Skip to main content

சாத்தூரில் அமமுக வேட்பாளர் தோட்டத்தில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

Published on 17/04/2019 | Edited on 17/04/2019

 


விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அமமுக வேட்பாளர் சுப்ரமணியன் தோட்டத்தில் இருந்து கட்டுக்கட்டாக 33 லட்சம் பறிமுதல் செய்தனர் தேர்தல் பறக்கும்படையினர்.  சுப்பிரமணியன் தேர்தல் அலுவலகத்தில் இருந்து  10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் தோட்டத்திலிருந்து 33 லட்சம் பறிமுதல்  செய்துள்ளனர் பறக்கும்படையினர்.  மொத்தம்  43 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதை அடுத்து  இந்த பணம் பறிமுதல் தொடர்பாக மகாதேவன் என்பவரை கைது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  43 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து சுப்பிரமணியன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

 

a


தகுதி நீக்கம் செய்யப்பட்ட சாத்தூர் எம்.எல்.ஏ சுப்பிரமணியன், மீண்டும் அதேதொகுதி இடைத்தேர்தலில், அ.ம.மு.க சார்பில், போட்டியிடுகிறார்.  இந்நிலையில், சாத்தூர் அருகே எதிர்கோட்டை என்ற இடத்தில் உள்ள அவரது அலுவலகத்திற்கு, மாலை 4.20 மணியளவில், தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் வந்தனர்.   அங்கு அவர்கள் நடத்திய அதிரடி சோதனையில், 10 லட்ச ரூபாயை பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து, தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அ.ம.மு.க வேட்பாளர் சுப்பிரமணியனின் தோட்டத்திலும், தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

 

 அந்த சோதனையில்,  33 லட்ச ரூபாயை கைப்பற்றியதாக, தேர்தல் பறக்கும்படையினர் தெரிவித்தனர். சுப்பிரமணியனின் அலுவலகத்தில் பணியாற்றி வந்த மகாதேவன் என்பவரை, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பிடித்துச் சென்று, ஆலங்குளம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.   ஆண்டிப்பட்டியில், அ.ம.மு.க பிரமுகர் வணிக வளாகத்தில் இருந்து, ஒரு கோடியே 48 லட்ச ரூபாய், செவ்வாய்க்கிழமை இரவு கைப்பற்றப்பட்ட நிலையில், அதே கட்சியைச் சேர்ந்த வேட்பாளருக்குச் சொந்தமான அலுவலகத்தில் இருந்து, 43 லட்ச ரூபாய் பிடிபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

"நயன்தாரா- விக்னேஷ் சிவனிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும்"- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

Published on 10/10/2022 | Edited on 10/10/2022

 

 

"An explanation will be taken from Nayantara- Vignesh Sivan"- Minister M. Subramanian interview!


சென்னை கிண்டியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழக மக்கள் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழக அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு இருக்கிறதா என்பது குறித்து நாளை (11/10/2022) சென்னையில் ஆலோசனை நடத்தப்படும். ஆலோசனையில் மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், அதிகாரிகளிடம் மருந்துகள் தட்டுப்பாடு இருக்கிறதா என விளக்கம் கேட்கப்படும். அரசு மருத்துவமனையில் மருந்துகளின் இருப்பு நிலவரத்தை இணையதளம் மூலம் மக்கள் தெரிந்து கொள்ளலாம். 

 

அதிகாரிகள் விடுப்பில் சென்றால் குடோன்களில் இருந்து மருந்துகளை மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்வதில் தாமதம் ஏற்படலாம். அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு இருந்தால் 104 என்ற தொலைபேசி எண்ணில் புகார் கூறலாம். திருமணமாகி ஐந்து ஆண்டுகளுக்கு பிறகே வாடகை தாய் மூலமாக குழந்தைப் பெற முடியும். பொது சுகாதாரத்துறையின் சார்பில் நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதியிடம் குழந்தைகள் விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்கப்படும். விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கருமுட்டையை 21 முதல் 35 வயதுடையவர்கள் வழங்கலாம்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகர் ராஜினாமா!

Published on 08/10/2021 | Edited on 08/10/2021

 

cea subramanian

 

இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்து வந்தவர் கே சுப்பிரமணியன். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 7 ஆம் தேதி அப்பதவியில் நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் தனது மூன்று ஆண்டுகாலம் பதவிக்காலம் நிறைவடைந்ததையொட்டி, அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

 

தனது பதவியை ராஜினாமா செய்துள்ள சுப்பிரமணியன், கல்வித்துறைக்குத் திரும்பவுள்ளதாகத் தனது ராஜினாமா தொடர்பான அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் அரசாங்கத்திடமிருந்து தனக்கு பெரும் ஆதரவு கிடைத்ததாகவும் கூறியுள்ளார்.