Skip to main content

விதிமீறல் கல்யாண மண்டபம் இடிந்து பெண் ஒருவர் பலி!- ஆக்கிரமிப்புகளில் சிக்கித் தவிக்கும் சிவகாசி!

Published on 29/11/2019 | Edited on 29/11/2019

எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பது யாருக்கு தெரியும்? அப்படித்தான், நடக்கப்போகும் விபரீதத்தை சிவகாசி, கருப்பணன் தெருவில் வசிக்கும், அந்த 6 பெண்களும் அறிந்திருக்கவில்லை. சிவகாசி பகுதியில் இன்று மின் தடை என்பதால், புழுக்கம் தாங்க முடியாமல் வீட்டுக்கு வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, டமாரென்று பெரும் சத்தம். அவர்களின் வீட்டை ஒட்டியிருந்த அரசன் கல்யாண மண்டபத்தின் சுவர் இடிந்து அவர்கள் மீது விழுந்தது. 

virudhunagar district marriage hall demolished women incident police



கனியம்மாள் சம்பவ இடத்திலேயே இடிபாடுகளில் சிக்கி மாண்டு போனார். நாகம்மாள், அங்கம்மாள், சண்முகத்தாய், ஈஸ்வரி, நிஷா ஆகிய 5 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இவர்களில் ஈஸ்வரியும், நிஷாவும் மாமியார், மருமகள் ஆவர். உயிர் தப்பிய 5 பேரில் இருவருக்கு கால்கள் உடைந்தன. இவர்களை தீயணைப்பு படையினர்தான் மீட்டு சிவகாசி மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். 
 

சுவர் எப்படி இடிந்து விழுந்தது? 
 

தனியாருக்கு சொந்தமான அரசன் கல்யாண மண்டபத்தில் ஜே.சி.பி. இயந்திரத்தை இயக்கி மராமரத்துப் பணிகளைச் செய்தனர். அப்போது,  மண்டபத்தின் டைனிங் ஹாலில் இருந்த தூண் ஒன்று உடைந்து, மொத்த கட்டிடமும் சரிந்து விழுந்திருக்கிறது. அதன் காரணமாக, மண்டபத்தை ஒட்டியிருந்த குடியிருப்புக்களும் சேதம் அடைந்தன. 

virudhunagar district marriage hall demolished women incident police


விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தனர். தென் மண்டல டிஐஜி ஆனி விஜயா, தீயணைப்புத்துறை மண்டல துணை இயக்குனர் சரவணகுமார், சிவகாசி சார் ஆட்சியர் தினேஷ்குமார் என அத்தனை உயர் அதிகாரிகளும் வந்து பார்வையிட்டனர். தீயணைப்பு வீரர்கள் குவிக்கப்பட்டு மீட்பு பணிகள் அங்கு தொடர்ந்து நடக்கின்றன. 
 

virudhunagar district marriage hall demolished women incident police

அந்த ஏரியாக்காரரான முனியசாமி “இந்த மண்டபம் இருக்கிறதே புறம்போக்கு இடத்துலதான். முனிசிபாலிடி அதிகாரத்துல இருந்தப்ப அந்த முதலாளி வளைச்சுப் போட்டுட்டாரு. அப்புறம் பேப்பர்ல சரி பண்ணிருப்பாரு. இது ஊருக்கே தெரிஞ்ச சமாச்சாரம்தான். இம்புட்டு அதிகாரிகள் இப்ப விழுந்தடிச்சு ஓடி வர்றாங்கள்ல. இதுக்கு முன்னால இவங்கள்லாம் எங்கே போனாங்க? மண்டபத்துக்கு லைசன்ஸ் கொடுத்த அரசுத்துறையினர் கட்டிடம் எந்த லெவல்ல இருக்குன்னு அப்ப ஏன் ஆய்வு பண்ணல? இப்பக்கூட, முறையா பெர்மிஷன் வாங்கி ஜேசிபி இயந்திரத்தை வச்சு அங்கே வேலை நடந்தமாதிரி தெரியல. சில பெரிய முதலாளிங்க இங்கே எதுவும் பண்ணுவாங்க. அதிகாரிகள் கண்டுக்கவே மாட்டாங்க. பழைய மேப்பை பார்த்தால் நல்லா தெரியும். ஊருக்குள்ள யார் யாரு எங்கெங்கே இந்தமாதிரி ஆக்கிரமிச்சு கட்டிடம் கட்டிருக்காங்கன்னு? அப்படித்தான் ஊருக்குள்ள இருந்த ஊரணியெல்லாம் காணாம போயிருச்சு. இன்னும்கூட இங்கே இதேமாதிரி ஆக்கிரமிப்பு கல்யாண மண்டபங்கள் இருக்கு. ஆக்கிரமிப்பு கட்டிடம்னு பார்த்தா நூத்துக்கும் மேல இருக்கு. இதையெல்லாம் லிஸ்ட் எடுத்து அப்ப சிவகாசி முனிசிபாலிடில தீர்மானமே போட்டாங்க. ஒண்ணும் கதைக்கு ஆகல. கள்ளன் பெரிசா? காப்பான் பெரிசா?” என்று புலம்பினார். 
 

கனியம்மாள் உயிரிழப்புக்குப் பிறகாவது, ஆக்கிரமிப்புக்களையும் விதிமீறல் கட்டிடங்களையும் ஆய்வு செய்து, ஒட்டு மொத்த சிவகாசியையும் சீர்திருத்த விருதுநகர் மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.  



 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.