Skip to main content

திருநீறு பூசி அமைச்சர் மிரட்டியும் அலட்சியமோ அலட்சியம்!- துரோகத்தால் வீழ்ந்த விருதுநகர் மாவட்ட அதிமுக!

Published on 14/01/2020 | Edited on 14/01/2020

விருதுநகர் மாவட்டத்தில், மாவட்ட பஞ்சாயத்துகளில் 65 சதவீத இடங்களில் வெற்றி பெற முடிந்த அதிமுக, ஒன்றியங்களுக்கான தேர்தலில் வெறும் 11 சதவீத வெற்றியே பெற்றது. இரட்டை இலை வாக்காளர்களை அமமுக கவர்ந்தது, அதிமுகவில் இருந்தபடியே ஜாதி அடிப்படையில் ஒரு பிரிவினர் எதிராகச் செயல்பட்டது, பல ஒன்றியங்களில் வேட்பாளர் தேர்வில் கட்சியினரிடம் ஏற்பட்ட அதிருப்தி என எல்லாம் சேர்ந்து, ‘அதிமுக பெல்ட்’ எனச் சொல்லப்படும் விருதுநகர் மாவட்டத்தில், ஒன்றியங்களுக்கான தேர்தலில் திமுகவுக்கு 83 சதவீத வெற்றியை பெற்றுத் தந்திருக்கிறது.

இந்த மாவட்டத்தில் அதிமுக இன்னும்‘ஸ்ட்ராங்’ஆகத்தான் இருக்கிறது என்பதற்கு 20-க்கு 20-ல் வென்ற வெம்பக்கோட்டை ஒன்றியத்தை உதாரணமாகச் சொல்லலாம். தமிழகத்திலேயே, 100 சதவீத வெற்றி பெற்ற ஒரே ஒன்றியம் இதுதான். இந்த ஒன்றியத்தில், சாத்தூர் அதிமுக எம்.எல்.ஏ. ராஜவர்மன் காட்டிய தீவிரத்தை, மற்ற ஒன்றியங்களில் யாரும் பெரிதாகக் கடைப்பிடிக்கவில்லை. 

VIRUDHUNAGAR DISTRICT ADMK  PARTY LEADER MINISTER RAJENDRA BALAJI


தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக, உறுப்பினர் எண்ணிக்கை அடிப்படையில் திமுகவுக்குப் போகவேண்டிய ஒன்றியங்களை, கவுன்சிலர் தலைகளுக்கு விலைபேசி கைப்பற்ற முயற்சித்தது ஆளும்கட்சி. அது சரிவர நடக்காததால், வத்திராயிருப்பு, நரிக்குடி, ராஜபாளையம், சாத்தூர் ஆகிய நான்கு ஒன்றியங்களில் ஆட்களை ஏவிவிட்டு ரகளை செய்து, திட்டமிட்டு தேர்தலை தள்ளிவைக்கச் செய்தனர். நரிக்குடியிலோ, மணல் மாபியா என்று சொல்லப்படும் அம்மன்பட்டி ரவிச்சந்திரன் ஏற்பாட்டில், கல்வீச்சு, ஒன்றிய அலுவலகம் சூறை என பேயாட்டம் ஆடி, டி.எஸ்.பி. வெங்கடேசனின் கையை  அரிவாளால் கீறியும் விட்டனர்.  

VIRUDHUNAGAR DISTRICT ADMK  PARTY LEADER MINISTER RAJENDRA BALAJI



“அது ரொம்ப துடியான சாமி.. சக்தி வாய்ந்த கோயில்ல இருந்து திருநீறு வாங்கிட்டு வந்திருக்கேன்.. பூசிக்கங்க.. ஓட்டு போடும்போது கட்சிக்கு எதிரா வேலை பார்த்தீங்கன்னா.. கை, கால் வெளங்காம போயிரும்..”என்று குற்றாலத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த கவுன்சிலர்களிடம் மிரட்டல் அஸ்திரத்தை எடுத்துவிட்ட விருதுநகர் அதிமுக மாவட்ட செயலாளரும், அமைச்சருமான ராஜேந்திரபாலாஜி, விருதுநகரில் வைத்து கவுன்சிலர்களிடம் “யாராரு என்னென்ன பண்ணுறீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். தேர்தலப்ப ஏதாச்சும் கோல்மால் பண்ணுனீங்கன்னா.. நீங்க சேர்த்து வச்சிருக்கிற சொத்து எல்லாத்தயும்  எழுதி வாங்கிருவேன்..” என்று கோபாவேசம் காட்டியிருக்கிறார். ஆனாலும், தனது சொந்தத் தொகுதியிலேயே, சிவகாசி ஒன்றியத்தை திமுகவிடம் பறிகொடுத்திருக்கிறார். 


குடும்பங்களின் பிடியில் ஒன்றியங்கள்!

“கட்சிக்காக உழைச்சேன்; போராடியிருக்கேன்; ஜெயிலுக்குப் போனேங்கிறதெல்லாம் சீட் கொடுக்கிறதுக்கான தகுதியில்ல. எப்படி சம்பாதிச்சாலும் கவலையில்ல. வீட்டுல மூட்டை மூட்டையா பணம் வச்சிருக்கியா? எதிர்ல நிக்கிறவனைக் காட்டிலும் நெறய பணம் செலவழிப்பியா?”என்று கேட்டு, வேட்பாளரின் வெயிட்டைப் பார்த்து, சீட் தந்ததாலோ என்னவோ, அதிமுகவிலும் திமுகவிலும் குறிப்பிட்ட குடும்பத்தினரின் கைகளுக்கு சில ஒன்றியங்கள் போயிருக்கின்றன.

VIRUDHUNAGAR DISTRICT ADMK  PARTY LEADER MINISTER RAJENDRA BALAJI




திமுக வசமான சிவகாசி ஒன்றியத்தில், தலைவர் நாற்காலியில் முத்துலட்சுமியையும் துணைத் தலைவர் இருக்கையில் அவருடைய கணவர் விவேகன்ராஜையும் கைகோர்த்து அமரச் செய்திருக்கிறது இந்தத் தேர்தல். நரிக்குடி ஒன்றியத்தில் 14- வது வார்டு கவுன்சிலர் ரவிச்சந்திரன். அவருடைய மனைவி அங்காள ஈஸ்வரி அதே ஒன்றியத்திலுள்ள வேளானூரணி ஊராட்சி மன்றத் தலைவர். நரிக்குடி 13- வது வார்டு திமுக கவுன்சிலர் குமராயி, 12- வது வார்டு அதிமுக கவுன்சிலர் இந்திராணி ஆகிய இருவரும் ரவிச்சந்திரனின் குடும்பச் சொந்தங்களே. 


குப்புறக் கவிழ்த்த குடியுரிமைச் சட்டம்!

எப்போதும், இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்தான், நரிக்குடி ஒன்றியத்தில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்று, 10- வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் ஆவார். அந்த உறுப்பினர், ஆளும் கட்சியாக எந்தக் கட்சி உள்ளது? நரிக்குடி ஒன்றியத்தில் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் தலைவர் பொறுப்பை ஏற்பார்கள்? என்றெல்லாம் சீர்துக்கிப் பார்த்து, அந்தக் கட்சிக்கு ஆதரவு தருவது வழக்கமான நடைமுறையாக இருந்தது. குடியுரிமைச் சட்டத்துக்கு அதிமுக தந்த ஆதரவால் எரிச்சலாகி, இந்த தடவை வெற்றிபெற்ற முகமது கோஸ், தங்கள் சமுதாயத்தினரோடு ஆலோசனை நடத்தி, திமுக ஆதரவு நிலை எடுத்தார். சுயேச்சை வேட்பாளரான முகமது கோஸ் எடுத்த இந்த முடிவினால்தான், நரிக்குடி யூனியன் அலுவலகத்தில் அதிமுகவினர்  தகராறு செய்தனர். தேர்தலும் ஒத்தி வைக்கப்பட்டது.  


ஆளும் கட்சியினருக்கு அடிபணிந்து சேவகம்!

‘எதிர் முகாமில் உள்ள கவுன்சிலர்களை இழுக்க வேண்டும். அதற்கு வசதியாக தேதி குறிப்பிடாமல் தேர்தலை ஒத்தி வையுங்கள்.’ என ஆளும்கட்சியினர் போட்ட உத்தரவுக்கு, அப்படியே அடி பணிந்தார்கள், இந்த மாவட்டத்தில் நான்கு ஒன்றியங்களில் தேர்தலை நடத்திய அதிகாரிகள்.

VIRUDHUNAGAR DISTRICT ADMK  PARTY LEADER MINISTER RAJENDRA BALAJI


ராஜபாளையம் ஒன்றிய அலுவலகத்தில் தேர்தலை நடத்திய அதிகாரி செல்வகுமாருக்கு, திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டு, ஆம்புலன்ஸில் அவரைத் தூக்கிச் சென்ற கூத்தெல்லாம் நடந்தது. தேர்தல் தேதி குறித்து மறு அறிவிப்பு செய்வதற்குள், ஆளும் கட்சியினர் போட்ட திட்டத்தை நிறைவேற்றும் விதமாக, நரிக்குடி ஒன்றிய 4- வது வார்டு திமுக கவுன்சிலர் போஸ், அதிமுக ஆதரவு நிலை எடுத்திருக்கிறார். 


அதிமுகவினர் ஆட்டத்தை வேடிக்கை பார்த்த திமுகவினர்!

இந்தத் தேர்தலில் பல ஒன்றியங்களில், அதிமுகவினர் ஆடிய ஆட்டத்தை விருதுநகர் மாவட்ட திமுகவினர், தள்ளிநின்று வேடிக்கை மட்டுமே பார்த்த நிலையில், அக்கட்சியின் மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். “தோல்வி பயத்தால் அதிமுகவினர் செய்த ரகளையைக் காரணம் காட்டி, தேர்தலை ரத்துச் செய்தது கண்டனத்துக்குரியது.

VIRUDHUNAGAR DISTRICT ADMK  PARTY LEADER MINISTER RAJENDRA BALAJI


இந்த மாவட்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அறிவுறுத்தலின்படியே, யூனியன் தேர்தலில் ரகளை நடந்தது. இந்த மறைமுகத் தேர்தலுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும், போலீஸ் அதிகாரியும், காவல்துறை நிர்வாகமும்  உரிய பாதுகாப்பு அளிக்க இயலவில்லை என்று தெரிவிப்பது வியப்பாகவும், வேதனையாகவும் இருக்கிறது.”என்றார்.  

காலம் திரும்பும் என திமுக காத்திருக்கிறது போலும்!  


 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.