Skip to main content

“நான் தேர்தலில் போட்டியிட்டதே தவறு!” -விரக்தியில் புலம்பும் விருதுநகர் ஒன்றிய வேட்பாளர்!

Published on 10/01/2020 | Edited on 10/01/2020

‘தேர்தல் விதிகளை முழுமையாகப் பின்பற்றி முறைகேடுகள் இல்லாமல் நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.’என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்தது.  
 

வழக்கறிஞர்கள் சிலருடையை முறையீட்டை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை,‘ஓட்டு எண்ணிக்கை மையங்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளைத் தாக்கல் செய்வதில் ஏற்படும் தாமதம், முறைகேட்டிற்கு வழிவகுக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.’ என அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது.  

virudhunagar district local body election candidate


விருதுநகர் ஒன்றியத்திலுள்ள கூரைக்குண்டு ஊராட்சி 8- வது வார்டில் உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட ராமமூர்த்தியும், தேர்தல் முடிவுகளை அறிவித்ததில், ஆளும் கட்சியினர் தலையீட்டில் தில்லுமுல்லு நடந்ததாக அடித்துச் சொல்கிறார்.  


“வாக்கு எண்ணும்போது, தனக்கும் இன்னொரு போட்டியாளரான சரவணனுக்கும் 183 வாக்குகள் சரிசமமாகக் கிடைத்தது. குலுக்கல் முறையில் வெற்றியை அறிவிப்போம் எனச் சொல்லிவிட்டு, சத்தமில்லாமல் சரவணனுக்கு வெற்றிச் சான்றிதழைக் கொடுத்துவிட்டார்கள். சரவணன் தங்களுக்கு ஆதரவானவர் என்பதாலேயே, தேர்தல் அதிகாரிகளுக்கு ரூ.1 லட்சம் வரை லஞ்சம் கொடுத்து இந்தக் காரியத்தைச் சாதித்திருக்கிறார்கள் ஆளும் கட்சியினர்.

virudhunagar district local body election candidate


லஞ்சம் வாங்கிய தேர்தல் அதிகாரிகளில் ஒருவரான (வட்டார வளர்ச்சி அலுவலர்) காஜா மைதீன் வந்தே நவாஸ், உடல் நலக்குறைவு எனச் சொல்லி மருத்துவமனையில் போய் படுத்துக்கொண்டார். லஞ்சம் வாங்கிய நாளிலிருந்து அலுவலகம் பக்கம் வரவே இல்லை.” என்று நம்மிடம் புலம்பிய ராமமூர்த்தி, இதுகுறித்த புகாரை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தல் ஆணையம் வரை அனுப்பியிருக்கிறார்.  

தேர்தல் அதிகாரிகளின் ஆளும்கட்சி பாசத்தால்,  தனக்கு இழைக்கப்பட்ட அநீதி ஏற்படுத்திய மன உளைச்சலால், தீக்குளிக்க முயற்சித்து காவலர்களால் தடுக்கப்பட்டார் ராமமூர்த்தி. தனது ஆதரவாளர்களுடன் சாலை மறியல் நடத்தியதால், 42 பேர் மீது வழக்கு வேறு பதிவாகியுள்ளது.  

virudhunagar district local body election candidate

தேர்தல் அலுவலரும் விருதுநகர் வட்டார வளர்ச்சி அலுவலருமான  காஜா மைதீன் வந்தே நவாஸை நேரில் சந்தித்து நியாயம் கேட்டே ஆகவேண்டும் என்று ராமமூர்த்தி அடம்பிடிக்க, அருப்புக்கோட்டையிலுள்ள அந்தத் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். படுக்கையில் இருந்தவரைப் பார்த்த மாத்திரத்தில் ராமமூர்த்தி டென்ஷன் ஆகி சத்தம் போட்டிருக்கிறார். உடன் வந்த போலீஸ் அதிகாரி ராமமூர்த்தியின் வாயைப் பொத்தி,“இப்படியெல்லாம் சத்தம் போட்டீங்கன்னா.. அவருடைய உயிருக்கே ஆபத்தாகிவிடும்.”என்று கூறி வெளியே இழுத்து வந்திருக்கிறார். 

virudhunagar district local body election candidate

காஜா மைதீன் வந்தே நவாஸை தொடர்ந்து தொடர்பு கொண்டோம். அவர் நம் லைனுக்கு வரவே இல்லை. நாம் அனுப்பிய குறுந்தகவலுக்கும்பதிலில்லை. “நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்..” என்று கொதிநிலையில் பேசிய ராமமூர்த்தி,“நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டேன்..”என்றார். “தேர்தல் அதிகாரிகள் இப்படியா விலை போவார்கள்? ஆளும்கட்சியினருக்கு சாதகமாக இத்தனை பகிரங்கமாகவா நடந்துகொள்வார்கள்? இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்று முழுமையாக நம்பி தேர்தலில் போட்டியிட்டேன். அதுதான் நான் செய்த தவறு.”என்று புலம்பி அழுதார்.
 

இதுபோன்ற வாக்கு எண்ணிக்கை குளறுபடிகள் தமிழகம் முழுவதும் நடந்துள்ளன. பல இடங்களில் பாதிப்புக்கு ஆளானவர்களை‘சரிக்கட்டி’சமாதானப்படுத்தி உள்ளனர்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Judgment postponed in Nirmala Devi case

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்காக மாணவிகளிடம் பேரம் பேசியதாக கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் அவருக்கு உதவியதாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பின்னர் முருகன், கருப்பசாமி ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருந்தது.

இத்தகைய சூழலில் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்துவந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அதே சமயம் நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

உடல்நலக்குறைவால் நிர்மலா தேவி ஆஜராக முடியவில்லை என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி பகவதி அம்மாள், “நிர்மலா தேவி 29 ஆம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும். இந்த வழக்கில் 29 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும்” எனத் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார். 

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.