23 சுற்றுகள், அருப்புக்கோட்டை தொகுதிக்கு (311 வாக்குச்சாவடிகளுக்கு) 22 சுற்றுகள், திருச்சுழி தொகுதிக்கு (318 வாக்குச்சாவடிகளுக்கு) 23 சுற்றுகள், சாத்தூர் தொகுதிக்கு (351 வாக்குச்சாவடிகளுக்கு) 25 சுற்றுகள் என்ற அடிப்படையில் எண்ணப்படுகின்றன. சிவகாசி தொகுதிக்கு (368 வாக்குச்சாவடிகளுக்கு)  26 சுற்றுகளில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) தொகுதிக்கு (357 வாக்குச்சாவடிகளுக்கு) 26 சுற்றுகளில் எண்ணப்படுகின்றன.  

 

ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு (340 வாக்குச்சாவடிகளுக்கு) 24 சுற்றுகளில் எண்ணப்படுகின்றன. ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். ஒருவேளை இவர் வெற்றிபெற்றால், அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் என்பதால், இத்தொகுதியின் வாக்கு எண்ணிக்கை கவனத்திற்குரிய ஒன்றாகவுள்ளது. இதேபோல், சிவகாசி தொகுதியில் இருந்து தொகுதி மாறிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி போட்டியிடும் ராஜபாளையம் தொகுதியும் கவனத்துக்குரியதாக உள்ளது. 

 

தபால் வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் திமுக, பாஜக, அமமுக, மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி ஆகிய பிரதான கட்சிகள் தவிர, 11 சுயேட்சைகள் உள்ளிட்ட 18 பேர் போட்டியிட்டனர். விருதுநகரில் 71.27 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது. இத்தொகுதியில்  24 சுற்றுக்கள் எண்ணப்பட உள்ளன.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'ஒரே குடும்பத்தில் 90 பேர்'-வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்த சம்பவம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'90 people in the same family'-incident of carting and coming to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் விருதுநகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90 பேர் வண்டி கட்டிக் கொண்டு சென்று வாக்களித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பூசாரி நாயக்கன்பட்டி ஊரில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90க்கு மேற்பட்டோர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டுடன் வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்தனர். விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் 100 பேர் கொண்ட கூட்டுக் குடும்பத்தினர் வாக்களித்தனர்.

Next Story

விருதுநகர் தொகுதி; ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் மக்கள் (படங்கள்)!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024

 

விருதுநகர் கூரைக்குண்டு, அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில்,விருதுநகர்  மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப.,  தனது வாக்கினைப்  பதிவு செய்தார்.

மல்லங்கிணர் அரசுத் தொடக்கப்பள்ளியில் அமைச்சர் தங்கம் தென்னரசு,தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். திருப்பரங்குன்றம் – திருநகரிலுள்ள சீதாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வாக்களித்தார். திருத்தங்கல் கே.எம்.கே.ஏ.பள்ளியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வாக்களித்தார்.

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் மொத்தம் 15,01,942 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 1689 மையங்களில் வாக்காளர்கள் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்பாடு செய்யப்பட்ட சக்கர நாற்காலிகளில் மாற்றுத்திறனாளிகளும் முதியோரும் வாக்களித்துள்ளனர்.  இந்தத் தேர்தலில் 18 வயது நிரம்பிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் முறை, இளம் தலைமுறை வாக்காளர்கள்,  மூத்த வாக்காளர்கள், திருநங்கைகள், பெண்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்துத் தரப்பு வாக்காளர்களும் வாக்களித்து, தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். 

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி  வாக்குப் பதிவு  மதியம் 1.00 மணி நிலவரப்படி விருதுநகர்- 40.19%, திருப்பரங்குன்றம் - 39.33%, திருமங்கலம் - 41.70%, சாத்தூர் - 44.32%, சிவகாசி- 36.14%, அருப்புக்கோட்டை - 41.31%, என மொத்தம் - 40.45% வாக்குகள் பதிவாகியுள்ளது.