Skip to main content

நக்கீரன் இணையச் செய்தி எதிரொலி! ‘பாலியல் தொல்லை’ இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

Published on 23/04/2022 | Edited on 23/04/2022

 

virudhunagar district police inspector transfer

 

’பெண் ஏட்டுக்கு டார்ச்சர்! இன்ஸ்பெக்டர் மீது பாலியல் புகார்!’ என்னும் தலைப்பில் ஏப்ரல் 22- ஆம் தேதி நக்கீரன் இணையத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதன் எதிரொலியாக மறுநாளே (23-ஆம் தேதி) விருதுநகர் மாவட்டம், சிவகாசி உட்கோட்டத்திலுள்ள திருத்தங்கல் காவல்நிலையத்தில் பணிபுரியும் காவல் ஆய்வாளர் முத்துப்பாண்டியன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். 

 

திருத்தங்கல் காவல் நிலையத்தில் ஏட்டாகப் பணிபுரியும் பெண்ணிடம் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டியன் தவறான நோக்கத்தில் பேசி ‘டார்ச்சர்’ செய்திருக்கிறார்.  தான் சொன்னபடி நடக்காவிட்டால், பணியில் கடுமை காட்ட வேண்டியதிருக்கும் என்று மிரட்டவும் செய்திருக்கிறார். ஆனாலும், நெஞ்சுரத்துடன் பெண் தலைமைக் காவலர் சம்மதிக்காத நிலையில்,  ‘வேலை சரியாகப் பார்ப்பதில்லை..’ எனக் குற்றம் சுமத்தி, அவரை ‘டிரான்ஸ்பர்’ செய்வதற்கான நடவடிக்கையில் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டியன் இறங்கியிருக்கிறார். ஒருகட்டத்தில் பொறுமையிழந்த அந்த பெண் தலைமைக் காவலர், சிவகாசி டி.எஸ்.பி. பாபு பிரசாந்திடம் புகாரளித்துள்ளார்.

 

காவல்துறை அதிகாரி சம்பந்தப்பட்ட பாலியல் விவகாரம் என்பதால்,  விசாரணை என்ற பெயரில் போக்கு காட்டிவிட்டு, பெரிதாக நடவடிக்கை எதுவும் எடுக்கமாட்டார்கள் எனக் காவலர்கள் வட்டாரம்  கருதிய நிலையில், சம்பந்தப்பட்ட பெண் தலைமைக் காவலர் மற்றும் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டியனிடம் விளக்கம் பெற்று, நக்கீரன் இணையத்தில் செய்தி வெளியிட்டோம். 

 

அச்செய்தியின் எதிரொலியாக, திருத்தங்கல் காவல்நிலைய தலைமைக் காவலர் அளித்த புகாரை, விருதுநகர் மாவட்ட எஸ்.பி. மனோகர் விசாரிக்க, அதனடிப்படையில் மதுரை டி.ஐ.ஜி. பொன்னியின் ஆலோசனையின்படி, இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டியனை காத்திருப்போர் பட்டியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

 

காவல்துறை அதிகாரிகள் மீதான பாலியல் புகார்களிலும்கூட,  தமிழக காவல்துறை விரைவாக விசாரணை மேற்கொண்டு, வேகமாக நடவடிக்கை எடுத்துவருவது பாராட்டுக்குரியது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மீண்டும் சிக்கிய 4 கோடி'-பறக்கும் படை அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
erode


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

மேலும், தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இரவு பகல் என சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் தொகையைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானி சாகர் என மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரைத் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4 கோடியே 28 லட்சத்து 20 ஆயிரத்து 303 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காண்பித்ததால் ரூ.2 கோடியே 95 லட்சத்து 65 ஆயிரத்து 213 சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் 1 கோடியே 32 லட்சத்து 55 ஆயிரத்து 90 ரூபாய் பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பாஜகவின் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அது தொடர்பாக அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

பாஜகவுக்குத் தீயாய் வேலை பார்க்கும் வைகோ சகோதரி மகன்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vaiko, who works as an opposite to mdmk, is his sister's son

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்காக கிராமப்புறங்களில் தேர்தல் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் ஒருவர். அவரை நம்மிடம் சுட்டிக்காட்டிப் பேசிய நண்பர் “இவரோட தாத்தா மடத்துப்பட்டி கோபால் நாயக்கர் அந்தக் காலத்து காங்கிரஸ்காரர். பெருந்தலைவர் காமராஜரிடம் நெருக்கமாக இருந்தவர். அவருடைய பேரன்தான் இந்தக் கார்த்திகேயன். மதிமுகவுல இருந்தவர் 2019-ல் அதிமுகவுல சேர்ந்தார். இப்ப தேசிய நீரோட்டத்துல கலந்துட்டேன்னு பாஜகவுல சேர்ந்திருக்கார். மனுஷன் தீயா வேலை பார்க்கிறாரு. எதுக்கு கட்சி மாறிக்கிட்டே இருக்கீங்கன்னு கேட்டதுக்கு, கொள்கை பிடிக்காமத்தான் மதிமுகவுல இருந்து வெளிய வந்தேன். அப்புறம் அதிமுகவுல கடம்பூர் ராஜு கிட்ட என்னைப் பத்தி தப்பா சொல்லிட்டாங்க. அதனால அதிமுகவுல நீடிக்க முடியலன்னு சொல்லுறாரு. என்ன கொள்கையோ?” என்று சலித்துக்கொண்டார்.

‘தேர்தல் பணி எப்படிப் போகிறது?’ என்று கார்த்திகேயனிடம் கேட்டோம். “என்னோட நெருங்கிய வட்டத்துல.. சொந்தபந்தங்கள் கிட்ட தாமரைக்கு ஆதரவு திரட்டுறேன். இங்கே கிராமங்கள்ல என்னைத் தெரிஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்கள எல்லாம் பார்க்கிறேன். பாஜக வேட்பாளர்கள் வெற்றிக்கு அணில் மாதிரி உதவிக்கிட்டிருக்கேன். விருதுநகர், தென்காசின்னு ரெண்டு பார்லிமென்ட் தொகுதிக்கும் நான் வேலை பார்க்கிறேன்.” என்றார்.

பாஜக தலைமை கார்த்திகேயனைக் கட்சிக்குள் இழுத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ-வுடைய சகோதரி 
சரோஜாவின் மகன் என்ற அடையாளம் இவருக்கு உண்டு.