Skip to main content

கள்ளப்பட்டாசு வீட்டில் தயாரித்ததை அறியாத சிறுவனும் பலி! - மூவரை காவு வாங்கிய வெடி விபத்து!

Published on 21/06/2021 | Edited on 21/06/2021

 

A boy who did not know that counterfeit firecrackers

 

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தாலுகாவில் உள்ள விஜயகரிசல்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக வீடுகளில் பட்டாசு தயாரித்துவருவது காலங்காலமாக நடந்துவருகிறது. விருதுநகர் மாவட்ட வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையினர், காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் என அனைத்து துறையினருக்கும் இந்த விவகாரம் நன்றாகவே தெரியும். 

 

ஆனாலும், உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகளில் விதிமீறலைக் காரணம் காட்டி லஞ்சம் வாங்குவதிலேயே குறியாக இருக்கும் அதிகாரிகள், வீடுகளில் பட்டாசு தயாரிப்பவர்களைக் கண்டுகொள்வதில்லை. அரசியல் கட்சிகளின் ஓட்டு வங்கிக்கு சேதாரமாகிவிடும் என்பதால், அரசியல்வாதிகளின் ஆசியும் இவர்களுக்கு உண்டு. வீடுகளில் பட்டாசு தயாரிக்கும்போது, வெடி விபத்து நடந்து உயிரிழப்புகள் ஏற்படும்போதெல்லாம், இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வரும்.  

 

இன்று (21.06.2021) காலை 8.30 மணியளவில், சாத்தூர் – தாயில்பட்டியில் உள்ள கலைஞர் காலனியில் வசிக்கும் சூர்யா என்பவர், தன்னுடைய வீட்டில் சட்டவிரோத பட்டாசுத் தயாரிப்பில் ஈடுபட்டபோது வெடி விபத்து ஏற்பட்டது. அதனால், அவருடைய வீடு உட்பட பக்கத்திலுள்ள இரண்டு வீடுகளும் தரைமட்டமானது. வெடி பொருளில் உராய்வு ஏற்பட்டதே விபத்துக்கு காரணம் என்று வழக்கம்போல் சொல்லப்படுகிறது.

 

இந்த விபத்தில் பட்டாசுத் தொழிலாளர்கள் கற்பகம், செல்வமணி மற்றும் வீட்டில் இருந்த 5 வயது சிறுவன் சல்மான் ஆகியோர் உயிரிழந்தனர். வீட்டு உரிமையாளர் சூர்யா மற்றும் இரண்டு தொழிலாளர்கள் படுகாயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த விபத்து குறித்து வெம்பக்கோட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர். 

 

விருதுநகர் மாவட்டத்தில், லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வாழ்வளித்துவரும் பட்டாசுத்தொழில், கடந்த சில ஆண்டுகளாக சட்டரீதியாக பல சோதனைகளைச் சந்தித்துவருகிறது. இந்நிலையில், இதுபோன்ற விபத்துகள் வேறு ஏற்பட்டு இத்தொழிலுக்கு மேலும் சோதனையை ஏற்படுத்தியுள்ளன. 

 

சல்மான் என்ற ஐந்து வயது சிறுவனுக்குத் தெரியுமா, தன் வீட்டில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கிறார்கள் என்பது. அநியாயமாக ஒரு பாலகன் உயிரையும் பறித்துவிட்டது  இந்த விபத்து!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Judgment postponed in Nirmala Devi case

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்காக மாணவிகளிடம் பேரம் பேசியதாக கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் அவருக்கு உதவியதாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பின்னர் முருகன், கருப்பசாமி ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருந்தது.

இத்தகைய சூழலில் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்துவந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அதே சமயம் நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

உடல்நலக்குறைவால் நிர்மலா தேவி ஆஜராக முடியவில்லை என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி பகவதி அம்மாள், “நிர்மலா தேவி 29 ஆம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும். இந்த வழக்கில் 29 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும்” எனத் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார். 

Next Story

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’ - பரபரப்பு போஸ்டர்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Take action against the BJP executives poster

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமங்கலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் பாஜக நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், “நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி குறித்தும், பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி,  மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் இவர்கள் மீது பா.ஜ.க. மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக திருமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.