விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் to மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அழகாபுரி அருகே பாறைப்பட்டி பகுதியில் 2 இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் காவலர் கார்த்திக் பாண்டியன் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.