virudhunagar incident

Advertisment

விருதுநகர் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் தொடர்ச்சியாக கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கானது தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹரிஹரன், ஜுனைத் அகமது, பிரவீன், மாடசாமி மற்றும் பள்ளி மாணவர்கள் நான்கு பேர் என எட்டு பேர் கைதுசெய்யப்பட்டு பள்ளி மாணவர்கள் கூர்நோக்கு இல்லத்திலும் மற்ற நான்கு பேர் மதுரை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக கடந்த இருந்த தினங்களாக பாதிக்கப்பட்ட மாணவியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்திவந்த நிலையில், தற்போது ஹரிஹரன், ஜுனைத் அகமது, பிரவீன், மாடசாமி ஆகிய ஏழு பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்துவருகின்றனர்.

இந்த விசாரணையில் ஹரிஹரனுக்கு சொந்தமான மருந்து குடோனில் இருந்து போதை மாத்திரை மற்றும் போதை ஊசிகள் உள்ளிட்ட போதை வஸ்துகளை சிபிசிஐடி போலீசார் கைப்பற்றியுள்ளனர்.